எந்தவொரு தமிழ் இயக்குநருக்கும் கிடைக்காத கௌரவம்.; மாஸ் காட்டும் மாரி செல்வராஜ்

எந்தவொரு தமிழ் இயக்குநருக்கும் கிடைக்காத கௌரவம்.; மாஸ் காட்டும் மாரி செல்வராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் இதுவே என் கடைசி படம் என அறிவித்த உதயநிதியின் ‘மாமன்னன்’ படம் இன்று ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

உதயநிதி தயாரித்து இருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

இதற்கு இன்னொரு முக்கிய காரணம் மாரி செல்வராஜ் அமைத்த கூட்டணி தான். ஏ ஆர் ரகுமான் இசையில் பகத் ஃபாஸில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பல திறமையான கலைஞர்கள் இந்த படத்தில் இணைந்திருந்தனர்.

இதற்கு முன் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘கர்ணன்’ ஆகிய இரு படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

முக்கியமாக இவரது படத்தில் பேசப்படும் ஜாதி அரசியலும் சமூக நீதியும் பட்டியல் இனத்தவர் மத்தியில் பெரும் எழுச்சியை உருவாக்கியது.. இதனால் மாரி செல்வராஜுக்கும் தனி ரசிகர் வட்டம் உருவானது.

இந்த நிலையில் இன்று ‘மாமன்னன்’ ரிலீஸை முன்னிட்டு நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் திரையரங்கில் உதயநிதிக்கு நிகராக மாரி செல்வராஜுக்கும் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்களுக்கு ரசிகர்கள் கட் அவுட் வைப்பதை பார்த்திருக்கிறோம்.

தற்போது தான் முதன்முறையாக ஒரு படத்தின் இயக்குனருக்கு கட் அவுட் வைக்கப்பட்டிருப்பது திரையுலகினர் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

மாரி செல்வராஜ்

Mari Selvaraj fans made huge cut out for Maamannan release

ஹரீஸ் கல்யாண் பிறந்த நாளுக்கு வாழ்த்திய LGM – Diesel – Parking Team

ஹரீஸ் கல்யாண் பிறந்த நாளுக்கு வாழ்த்திய LGM – Diesel – Parking Team

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு ‘பியார் பிரேமா காதல்’, ‘தாராள பிரபு’ போன்ற பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண்.

இவர் தற்போது ‘டீசல்’ படத்தில் நடித்து வருகிறார்.

“டீசல்” திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி வருகிறார்.

திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இப்படத்தை ‘எஸ்.பி சினிமாஸ் எண்டெர்டைன்மெண்ட்’ தயாரிக்கிறது.

இப்படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்க, வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று (29-06-2023) பிறந்தநாள் கொண்டாடி வரும் ஹரிஷ் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்து ‘டீசல்’ படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், ஹரிஷ் கல்யாண் தற்போது லெட்ஸ் கெட் மேரீட், நூறு கோடி வானவில், லப்பர் பந்து, பார்க்கிங் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேற்கண்ட அனைத்து படங்களும் ஹரிஷ் கல்யாணை வாழ்த்தி போஸ்டர்கள் வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LGM Diesel Parking Team said birthday wishes Harish Kalyan

உலகில் எந்த ஹீரோவும் செய்யாததை செய்த ‘மாமன்னன்’.; உதயநிதியின் உயர்ந்த உள்ளம்

உலகில் எந்த ஹீரோவும் செய்யாததை செய்த ‘மாமன்னன்’.; உதயநிதியின் உயர்ந்த உள்ளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதில் உதயநிதி, பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வெளிய ஆவதற்கு முன்பே சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

மேலும் இந்த படம் வெளியானால் ஜாதி ரீதியான மோதல்கள் வெடிக்கும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இந்த வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.

இந்த நிலையில் இன்று ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘மாமன்னன்’.

இந்தப் படத்தின் டைட்டில் கார்டில் எந்த நடிகரும் செய்யாத ஒன்றை முதன் முறையாக செய்து காட்டி இருக்கிறார் உதயநிதி.

பொதுவாக ஒரு படத்தின் டைட்டிலை போட்ட பிறகு நாயகன் பெயர்.. நாயகி பெயர்.. முக்கிய நட்சத்திரங்கள் பெயர்கள் டைட்டில் காடுகளில் ஒவ்வொன்றாக வரும்.

இந்த படத்தில் உதயநிதி நாயகனாக நடித்திருந்தாலும் முதலில் வடிவேலு பெயர்.. பின்னர் பகத் பாசில்.. அதன் பின்னர் நாயகி கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரின் பெயர்களை திரையிட்ட பிறகே உதயநிதியின் பெயர் டைட்டில் கார்டில் வந்தது.

ஒரு அறிமுக நடிகரின் புதிய படம் என்றாலும் அதில் பல சீனியர் நடிகர்கள் நடித்திருந்தாலும் நாயகனின் பெயர் தான் முதலில் திரையிடப்படும்.

இந்த நிலையில் உதயநிதி இதுவரை 15 படங்களில் நாயகனாக நடித்திருந்தும் கூட தன்னுடைய பெயரை முதலில் திரையிடாமல் சீனியர்களுக்கு உதயநிதி கொடுத்த மரியாதை பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

இது உதயநிதியின் உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Udhayanidhi made title card magic in Maamannan

கூடுதல் தகவல்..

மாரி செல்வராஜ் இந்த டைட்டில் கார்டு விஷயத்தை மறுத்த போதும் அதில் உறுதியாக இருந்து உதயநிதி ஸ்டாலின் தான் இதை செய்ய சொன்னார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இனி அரசியலில் முழு நேரமாக ஈடுபட உதயநிதி முடிவு செய்திருப்பதால் தற்போதைக்கு இதுதான் அவரது கடைசி படம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘சந்திரமுகி 2’-யின் அழகிய தரிசனம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘சந்திரமுகி 2’-யின் அழகிய தரிசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’.

இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார்.

ஹாரர் திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி.கே. எம். தமிழ்குமரன் தலைமை வகிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தியன்று‌ தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. எனவே அதற்கு முந்தைய வாரம் செப்டம்பர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

சந்திரமுகி 2

Chandramukhi 2 will be release on Vinayagar Chathurthi

‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் செம அப்டேட் கொடுத்த அருள்நிதி டீம்

‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் செம அப்டேட் கொடுத்த அருள்நிதி டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’.

இப்படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

7 ஆண்டுகளுக்கு பிறகு ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இப்படத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து மற்றும் விஜய் சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி 61 நாட்களில் ஓசூர், சென்னை மற்றும் ஆந்திரா மாநில எல்லைப் பகுதிகளில் நடைபெற்று தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

arulnithi’s demonte colony 2 movie full shooting wrapped up

‘தங்கலான்’ ஷூட் அப்டேட்.: அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே.?

‘தங்கலான்’ ஷூட் அப்டேட்.: அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ நடித்து வருகிறார்.

இப்படத்தில் பார்வதி திருவோடு, மாளவிகா மோகனன், பசுபதி மாசிலாமணி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது.

சிறிது காலம் ஓய்வுக்கு தற்போது மீண்டும் ‘தங்கலான்’ படப்பிடிப்பில் விக்ரம் இணைந்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் சென்னை படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மதுரையில் ஒரு வாரம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இத்துடன் ‘தங்கலான்’ படப்பிடிப்பு நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

Vikram’s ‘Thangalaan’ races to the final stage of shooting

More Articles
Follows