‘மாமன்னன்’ வழக்கு : 2 நாளில் மறந்துடுவாங்க.. பிரச்சினையை போலீஸ் பாத்துப்பாங்க.; ஐகோர்ட் ஆர்டர்

‘மாமன்னன்’ வழக்கு : 2 நாளில் மறந்துடுவாங்க.. பிரச்சினையை போலீஸ் பாத்துப்பாங்க.; ஐகோர்ட் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி தயாரித்து நடித்துள்ள ‘மாமன்னன்’ படம் நாளை ஜூன் 29ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு தடை கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்…

”மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், தற்போது மாமன்னன் போன்ற குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த படங்களை எடுத்து வருகிறார்.

கடைசியாக இவர் எடுத்த கர்ணன் படம் கொடியன்குளம் கிராமத்தில் நடைபெற்ற ஜாதி கலவர சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காத்தப்ப புலிதேவன் என்பவரை மாமன்னன் என அழைப்பார்கள். அவரை தவறாக சித்தரிக்கும் வண்ணம் இப்படம் அமைந்துள்ளது.

மேலும் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள உதயநிதி, தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் உள்ளார். உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் நடித்துள்ளார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 173 (ஏ) க்கு எதிராக உள்ளது.

இப்படம் வெளிவந்தால் இரு வேறு சமூகத்திற்கு இடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, 29.06.2023 அன்று மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், இப்படத்தை திரையிலோ, எந்த ஓடிடி தளம் போன்ற வேறு ஏதேனும் தளத்திலோ ஒளிபரப்பவும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.”

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்…”இந்த மனுவை அவசர வழக்காக விசாரணை செய்ய தேவையில்லை.

திரைப்படத்துக்கு திரைப்பட தணிக்கை துறை அனுமதி வழங்கிய பிறகு நீதிமன்றம் தலையிட முடியாது, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையினர் பார்த்து கொள்வார்கள். திரைப்படம் மக்கள் பார்க்கவே.

இரண்டு நாட்களில் அதனை மறந்து விடுவார்கள். பேச்சு உரிமை கருத்து உரிமை அனைவருக்கும் உள்ளது” எனத் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்

High Court judgement in Maamannan movie ban case

எப்படி இருக்கிறார் ‘மாமன்னன்’.? 2 தேசிய விருதுகளை வென்ற நடிகரின் முதல் விமர்சனம் இதோ..

எப்படி இருக்கிறார் ‘மாமன்னன்’.? 2 தேசிய விருதுகளை வென்ற நடிகரின் முதல் விமர்சனம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதில் உதயநிதி, பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இந்தப் படத்தை 2 தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் பாராட்டி தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

அதில்…

‘மாமன்னன்’ படம் மிகுந்த உணர்ச்சிபூர்வமாக இருக்கின்றது.

வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பு மிக அபாரமாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

இறுதியாக ‘இசைப்புயல்’ஏ ஆர் ரகுமான் இசை அருமை எனவும் கூறியிருக்கிறார்.

‘மாமன்னன்’ படத்திற்கு முன் மாரி செல்வராஜ் இயக்கிய ‘கர்ணன்’ படத்தில் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maamannan movie review by Actor Dhanush

மொய்தீன் பாய் பராக்.; ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் ஐஸ்வர்யா

மொய்தீன் பாய் பராக்.; ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அதேசமயம் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்து வருகின்றனர்.்ஏ ஆர் ரகுமான் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

மொய்தீன் பாய் என்ற கேரக்டர் ரஜினிகாந்த் நடித்த வருகிறார்.்இதன் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது

இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி வருகிறார் என கூறப்பட்டாலும் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

முதலில் மும்பையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினி. அங்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேலாக கலந்து கொண்டார். அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்வும் ரஜினியும் கலந்து கொண்ட சூட்டிங் புகைப்படங்கள் வெளியானது.

இதன் பிறகு பாண்டிச்சேரியில் ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் பங்கேற்றார் ரஜினிகாந்த்.

அங்கு கிட்டத்தட்ட பத்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது புதுச்சேரி அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் ரஜினியை சந்தித்த புகைப்படங்கள் வெளியானது.

இதனையடுத்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ‘லால் சலாம்’ ஷூட்டிங் நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென தற்போது திருவண்ணாமலையில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

அங்கும் கிட்டத்தட்ட ஒரு வாரம் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் தினம் தினம் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் மட்டுமே வருவார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது 1 மாதத்திற்கு மேலாக இதில் பங்கேற்று நடித்து வருகிறார்.

எனவே அவரின் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 45+ நிமிடங்கள் வரை நீடிக்கும் என தகவல்கள் வந்துள்ளன.

இந்த செய்தி கண்டிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையல்ல.

Aishwaryas Surprise for Rajini fans in Laal Salaam movie

தெலுங்கானாவை தெறிக்கவிடும் ‘லியோ’..; விஜய்யை காண தாறுமாறாக குவித்த ரசிகர்கள்

தெலுங்கானாவை தெறிக்கவிடும் ‘லியோ’..; விஜய்யை காண தாறுமாறாக குவித்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை லோகேஷ் கனகராஜ் விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.

அனிருத் இசையமைத்து இந்த படத்தில் இருந்து இடம்பெற்ற ‘நா ரெடி…’ என்ற பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

இந்தப் பாடல் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் லோகேஷ்.

அங்கு விஜய்யை கண்டதும் தமிழ் ரசிகர்களும் மற்றும் தெலுங்கு ரசிகர்களும் அதிக அளவில் குவிந்தனர்்

எனவே அவர்களைப் பார்த்து விஜய் வணக்கம் சொல்லி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விஜய்.

Vijay fans crowd at Leo shooting spot at Telungana

‘விடாமுயற்சி’ என்னாச்சு.? வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் அஜித்.; ரசிகர்கள் அப்செட்.!

‘விடாமுயற்சி’ என்னாச்சு.? வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் அஜித்.; ரசிகர்கள் அப்செட்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துணிவு’ படத்திற்குப் பிறகு ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க உள்ளார் அஜித். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

மகிழ்திருமேனி இயக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் தன்னுடைய பைக் பயணங்களை முடித்துவிட்டு தற்போது வெளிநாட்டில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகர் அஜித்.

தற்போது அங்குள்ள ஒரு புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டு பின்னர் திடீரென அவரை நீக்கியது படக்குழு.

அதன் பின்னர் அஜித் பைக் பயணம் மேற்கொண்டார். அஜித் படத்தின் அப்டேட்டை அடிக்கடி கேட்டு கேட்டு ரசிகர்கள் அப்செட்டான நிலையில் தற்போது ‘விடாமுயற்சி’ சூட்டிங் தொடங்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajith fans upset with Vidaamuyarchi shooting delay

பிரபாஸுக்கு கமல் வில்லன்.; கமலுக்கு சிம்பு வில்லன்.; பட்டைய கிளப்பும் ஸ்டார்ஸ்.!

பிரபாஸுக்கு கமல் வில்லன்.; கமலுக்கு சிம்பு வில்லன்.; பட்டைய கிளப்பும் ஸ்டார்ஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான மாற்றங்களை நாம் பார்த்து வருகிறோம்.

ஒரு பிரபல ஹீரோ நடிக்கும் படத்தில் மற்றொரு முன்னணி நடிகர் நடிக்க தயங்குவார். இதற்கு முக்கிய காரணம் அவர்களிடையே ஈகோ பிரச்சனை தான.

ஆனால் இதை தற்போது உடைத்திருந்து வருகின்றனர் முன்னணி ஹீரோக்கள்.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அதுபோல விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திலும் ஒரு ஹீரோவான விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.

கமலின் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க முக்கிய வேடங்களில் சூர்யா, பகத்பாசில் நடித்திருந்தனர்.

சில தினங்களுக்கு முன் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சனுக்கு வில்லனாக கமல் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கமல் படத்தில் சிம்பு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மணிரத்னம் இயக்க உள்ள கமலின் 234 வது படத்தில் சிம்பு தான் மெயின் வில்லன் என கூறப்படுகிறது.

மேலும் இது சிம்புவின் 50 ஆவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்…

சிம்புவின் 48வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பல இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Simbu plays villain in his 50th movie opposite to Kamal

More Articles
Follows