தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் எஸ் ஜே சூர்யா, ராஜ்கிரண், சீமான் உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் மாரிமுத்து.
சிம்பு நடித்த இயக்கிய ‘மன்மதன்’ படத்தில் இவர் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.
இவர் இயக்குனராக சில படங்களை இயக்கியுள்ளார்.
‘கண்ணும் கண்ணும்’ என்ற படத்தை இவர் இயக்கியுள்ளார்.
மேலும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களின் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு தற்போது 57 வயதாகிறது.
‘பரியேறும் பெருமாள்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். அந்த படத்தில் வில்லன் விநாயகத்தின் உதவியாளராக இவர் நடித்திருந்தார்.
மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இவர் ஏற்ற குணசேகரன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகும்.
சமீபத்தில் இவர் ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜோசியத்திற்கு எதிராக பேசினார். அப்போதே நான் கடவுளை நம்பாத பகுத்தறிவாளன் என பேசினார்.
அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இன்றளவும் வந்து கொண்டிருக்கின்றன.
இன்று காலை 8.30 மணியளவில் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மயக்கம் போட்டு விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அவரே சுதாரித்துக் கொண்டு காரை மருத்துவமனைக்கு ஓட்டி சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
இன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்கள் பார்வைக்காக அஞ்சலி செலுத்த அவரது உடல் வைக்கப்படும் என சொல்லப்படுகிறது.
‘எதிர்நீச்சல்’ என்ற டிவி சீரியலில் தனக்கு அடிக்கடி நெஞ்சு வலி வருவதாகவும் தான் விரைவில் இறந்து விடுவதாகவும் இவர் ஒரு வசனம் பேசி இருப்பார். அந்த வீடியோவும் தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் மாரிமுத்து தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தில் நடித்த விவேக் மற்றும் நடிகர் நெடுமுடி வேணு ஆகியோர் இறந்துவிட்டனர். தற்போது மூன்றாவதாக ஒரு நடிகர் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வந்த வேளையில் இறந்துவிட்டார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. நடிகர் மாரிமுத்து க்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும் அகிலன் என்ற மகனும் ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.
Jailer Edhirneechal actor Marimuthu passes away