JUST IN சிம்பு உதவியாளரும் ‘ஜெயிலர்’ பட & ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகர் மாரிமுத்து மரணம்.; வாழ்க்கை குறிப்பு

JUST IN சிம்பு உதவியாளரும் ‘ஜெயிலர்’ பட & ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகர் மாரிமுத்து மரணம்.; வாழ்க்கை குறிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் எஸ் ஜே சூர்யா, ராஜ்கிரண், சீமான் உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் மாரிமுத்து.

சிம்பு நடித்த இயக்கிய ‘மன்மதன்’ படத்தில் இவர் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவர் இயக்குனராக சில படங்களை இயக்கியுள்ளார்.

‘கண்ணும் கண்ணும்’ என்ற படத்தை இவர் இயக்கியுள்ளார்.

மேலும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களின் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு தற்போது 57 வயதாகிறது.

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். அந்த படத்தில் வில்லன் விநாயகத்தின் உதவியாளராக இவர் நடித்திருந்தார்.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இவர் ஏற்ற குணசேகரன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகும்.

சமீபத்தில் இவர் ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜோசியத்திற்கு எதிராக பேசினார். அப்போதே நான் கடவுளை நம்பாத பகுத்தறிவாளன் என பேசினார்.

அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இன்றளவும் வந்து கொண்டிருக்கின்றன.

இன்று காலை 8.30 மணியளவில் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மயக்கம் போட்டு விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவரே சுதாரித்துக் கொண்டு காரை மருத்துவமனைக்கு ஓட்டி சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

இன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்கள் பார்வைக்காக அஞ்சலி செலுத்த அவரது உடல் வைக்கப்படும் என சொல்லப்படுகிறது.

‘எதிர்நீச்சல்’ என்ற டிவி சீரியலில் தனக்கு அடிக்கடி நெஞ்சு வலி வருவதாகவும் தான் விரைவில் இறந்து விடுவதாகவும் இவர் ஒரு வசனம் பேசி இருப்பார். அந்த வீடியோவும் தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் மாரிமுத்து தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தில் நடித்த விவேக் மற்றும் நடிகர் நெடுமுடி வேணு ஆகியோர் இறந்துவிட்டனர். தற்போது மூன்றாவதாக ஒரு நடிகர் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வந்த வேளையில் இறந்துவிட்டார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. நடிகர் மாரிமுத்து க்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும் அகிலன் என்ற மகனும் ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.

மாரிமுத்து

Jailer Edhirneechal actor Marimuthu passes away

இந்தியாவிற்கு பாரத் என்ற புதிய பெயர்.; ‘லால் சலாம்’ பட நடிகர் எதிர்ப்பு

இந்தியாவிற்கு பாரத் என்ற புதிய பெயர்.; ‘லால் சலாம்’ பட நடிகர் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷால் தமிழில் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘குள்ளநரி கூட்டம்’, ‘நீர்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’, ‘இன்று நேற்று நாளை’, ‘ராட்சசன்’, ‘எஃப்ஐஆர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் கடைசியாக ‘கட்டா குஸ்தி’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் ‘பாரத்’ பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “நாட்டின் பெயரை மாற்றுவது எப்படி பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும்? இது மிகவும் விசித்திரமாக உள்ளது. இந்தியா எப்போதும் ‘பாரத்’ ஆகவே இருந்தது. நம் நாட்டை இந்தியா என்றும் பாரத் என்றும் நாம் அறிவோம். திடீரென ஏன் இந்தியா என்ற பெயரை துறக்க வேண்டும்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

actor vishnu vishal raised questions amidst the discussion of renaming india

‘கேங்ஸ்’ படத்திற்காக ரஜினி மகளுடன் இணையும் நடிகர் அசோக் செல்வன்

‘கேங்ஸ்’ படத்திற்காக ரஜினி மகளுடன் இணையும் நடிகர் அசோக் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக 40 வருடங்களாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் என்னதான் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தாலும் தன் மகள்களை நடிப்பு துறையில் இறக்கி விடவில்லை.

மாறாக ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகிய இருவரையும் இயக்குனர்களாக இயங்க அனுமதித்துள்ளார்.

மூத்த மகள் ஐஸ்வர்யா ‘3’ & ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார்.

கேங்ஸ்

ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா அவர்கள் ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ மற்றும் தனுஷ் நடித்த ‘விஐபி 2’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

இதில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க நோவா ஆபிரஹாம் இயக்குகிறார்.

இத்தொடருக்கு ‘கேங்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளனர். இதன் படப்பிடிப்புடன் பூஜையுடன் தொடங்கியது.

கேங்ஸ்

Soundarya Rajini and Ashok Selvan teamsup for GANGS

இப்படி செஞ்சா நல்ல படங்கள் மக்களை எப்படி சேரும்..? சேரன் ஆதங்க பதிவு

இப்படி செஞ்சா நல்ல படங்கள் மக்களை எப்படி சேரும்..? சேரன் ஆதங்க பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சேரன் நடிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’.

இந்த படத்தில் ஸ்ரீ பிரியங்கா, வேலராமமூர்த்தி, லால், அருள்தாஸ், தீப்ஷிகா, சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.்இந்த படம் நாளை செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நடிகர் சேரன் இந்த படத்தின் வெளியீடு குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

திரையரங்க உரிமையாளர்களுக்கு இயக்குனர்/நடிகர் சேரன் வேண்டுகோள்:*

தமிழ்க்குடிமகன் –
நல்ல திரைப்படம் என பார்த்த நண்பர்கள் பாராட்டுகிறார்கள்.. பத்திரிக்கைகளில் 3.5/5, 3/5 என படத்தின் ரேட்டிங் கொடுக்கிறார்கள்..

நீண்ட நாட்களுக்கு பின் அனைவரும் கதை ரீதியாக பாராட்டும் படமாக இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படம் வெளியிட திரையரங்குகளும் காட்சிகளும் குறைவாகவே கிடைக்கிறது..

பிறகு எப்படி சிறந்த படங்கள் மக்களுக்கு சென்றடையும்.. எனவே திரையரங்க உரிமையாளர்கள் சிறந்த நல்ல வரவேற்பு இருக்கும் திரைப்படங்களுக்கும் காட்சிகள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சிறிய தயாரிப்பாளர்களும் நல்ல திரைப்படங்களும் மக்களிடம் செல்ல வழி செய்யுங்கள்.

How Good Tamil movies will reach public Cheran

காலை 6 மணி முதல் ‘ஜவான்’ ஆட்டம் ஆரம்பம்..; ஷாருக்கான் ரசிகர்கள் ஜாலி

காலை 6 மணி முதல் ‘ஜவான்’ ஆட்டம் ஆரம்பம்..; ஷாருக்கான் ரசிகர்கள் ஜாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை மும்பையில் ரசிகர்கள் பட்டாசு, மத்தளங்களுடன் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

‘ஜவான்’ திரைப்படம் வசூல் ரீதியான வெற்றி படம் என பார்வையாளர்கள் விமர்சனம்!

காலை 6 மணிக்கு தொடங்கிய சிறப்புக் காட்சிகள் பார்வையாளர்களால் பெரிய கொண்டாட்டங்களாக மாறியது.

தேசம் முழுவதும் ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளியீட்டை பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தது.

இந்த திரைப்படம் இறுதியாக இன்று முதல் திரையிடப்பட்டிருக்கிறது. திரையரங்குகளை மைதானமாக மாற்றியிருக்கும் ஜவானின் அதிர்வலை… அடுத்தடுத்த திரையரங்குகளில் நன்றாகவே தெரிகிறது.

ஆக்சன் என்டர்டெய்னருக்கான ரசிகர்கள் மும்பையில் உள்ள புகழ்பெற்ற கெயிட்டி- கேலக்ஸி திரையரங்கம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வெளியிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் நன்றாகவே காணப்படுகிறது.

அங்கும் அதிகாலை காட்சிக்கு ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்தனர்.

மும்பையில் உள்ள கெயிட்டி -கேலக்ஸி திரையரங்கிலும்.. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மற்ற திரையரங்குகளிலும் அதிகாலை ஆறு மணிக்கு திரையிடப்பட்ட ‘ஜவான்’ சிறப்பு காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

‘ஜவான்’ திரைப்பட வெளியீட்டைக் கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பெரிய அளவில் தங்களின் செல்போன் ஒளியை ஒளிர விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வருகை தந்திருந்த கூட்டத்தினர் ஷாருக்கான் மற்றும் ஜவான் படத்தை பாராட்டினர்.

மேலும் அந்த திரையரங்கத்திற்கு வெளியே மிகப் பெரிய அளவில் கட்-அவுட் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இப்போது முதல் தொடங்கியிருக்கும் ஜவானின் மாயாஜாலத்தை இது எடுத்துக்காட்டுகிறது. ஒரு படத்திற்காக இப்படி ஒரு செயலை.. ரசிகர்கள் செய்வது இதுவே முதல்முறை.

மேலும் திரையரங்கிலிருந்து காட்சிகளை பகிரும் போது ரசிகர்கள் சமூக ஊடகங்களையும் புயல் போல் தாக்கினர்.

https://www.instagram.com/reel/Cw3z5b8IouG/?igshid=MzRlODBiNWFlZA==

https://www.instagram.com/reel/Cw30aZSo3w8/?igshid=MzRlODBiNWFlZA==

https://x.com/srkuniverse/status/1699571173204303977?s=46&t=5RIwNRycJ8MV9YSxIBI6Fg

https://twitter.com/TeamSRKWarriors/status/1699591230068568484?t=bpio2AhHe-6JO3SUGQy5Hw&s=19

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார்.

கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இன்று முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

ஜவான்

Fever Grips Mumbais Gaiety Theatre As SRK Fans Celebrates Jawan FDFS

சூர்யா சீன்களில் விஷால் மறந்து கைதட்டிடுவார்… – ஆதிக் ரவிச்சந்திரன்

சூர்யா சீன்களில் விஷால் மறந்து கைதட்டிடுவார்… – ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, அபிநயா நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.

வினோத் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது…

“நான் பழைய ஆதிக் ரவிச்சந்திரன் அல்ல.. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா பேசுகின்ற “எல்லாத்தையும் மாத்தி மறந்து மாறி வந்திருக்கேன்” என்கிற வசனம் எனக்கே பொருந்துகிற வசனம் தான். படத்தில் மோதலே கிடையாது.

ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும்.. அதை அடைய ஓடிக்கொண்டிருக்கும்போது ஏற்படும் சலசலப்பு தான் கதை. இதில் மையப்புள்ளியாக ஒரு தொலைபேசி இருக்கிறது.

இந்த படப்பிடிப்பில் விஷால் தனது கதாபாத்திரத்திற்கான மேக்கப்புடன் கேரவனில் இருந்து இறங்கியபோது கிட்டத்தட்ட அங்கே கூடியிருந்த 500 பேரும் கைதட்டி வரவேற்றபோதே எங்களுக்கு படம் வெற்றி பெறும் என பாதி திருப்தி கிடைத்துவிட்டது. எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் பெரும்பாலான காட்சிகளில் விஷால் தன்னை மறந்து கைதட்டி விடுவார். கேட்டால் அருமையாக இருந்தது இன்னொரு டேக் எடு என்று கூறி விடுவார்” என்றார்.

Surya acting scenes and Vishal reactions in Mark Antony

More Articles
Follows