தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மாரி செல்வராஜ் இயக்குனராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’.
இந்த படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர்.
இதில் கதிரின் தந்தையாக நடித்தவர் நெல்லை தங்கராஜ். நாட்டுப்புற கலைஞரான இவர் அருமையான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு உடல் நலக்குறைவால் காலமானார்.
அவரது மறைவுக்கு ரசிகர்கள் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குடியிருக்க சொந்த வீடு இல்லாமல் ஓலை குடிசையில் வசித்து வந்த அவருக்கு அந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
JUST IN ‘Pariyerum Perumal’ actor Nellai Thangaraj passed away