JUST IN ‘பரியேறும் பெருமாள்’ பட நடிகர் நெல்லை தங்கராஜ் காலமானார்

JUST IN ‘பரியேறும் பெருமாள்’ பட நடிகர் நெல்லை தங்கராஜ் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்குனராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’.

இந்த படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர்.

இதில் கதிரின் தந்தையாக நடித்தவர் நெல்லை தங்கராஜ். நாட்டுப்புற கலைஞரான இவர் அருமையான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு உடல் நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு ரசிகர்கள் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குடியிருக்க சொந்த வீடு இல்லாமல் ஓலை குடிசையில் வசித்து வந்த அவருக்கு அந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

JUST IN ‘Pariyerum Perumal’ actor Nellai Thangaraj passed away

JUST IN கமல் விஜய் தனுஷ் ஆகியோருடன் நடித்த ‘தாதாசாகேப் பால்கே’ கே.விஸ்வநாத் மரணம்

JUST IN கமல் விஜய் தனுஷ் ஆகியோருடன் நடித்த ‘தாதாசாகேப் பால்கே’ கே.விஸ்வநாத் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கியவர் கே.விஸ்வநாத்.

இவர் 1975-ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். இதற்கு நந்தி விருது வழங்கப்பட்டது. பல வெற்றி படங்களை இயக்கினார்

இவர் தமிழில் குருதிப்புனல், முகவரி, ‘காக்கைச் சிறகினிலே, ‘பகவதி’ யாரடி நீ மோகினி’, அன்பே சிவம், சிங்கம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் தனது நடிப்பின் மூலம் முத்திரையை பதித்துள்ளார்.

திரைப்படத் துறையில் இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்ற இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் எட்டு முறை நந்தி விருது, ஆறு முறை தேசிய விருது, ஒன்பது முறை ஃபிலிம் பேர் விருதை பெற்றுள்ளார்.

தமிழில் கடைசியாக , ‘சொல்லி விடவா’ என்கிற படத்திலும் நடித்திருந்தார். மேலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே வயது முதிர்வு மற்றும் நோயால் அவதிப்பட்டுவந்த இவர், நள்ளிரவு தனது 93 வயதில் ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

விஸ்வநாதன் மறைவுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது..

அதில்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.
606, அண்ணாசாலை
சென்னை-60006

இரங்கல் செய்தி

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என். இராமசாமி
(முரளி ராமநாராயணன் ) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்…

“திரைப்பட இயக்குனரும் தாதாசாகிப் பால்கே விருது பெற்றவரும் ஒன்பது முறை நந்தி விருது பெற்றவருமான திரு.கே.விஸ்வநாத் அவர்களின் இறப்பு தென்னிந்திய திரைப்பட உலகிற்கு பெரிய இழப்பாகும்.

கே. விஸ்வநாத் அவர்கள் ” சலங்கைஒலி, ” “சங்கராபரணம்” உட்பட தமிழ் தெலுங்கு மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர்.

யாரடி நீ மோகினி, பாசவலை, குருதிப்புனல், ராஜபாட்டை, முகவரி உட்பட தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.

60 வருடங்களுக்கும் மேலாக திரை உலகில் கோலோச்சி வந்த கே.விஸ்வநாத் அவர்களின் மறைவு தெலுங்கு மற்றும் தமிழ் திரை உலகிற்கு பேரிழப்பாகும்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Veteran film maker K Viswanath dies at 92

கண்ணனை அழைத்து கொண்டு காளிகாம்பாள் கோயிலுக்கு சென்ற ஹன்சிகா

கண்ணனை அழைத்து கொண்டு காளிகாம்பாள் கோயிலுக்கு சென்ற ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மசாலா ஃபிக்ஸ் படம் நிறுவனம் சார்பில் தயாரித்து டைரக்ட் செய்து வரும் படம் “காந்தாரி” . இதில் நாயகியாக ஹன்சிகா நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது டைரக்டர் ஆர்.கண்ணனை அழைத்து கொண்டு சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார் ஹன்சிகா.

இதற்கு முன் படபிடிப்பு ஆரம்பித்த அன்றும் கண்ணனோடு சாமி கும்பிட்ட பிறகு தான் #காந்தாரி படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

ஆர்.கண்ணன் இயக்கி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இன்று பிப்ரவரி 3ல் வெளியாகிறது.

இந்தப் படம் மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான படத்தின் ரீமேக் என்பதும் மலையாளத்திலும் தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற இதே பெயரில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

Hansika and Kannan spotted at the Kalikampal temple

‘ஒருவர் வாழும் ஆலயம்’ பட இயக்குனர் ஷண்முகப்ரியன் காலமானார்

‘ஒருவர் வாழும் ஆலயம்’ பட இயக்குனர் ஷண்முகப்ரியன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு ரகுமான் நடித்த திரைப்படம் ‘ஒருவர் வாழும் ஆலயம்’. அழகான காதல் கதையுடன் உருவாக்கப்பட்ட இந்த படம் 35 வருடங்களுக்கு முன்பு வெளியானது.

இந்தப் படத்தை இயக்கியவர் ஷண்முகப்பிரியன்.

தனது இளது பருவத்திலேயே சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதியவர் இவர்.

அவர் எழுதிய “விளிம்பு” எனும் நாடகமே அவர் கைவண்ணத்தில் “உறவாடும் நெஞ்சம்”என்ற திரைப்படமாக 1976ல் உருப்பெற்றது.

அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த சிவகுமார் சிறந்த நடிகருக்காக மாநில விருது பெற்றார்.

அவரின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் முதலில் வெளிவந்த “ஒருவர் வாழும் ஆலயம்” எனும் திரைப்படம் 1980களில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக விளங்கியது.

வெற்றிவிழா, பிரம்மா, ஆத்மா போன்ற 50க்கும் மேற்பட்டத் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் ஷண்முகப்ரியன்.

இந்த நிலையில் உடல்நலக் குறைவால் சண்முகப்பிரியன் இன்று பிப்ரவரி 2ஆம் தேதி காலமானார்.

Shanmugabriyan, the director of ‘Oruvar Vaazhum Aalayam’, has passed away

‘தளபதி 67’ பட பூஜையில் விஜய்யுடன் நெருக்கமான குழந்தை யார் தெரியுமா.?

‘தளபதி 67’ பட பூஜையில் விஜய்யுடன் நெருக்கமான குழந்தை யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.

இந்த பட பூஜையில் விஜய்யுடன் நடிக்கும் த்ரிஷா அர்ஜுன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ஸ்கிரீன் செவன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.

இப்படி பூஜையன்று விஜய் மற்றும் த்ரிஷா அருகில் ஒரு சின்ன பெண் குழந்தையும் நின்று இருந்தது.

அவர் தளபதி 67 படத்தில் விஜய் மகளாக நடிப்பார் என கூறப்படுகிறது.

எனவே அந்த குழந்தை யார்.? என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

பிரபல காமெடி நடிகர் அர்ஜுனனின் மகள் ‘இயல்’ தான் அந்த குழந்தை என தெரிய வந்துள்ளது.

டிக் டிக் டிக், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் நடித்தவர் அர்ஜுனன் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you know who is the closest child to Vijay in ‘Thalapathi 67’ Pooja?

தனுஷ் 50 ஷூட்டிங் இந்த தேதியில் ஆரம்பமாகிறதா?

தனுஷ் 50 ஷூட்டிங் இந்த தேதியில் ஆரம்பமாகிறதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் இப்போது இயக்குனர் அருண் மாதேஷ்வரனின் முயற்சியான ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பில் ஓய்வில்லாமல் இருக்கிறார். சமீபத்திய தகவல்களின்படி, தேசிய விருது பெற்ற நடிகர், மார்ச் மாதத்திற்குள் கேப்டன் மில்லருக்கான தனது வேலையை முடித்துவிடுவார். அவர் ஏப்ரல் மாதத்தில் தனது 50வது ப்ராஜெக்ட்டின் ப்ரீ புரொடக் ஷனை தொடங்குவார் மேலும் ‘டி50’ மே மாதத்தில் தொடங்குவார் என சொல்லப்படுகிறது

தனுஷின் 50வது படம் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் ஆதரவுடன் பிரமாண்டமாக உருவாக உள்ளது . இது சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் கதை என்று கூறப்படுகிறது.

Dhanush’s 50th movie, D50, to go on the floors on this date?

More Articles
Follows