தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹரஹர மஹாதேவகி படத்தை தொடர்ந்து மீண்டும் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.
அந்த படமே A லட்சணத்தில் இருந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த செய்திதான்.
அப்படியென்றால் அதே கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் டபுள் A ஆக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.
இந்நிலையில் இந்த படம் குறித்து நாயகன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…
இருட்டு அறையில் முரட்டு குத்து காமெடி கலந்த ‘அடல்ட்’ பேய் படம்.
குறிப்பிட்ட ரசிகர்களை மனதில் வைத்தே, இப்படத்தை எடுத்துள்ளோம்.
கல்லுாரி மாணவர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இப்படத்தில் உண்டு.
ஹரஹர மஹாதேவகி படம் யாருக்கு எல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கு எல்லாம் இந்த படமும் பிடிக்காது.
அந்த படத்தில் டபுள் மீனிங் டயலாக் இருந்திருக்கும். ஆனால் இதில் எல்லாத்தையும் ஓபனாவே சொல்லியிருக்கோம்.” என்று தெரிவித்துள்ளார்.
Gautham Karthik talks about his Iruttu Araiyil Murattu Kuththu