திருமணத்திற்கு வாழ்த்தியவர்களை முட்டாள்கள் ஆக்கிய யாஷிகா.; இதெல்லாம் ஓவரா இல்ல..

திருமணத்திற்கு வாழ்த்தியவர்களை முட்டாள்கள் ஆக்கிய யாஷிகா.; இதெல்லாம் ஓவரா இல்ல..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதன் பின்னர் சில படங்களில் நடித்தாலும் பெரிய வரவேற்பை பெறவில்லை. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் யாஷிகா.

2021ல் கடந்தாண்டு கார் விபத்தில் தனது தோழியை பறிக்கொடுத்தவர்.

யாஷிகாவுக்கு காலில் பலத்த அடிபட்டு நடக்கவே முடியாமல் பல மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார் யாஷிகா.

பல போட்டோஷூட்களில் கலந்துக் கொண்டு தன் வழக்கமான கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 1ல் தான் திருமணம் செய்ய போவதாக கூறி.. “என் பெற்றோர் சம்மதித்துவிட்டனர். இது செட்டிலாகும் நேரம்.

சினிமாவை விட்டு விலக மாட்டேன். எப்போதும் உங்களை மகிழ்விப்பேன். காதல் செட் ஆகாது, இது நிச்சயிக்கப்பட்ட திருமணம். அனைவரின் ஆசீர்வாதம் தேவை” என பதிவிட்டார் யாஷிகா

எனவே ரசிகர்கள் பலரும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பின்னர் சில மணிநேரங்களில் ‛‛எனக்கு திருமண வாழ்த்து சொன்ன அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள். இன்னும் 10 ஆண்டுகளுக்கு திருமணம் செய்ய போவதில்லை” என்றார் யாஷிகா.

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதால் அனைவரையும் ஏப்ரல் ஃபூல் செய்துள்ளார் யாஷிகா.

ஆனால் யாஷிகாவின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.

அட… வாழ்த்து சொன்னது குத்தமா.?

Yashika Anand announces wedding on April Fools Day

ரசிகர்களுடன் ‘செல்ஃபி’ பார்த்து செல்ஃபி எடுத்த ஜி.வி.பிரகாஷ் & வர்ஷா

ரசிகர்களுடன் ‘செல்ஃபி’ பார்த்து செல்ஃபி எடுத்த ஜி.வி.பிரகாஷ் & வர்ஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி.

இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.

இப்படம் ஏப்ரல் 1ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியானது.

இதைத்தொடர்ந்து செல்பி திரைப்படத்தை நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை வர்ஷா பொல்லம்மா, இயக்குனர் மதிமாறன், நடிகர் டி ஜி குணாநிதி மற்றும் தயாரிப்பாளர் டி.சபரீஷ் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர்.

படத்தின் இடைவேளையில் ரசிகர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் நடிகர் ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

GV Prakash and Varsha Bollamma watched Selfie with fans

‘விருமன்’ நாயகி அதிதி ஷங்கருக்கு திருமணம்.? குஞ்சுமோனிடம் கொடுத்த அழைப்பிதழால் ரசிகர்கள் குழப்பம்

‘விருமன்’ நாயகி அதிதி ஷங்கருக்கு திருமணம்.? குஞ்சுமோனிடம் கொடுத்த அழைப்பிதழால் ரசிகர்கள் குழப்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

ஐஸ்வர்யா, அதிதி ஆகிய இரு மகள்களும், ஆர்ஜித் என்ற மகனும் உள்ளனர்.

2வது மகள் டாக்டர். தற்போது கார்த்தியுடன் விருமன் படத்தில் நடித்துள்ளார். விரைவில் மகனையும் சினிமாவில் அறிமுகப்படுத்த உள்ளார்.

மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்தாண்டு 2021ல் ஜூனில் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை சந்தித்து தன் மகள் திருமண வரவேற்பிற்கு அழைத்திருந்தார் ஷங்கர்.

எனவே ஷங்கரின் 2வது மகளுக்கு தான் திருமணம் என்ற செய்திகள் பரவியது.

கொரோனா காலக்கட்டத்தில் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற்றதால் வெகு சிலரை மட்டுமே அப்போது அழைத்திருந்தனர்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார். அப்போது திருமண வரவேற்பு நடத்த முடியாத சூழ்நிலையால் தற்போது திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டுள்ளார் ஷங்கர் என தெரிய வந்துள்ளது.

Will director Shankar’s daughter and Aditi Shankar get married this May?

’ஓ… சொல்றியா மாமா’ டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு

’ஓ… சொல்றியா மாமா’ டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்தாண்டில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ’புஷ்பா’. இந்த படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடித்திருந்தாலும் இடம்பெற்ற ’ஓ சொல்றியா மாமா’ என்ற ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடியிருந்தார்.

இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. தமிழில் இந்த பாடலை நடிகை ஆண்டரியா பாடியிருந்தார்.

இப்பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தவர் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா.

இவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020ல் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா மற்றும் அவருடைய உதவியாளர் ஆகிய இருவரும் அவரது நடனக்குழுவில் இருந்த பெண் ஒருவரிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே கணேஷ் ஆச்சார்யா மற்றும் அவரது உதவியாளர் மீது 354-ஏ, 354-சி, 354-டி, 509, 323, மற்றும் 504 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

Bollywood choreographer Ganesh Achaarya booked under sexual harassment case

கோயில் தரிசனம்.. எடை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை..; அசத்தும் அஜித்

கோயில் தரிசனம்.. எடை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை..; அசத்தும் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களாக கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் நடிகர் அஜித்.

அவர் பிரபல கோயில் ஒன்றில் அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

கேரளாவில் உள்ள கல்பாதி விஸ்வநாதர் கோயிலுக்கு வெள்ளை வேஷ்டி வெள்ளை துண்டுடன் அஜித் கோயிலுக்கு சென்றுள்ளார்.

விஸ்வநாதர் கோவிலில் அஜித் மனமுருகி பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

இதனிடையில் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்துக் கொண்டுள்ளார் அஜித்.

அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைக்க இந்த சிகிச்சை அஜித் மேற்கொண்டதாக கூறப்படுகிறது .

இதனையடுத்து தனக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து அஜித் எழுதிய கடிதம் ஒன்றும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith Kumar visits temple in Kerala. Pics go viral

ரூ. 20 கோடி நஷ்டம்.. இரக்கமின்றி அழுத்தம் கொடுத்தார்… ஞானவேல்ராஜா மனுத்தாக்கல்.. சிக்கலில் சிவகார்த்திகேயன்

ரூ. 20 கோடி நஷ்டம்.. இரக்கமின்றி அழுத்தம் கொடுத்தார்… ஞானவேல்ராஜா மனுத்தாக்கல்.. சிக்கலில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கிய மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்த படத்தில் தனக்கு சம்பளம் ரூ. 15 கோடி பேசப்பட்டதாகவும் ஆனால் இன்னும் 4 கோடி பாக்கி உள்ளதாகவும் அதனை பெற்றுத் தர கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தற்போது இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில்…

‘ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்காக 1 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அப்போது 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் 2013 ஆண்டில் செய்யப்பட்டது. அப்போது படம் எடுக்க முடியாத சூழ்நிலையால் மீண்டும் 2018-ம் ஆண்டு புது ஒப்பந்தம் போடப்பட்டது.

சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.

ஆனால், ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அப்படத்தை இயக்குநர் ராஜேஷ்தான் இயக்க வேண்டும் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தினார்.

இதனால்தான் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது. அந்தப் படத்தால் எனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

வரிகளுடன் சேர்த்து மீதம் 2 கோடியே 40 லட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென நடிகர் சிவகார்த்திகேயன், இரக்கமின்றி எனக்கு அழுத்தம் கொடுத்தார்.

‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், விநியோகஸ்தர்கள் பிரச்சினையில் சிக்க வைத்து விட வேண்டாம் என அப்போது சிவகார்த்திகேயனை தெரிவித்தார்.

ஆனால் தற்போது 3 ஆண்டுகளுக்கு பின்னர், உண்மைத் தகவல்களை மறைத்துள்ளார்.

எனவே அந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஞானவேல்ராஜா தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் இந்த பதில் மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 7-ம் தேதிக்கு நீதிபதி எம்.சுந்தர் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Producer Gnanavelraja accuses Sivakarthikeyan of suppressing facts

More Articles
Follows