தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள கஜினிகாந்த் அடுத்த மாதம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இருட்டு அறையில் முரட்டு குத்து பட புகழ் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ஆர்யா, சாயிஷா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
அப்போது ஆர்யா பேசும்போது…
ஞானவேல்ராஜா என்னிடம் கால்ஷீட் கேட்ட உடனே ஓகே சொல்லிவிட்டேன். அதன்பின்னர் யார் டைரக்டர் என்று கேட்டேன்? நம்ம சந்தோஷ்தான் என்றார்.
ஆனால் சந்தோஷ் அவர்களோ இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை அப்போது இயக்கி கொண்டிருந்தார். அவர் உடனே எப்படி கஜினிகாந்த் படத்தை தொடங்க முடியும் என்று கேட்டார்.
அதற்கு ஞானவேல்ராஜாவே.. அந்த படத்தை இரவில் சூட்டிங் செய். இந்த கஜினிகாந்த் படத்தை பகலில் சூட்டிங் செய் என்றார்.
அதுபோல் மாறி மாறி இரண்டு படங்களையும் சூட்டிங் செய்தார் சந்தோஷ்.
ஹீரோக்கள் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கலாம். ஆனால் ஒரு டைரக்டர் எப்படி இரண்டு படங்களை ஒரே நேரத்தில் செய்ய முடியும்.
நானே எப்படிடா? இப்படி செய்கிறாய்? என்று கேட்டேன். அவன் வாட்ஸ் அப் இருக்கிறது. பக்கா ப்ளான் இருக்கிறது. செய்கிறேன் என்றான்.
அப்படி ஒரு திட்டமிட்டு எல்லாத்தையும் செய்கிறான்.
சாயிஷா நடனத்தில் செம. நான் இரண்டு மணி நேரம் பயிற்சி செய்வேன். அவர் அசால்ட்டாக 5 நிமிடத்தில் செய்துவிடுவார்.
மாஸ்டர் பாபா பாஸ்கர் சார் என்னை ஆட வைக்க சிரமப்பட்டார். நான் என்னைப் போல் சாயிஷாவை ஆட சொல்லுங்கள்” என்றேன்.