தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காதல் கொண்டேன் மற்றும் மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் தனுஷ் மற்றும் அவரது அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் இணைந்து பணியாற்றி இருந்தனர்.
இந்த இரு படங்களும் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
எனவே இவர்கள் இணைந்து மீண்டும் பணியாற்றுவது எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென இரண்டு பட அறிவிப்புகள் வெளியானது.
ஒன்று ‘ஆயிரத்தில் ஒருவன்” படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ‘நானே வருவேன்’ படம் அறிவிப்பும் தான்.
இந்த நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.
தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
மேலும் பிரபு, செல்வராகவன், இந்துஜா, யோகிபாபு, சுவீடவ் நாட்டை சேர்ந்த நடிகை எல்லி அவ்ராம் ஆகியோரும் நடித்துள்ளனர் .
விரைவில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாக உள்ளது.
வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி இந்தப் படத்தை திரைக்கு கொண்டு வர பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதே நாளில் தான் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமும் வெளியாக உள்ளது.
அந்த படத்தில் விக்ரம் ஜெயம் ரவி கார்த்தி ஐஸ்வர்யாராய் த்ரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மிகப்பிரமாண்டமான முறையில் உருவாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு போட்டியாக ‘நானே ஒருவன்’ படம் வெளியாவது உறுதி என்றால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
எனவே நானே வருவேன் படம் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என நம்பலாம்.
Dhanush in Naane Varuven to clash with Ponniyin Selvan ?