அந்த மாதிரி படம் பண்ண சொன்னீங்க.; அவ்வளவுதான் அறிவு இருந்துச்சி.. – கார்த்தி

அந்த மாதிரி படம் பண்ண சொன்னீங்க.; அவ்வளவுதான் அறிவு இருந்துச்சி.. – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் அவரது 25 வது படமாக உருவாகியுள்ளது ‘ஜப்பான்’.

ராஜூமுருகன் இயக்கி உள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நாயகியாக அணு இமானுவேல் நடித்துள்ளார்.

வழக்கமான ராஜூமுருகன் படங்கள் போல் இல்லாமல் கமர்சியல் கலந்து கார்த்தி படத்தை உருவாக்கி இருக்கிறார். வழக்கமான கார்த்தி குரலில் இல்லாமல் இந்த படத்திற்காக தன் குரலை படம் முழுவதும் மாற்றிப் பேசி இருக்கிறார்.

இந்த படம் தீபாவளி வெளியிடாக நவம்பர் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் எதுவும் இல்லை என்பது கூடுதல் தகவல்.

இந்த நிலையில் இன்று நவம்பர் 8ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் கார்த்தி.

அப்போது அவர் பேசும்போது..

பருத்திவீரனில் ஆரம்பித்து இன்று 25வது படம் வரை வளர்ந்து இருக்கிறேன். மீடியாக்களின் ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு.

ஒவ்வொரு படங்களையும் நீங்கள் நிறை குறைகளை சொல்லி வருகிறீர்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

மெட்ராஸ் பட பத்திரிகையாளர் காட்சியின் போது.. “இதுபோன்ற நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டீர்கள். நானும் அதை செய்து வருகிறேன்.

நான் உதவி இயக்குனராக இருந்தபோது ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஒன்லைன் கதை மட்டுமே தெரியும். அந்த அளவு தான் அறிவு அப்போது இருந்தது.

ஆனால் இன்று பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டேன்.

ஜப்பான் படம் நன்றாக வந்துள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.. உங்களின் அன்பும் ஆதரவும் தேவை.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்றார் நடிகர் கார்த்தி.

Karthi diwali Japan special press meet

MLA vs YOU TUBER : செந்தில் ஹீரோவானா ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’

MLA vs YOU TUBER : செந்தில் ஹீரோவானா ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rock & Role production & A.P.Production ஆகிய நிறுவனங்களின் சார்பில் யாஷ்மின் பேகம் மற்றும் மணிமேகலை லட்சுமணன் இருவரும் இணைத்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’.

இந்தப் படத்தில் காமெடி நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். சுந்தர் மஹா ஸ்ரீ ஹீரோவாக நடிக்கிறார். சந்தியா ராமசுப்பிரமணியன் , அபினய ஸ்ரீ இருவரும் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வில்லியாக நதியா வெங்கட் நடிக்கிறார் . பிரபு, சன்னி பாபு ஹீரோ நண்பர்களாக நடிக்கிறார்கள். மற்றும் பல பிரபலமான நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர்.

எழுத்து, இயக்கம் – ராஜ் கண்ணாயிரம், கதை, திரைக்கதை, வசனம் – சுந்தர் மஹாஸ்ரீ, ஒளிப்பதிவு – வெங்கட் முனிரத்னம் ,ஏ சி மணிகண்டன், ஸ்ரீநாத். படத்தொகுப்பு – ரமேஷ் மணி, இசை – ஜோஸப் சந்திரசேகர், நடனம் -ராஜ் கிரண் ,மாதவன் ,விஷ்ணு ராஜ்,
ஒலிப்பதிவு – சதீஷ் சாந்திவாசன், பத்திரிக்கை தொடர்பு – பா .சிவக்குமார்.

வாங்கண்ணா வணக்கங்கண்ணா

இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகிறது. முழுக்க முழுக்க காமெடியில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன.

ஓரு எம்.எல்.ஏ.வுக்கும், ஓரு யூ டியூபருக்கும் இடையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டு எம்.எல்.ஏ.வின் கோபத்துக்கு ஆளாகிறார் யூ டியூபர்.

இந்தப் பிரச்சனையில் இருந்து இருபத்தி நாலு மணிநேரத்திற்குள் அந்த யூ டியூபர் தப்பினாரா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இருபது நாட்களுக்குள் இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பு நிறைவடைந்தது .

Rock and Role Production – Yasmeen Begam
AP production – Manimagali Lakshmanan
Hero – Sundar Mahasri (சுந்தர்மகாஸ்ரீ)
Heroines – Sandhiya Ramasubramanian, Abinaya sri.
Villan – Nathiya Venkat (வில்லி)
Hero Friends Prabhu, Sunny Babu
Director – Raj Kannayiram
Music Director – Joseph Chandrasekar
Editor – Ramesh Mani
Camera man – Venkat Munirathinam, A.C. Manikandan Srinath Rite
Dance Masters – Raj Kiran, Shafrin, Madhavan, Vishnu
Poster Designer – Selva
PRO – Siva

வாங்கண்ணா வணக்கங்கண்ணா

Comedian Senthil lead in Vaanganna Vanakkamanganna

இந்தியாவிலிருந்து முதல் நடிகர் கார்த்தி.; துபாய் தொழிலாளர்கள் பெருமிதம்

இந்தியாவிலிருந்து முதல் நடிகர் கார்த்தி.; துபாய் தொழிலாளர்கள் பெருமிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கார்த்தி தீபாவளிக்கு வெளியாக இருக்கின்ற தனது ‘ஜப்பான்’ திரைப்படத்திற்காக சென்னை, கொச்சி, மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் மிக தீவிரமாக விளம்பர நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் அடுத்தகட்டமாக துபாய்க்கு வருகை தந்த கார்த்தி, தனது 25வது படத்தை சிலிகான் ஓயாசிஸ் மாலில் புரமோட் செய்தார்.

ஜப்பான் படத்தில் நகைச்சுவை கலந்த எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தது குறித்தும் அது எப்படி சவால் நிறைந்ததாக இருந்தது என்கிற அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டதுடன் ரோலக்ஸ் மற்றும் ராக்கெட் ராஜா இருவரின் கலவையாக தனது கதாபாத்திரம் இருக்கும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக புர்ஜ் கலிபாவை பார்வையிட்டார் கார்த்தி. தனது சமூக நல செயல்பாடுகளுக்கு பெயர் பெற்ற கார்த்தியிடம், துபாயைச் சேர்ந்த தொழிலதிபர்களும், திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியும் துபாயில் இந்திய தொழிலாளர்கள் தங்கியிருக்கும் முகாம் பற்றி கூறினார்கள்.

அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தொழிலாளர் முகாம்களில் தங்கியுள்ள பணியாளர்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்தவர் என்பதால் அவர்களை சந்திக்க விரும்புவதாகவும் அவர்களுடன் முன்கூட்டியே தீபாவளியை கொண்டாட விரும்புவதாகவும் கார்த்தி தெரிவித்தார் .

காலநிலை தீவிரமாக இருந்தபோதிலும் கூட குளிர்சாதன வசதி இல்லாமல் முகாமில் பணியாளர்கள் தங்கியிருப்பதும், தங்களது குடும்பத்தினருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கவேண்டும் என்பதற்காகவே வருடக்கணக்கில் அவர்களை பிரிந்து வசித்து வருவதும் தெரிந்து நெகிழ்ந்து போனார் கார்த்தி.

அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்கிய கார்த்தியிடம் இந்தியாவில் இருந்து தங்களை பார்க்க வந்த முதல் நடிகர் நீங்கள் தான் என அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். பொதுவாகவே நடிகர்கள் தங்களது படங்களை துபாயில் உள்ள ஷாப்பிங் மால்கள் அல்லது நட்சத்திர ஹோட்டல்களில் விளம்பரம் செய்வார்களே தவிர துபாயில் இதுபோன்ற கடினமான பணி செய்யும் தொழிலாளர்களை சந்தித்ததே இல்லை.

நநடிகர் கார்த்தியின் இந்த பெருந்தன்மையால் அனைத்து தொழிலாளர்களும் மிகவும் மனம் நெகிழ்ந்து காணப்பட்டதுடன் ஒரு சினிமா நட்சத்திரத்தை இவ்வளவு அருகில் நெருக்கமாக பார்த்தது குறித்து தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இந்தத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பபை கண்டு நடிகர் கார்த்தியும் உணர்ச்சியமாக அவர்களிடம் உரையாடினார்.

ஜப்பானை தொடர்ந்து ‘சூதுகவ்வும்’ புகழ் நலன் குமாரசாமி, ’96’ புகழ் பிரேம்குமார் ஆகியோரின் படங்களிலும் மற்றும் சர்தார் 2, லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ’கைதி 2’வையும் துவங்க இருக்கிறார் கார்த்தி.

கார்த்தி

Karthi met Dubai Labours and Celebrated Diwali

விஷால் – கௌதம் மேனன் – சமுத்திரக்கனி இணையும் பட சூட்டிங் அப்டேட்

விஷால் – கௌதம் மேனன் – சமுத்திரக்கனி இணையும் பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் புதிய பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது விஷாலின் 34 ஆவது படமாகும்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்றது .

நாளை நவம்பர் 8ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கப்பட உள்ளது.

இதனை அடுத்து தொடர்ந்து 30 நாட்கள் சூட்டிங் நடைபெற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதுதான் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு.

இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ்ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பாக கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வருகிறார்.

இதில் விஷாலுடன் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

‘தாமிரபரணி’ & ‘பூஜை’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் ஹரி & நடிகர் விஷால் இணையும் 3வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal 34 movie new shooting update

ஸ்ரீகாந்த் தேவா இசையை பல வருடங்களாக மிஸ் செய்கிறேன்.. – மோகன் ராஜா

ஸ்ரீகாந்த் தேவா இசையை பல வருடங்களாக மிஸ் செய்கிறேன்.. – மோகன் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கணேஷ் பாபு இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘கட்டில்’.

நாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்க வைரமுத்து பாடல்கள் எழுத ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் மோகன் ராஜா பேசியதாவது…

வைரமுத்து சார் பல தலைமுறைகளுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். நானும் அவருக்கு மிகப்பெரிய ரசிகன். தம்பி ரவியின் பயணத்தை உங்கள் ஆசியோடு துவக்கி வைத்தீர்கள், இன்று அவன் நன்றாக இருக்கிறான் நன்றி.

ஶ்ரீகாந்த் தேவாவின் இசையை மிக நீண்டகாலமாக மிஸ் செய்கிறேன் அந்த மெலடி இசையை இந்தப்படத்தில் மீண்டும் கேட்டது மகிழ்ச்சி. கேமரா யார் என்று கேட்கும் அளவில் சிறப்பாக இருந்தது. ஒரு அருமையான கதையைப் படமாக எடுத்துள்ளார் கணேஷ்.

சத்யஜித்ரேயேயின் படத்தை கட்டில் எனக்கு நினைவுபடுத்துகிறது.
அவருக்கும் படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள். ஶ்ரீகாந்த் தேவா திரைத்துறையில் என் ஆரம்ப காலகட்டத்திலிருந்து நண்பராக இருக்கிறார். அவர் நட்பு எனக்குக் கிடைத்தது பாக்கியம். அவருக்கு மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்க ஆசைப்படுகிறேன்

நடன இயக்குநர் மெட்டிஒலி சாந்தி பேசியதாவது…

திரைப்படத்துறையில் பருந்து,கழுகுகளுக்கு மத்தியில் ஒரு சிட்டுக்குருவியை போல் கட்டில் படக்குழு வந்திருக்கிறோம். கட்டில் என்றவுடன் யோசித்தேன், ஆனால் கதை சொன்னவுடன் ஒத்துக்கொண்டேன். இந்தக்காலத்தில் உறவுகளை மதிப்பதில்லை அந்த உறவுகளின் பெருமையை இந்தப்படம் சொல்லும். இப்போது பாடல் கமர்ஷியலாக மாறிவிட்டது. மெலடி பாடல்களே இல்லை இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன்.

ஆனால் இந்தப்படத்தில் நல்ல மெலடி பாடல்கள் இருக்கிறது. மனதுக்கு நிறைவாக இருக்கும். வைரமுத்து ஐயா பற்றிப் பேச வயதில்லை. அருமையான வரிகள் தந்துள்ளார். இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு சார் மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார். அனைவருக்கும் படம் பிடிக்கும். படம் வெற்றி பெறப் பிரார்த்திக்கிறேன் நன்றி.

ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கர் பேசியதாவது..

இந்தக்கதையை இயக்குநர் கணேஷ் அவர்கள் சொல்லும் போது ஒரு குடும்பத்தின் கதையாகத்தான் சொன்னார். அது எனக்குப் பிடித்திருந்தது. என் முதல் படத்தில் வைரமுத்து அவர்களுடன் வேலை பார்த்தேன் மீண்டும் இந்தப்படத்தில் வேலைப்பார்த்தது மகிழ்ச்சி. இந்தப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

தஞ்சை இரா செழியன் பேசியதாவது…

இவி கணேஷ்பாபு எங்கள் தஞ்சையிலிருந்து வந்து திரைத்துறையில் வளர்ந்திருக்கிறார். வைரமுத்து ஐயா 2 மிகச்சிறந்த பாடல்கள் தந்துள்ளார். இந்தப்படமும், பாடலும் தேசிய விருது பெறும். படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.

ஜாக்குவார் தங்கம் பேசியதாவது…

இயக்குநர் நடிகர் EV.கணேஷ்பாபு மிக அருமையான படைப்பைத் தந்துள்ளார். ஒரு நடிகராக ஆரம்பித்து, இந்த இடத்திற்கு உயர்ந்திருக்கிறார். இந்தப்படம் கண்டிப்பாகத் தேசிய விருதை வாங்கும். எங்கள் சங்கம் சார்பாக இயக்குநருக்குத் தங்க அணிகலன் வழங்கி கௌரவிக்கிறோம். தன்னோடு தன் குழுவையும் ஜெயிக்க வைத்துள்ளார். அவருக்கு எல்லோர் சார்பிலும் வாழ்த்துக்கள். நன்றி.

செம்மலர் பேசியதாவது..

கணேஷ் சார் கதை சொல்லும்போது அவர் தான் நடிக்கப் போகிறார் என்று எனக்குத் தெரியாது. சொல்லும் போதே நடித்துக்காட்டினார். அதில் இம்ப்ரெஸ் ஆகித்தான் நடிக்க ஒத்துக்கொண்டேன். இந்தப்படம் எனக்கு நிறைய முக்கிய ஆளுமைகளை அறிமுகப்படுத்தியது. படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள்…
தயாரிப்பு – Maple Leafs Productions.
கதை திரைக்கதை வசனம் எடிட்டிங் – B.லெனின்.
தயாரிப்பு, இயக்கம் –
EV.கணேஷ்பாபு
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து,
மதன்கார்க்கி
ஒளிப்பதிவு – வைட் ஆங்கிள் ரவிசங்கர்
இசை – ஶ்ரீகாந்த்தேவா
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM )

I am missing Srikanth Deva music says Mohan Raja

வைரமுத்து இருப்பது பெருமை.; ஶ்ரீகாந்த்தேவா ஒரு அட்சய பாத்திரம்.. – கணேஷ்பாபு

வைரமுத்து இருப்பது பெருமை.; ஶ்ரீகாந்த்தேவா ஒரு அட்சய பாத்திரம்.. – கணேஷ்பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கணேஷ் பாபு இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘கட்டில்’.

நாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்க வைரமுத்து பாடல்கள் எழுத ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பேசியதாவது…

வைரமுத்து ஐயா வரிகளில் மூன்று பாடல்கள், செய்தோம் மிகப்பெரிய கொடுப்பினை. கார்க்கி ஒரு பாடல் எழுதியுள்ளார். இ.வி.கணேஷ்பாபு இந்தப்படத்திற்காக வந்தபோதே 3 மெலடிப் பாடல் என்றார் அப்போதே மிக மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் இ.வி..கணேஷ்பாபு அவர்கள் இயக்கிய குறும்படத்தின் மூலமாக எனக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது. இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம் படத்திற்கு ஆதரவு தாருங்கள்

தயாரிப்பாளர் இயக்குநர் நடிகர் இ.வி.கணேஷ்பாபு பேசியதாவது…

கட்டில் படம் எல்லோரிடமும் சென்று சேர்ந்துள்ளதற்குக் காரணம் ஊடகம்தான். கவிஞர் வைரமுத்து ஐயாவை முதன் முதலில் பார்த்த போதே, அவரின் கம்பீரம் மிகவும் பிடித்திருந்தது. அவர் எவ்வளவு சிறந்தவர் என்று அவரிடம் நெருங்கிப்பழகினால் தெரியும். அவரை அருகிலிருந்து பார்த்தாலே போதும், அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ள முடியும்.

அவர் இந்தப்படத்தில் இருப்பது எங்களுக்குப் பெருமை. கட்டில் மரங்களுக்குள்ளே எங்கள் மரபணுக்கூட்டம் வசிக்கிறதே எனக் கட்டில் படத்தினை ஒரு வரியில் கொண்டுவந்துவிட்டார். லெனின் சார் இந்தப்படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தொகுப்பு செய்துள்ளார். அவர் வாழ்வில் நடந்த சம்பவம் தான் இந்தக்கதை. அவர் மிகச்சிறப்பான கதையைத் தந்துள்ளார்.

ஶ்ரீகாந்த் தேவா அவர்களின் 101வது படம் இது. அவருக்கு என் குறும்படம் மூலம் தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி. பல ஆளுமைகள் இங்கு வந்து எங்களை வாழ்த்தியதற்கு நன்றி. ஶ்ரீகாந்த் தேவா ஒரு அட்சய பாத்திரம் நாம் எதிர்பார்ப்பதைத் தந்துகொண்டே இருப்பார். சிருஷ்டி டாங்கே அர்ப்பணிப்பு உள்ள ஒரு ஹீரோயின். இந்தப்படத்தில் மிகச்சிறப்பான ஒரு கதாப்பாத்திரம் செய்துள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு அவரின் வாழ்க்கையில் ஏறுமுகம் தான். இந்தப்படத்தில் என்னுடன் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.

Vairamuthu is pride for Kattil movie says EV Ganesh Babu

More Articles
Follows