தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர் சரத்குமார்.
இவரது நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் 2 ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.
இதில் பழுவேட்டையராய் நடித்திருந்தார் சரத்குமார். அவரது கேரக்டர் பலரின் பாராட்டை பெற்றது.
இந்த நிலையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ருத்ரன்’ மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரு படங்களின் வெற்றிக்காக நன்றி கூறும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் சரத்குமார்.
அப்போது தான் நடித்து வரும் படங்கள் குறித்து பேசினார்.
அப்போது சரத்குமாரிடம் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டனர்.
நீங்கள் நடித்த பழுவேட்டையார் கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஒருவேளை அவர் நடித்திருந்தால் படத்தில் ப்ரமோஷன் எனும் போஸ்டரிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சரத்குமார் பதில் அளிக்கையில்… “நிச்சயமாக நான் நடித்த கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருந்தால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
மேலும் படத்தின் விளம்பர போஸ்டர்களில் ரஜினிகாந்தின் முகம் பெரிய அளவில் இருக்கும். அவருக்கு அடுத்து ஐஸ்வர்யா ராய் இருப்பார்.
ஆதித்ய கரிகாலன் நடித்த விக்ரம் போஸ்டர் சிறியதாக அமைந்திருக்கும்” என ஓப்பனாக பதிலளித்தார் சரத்குமார்.
Sarath Kumar about if rajini acted in ponniyin selvan