‘ஜீனி’ & ‘கிருத்திகா’ படங்களை முடித்துவிட்டு ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிக்கும் ஜெயம் ரவி

‘ஜீனி’ & ‘கிருத்திகா’ படங்களை முடித்துவிட்டு ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிக்கும் ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி ஓணம் பண்டிகையின் போது ‘தனி ஒருவன்’ படம் வெளியானது.

இந்த படத்திற்கு முன்பு ரீமேக் படங்களை மட்டுமே இயக்கிக் கொண்டிருந்த மோகன் ராஜா தன் தம்பி ஜெயம் ரவியை வைத்து ‘தனி ஒருவன்’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவுக்கு பெரும் புத்துணர்ச்சியை கொடுத்தார்.

நயன்தாரா, அரவிந்தசாமி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்திருந்தார்.

இந்த படம் மாபெரும் வெற்றி பெறவே விரைவில் இரண்டாம் பாகம் வெளியாகும் என மோகன் ராஜாவும் ஜெயம் ரவியும் அறிவித்திருந்தனர்.

ஆனால் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ‘தனி ஒருவன் 2’ படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.

அதற்குள் பல படங்களில் நடித்து விட்டார் ஜெயம் ரவி. மேலும் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 & 2 ஆகிய படங்களுக்காக நீண்ட தலைமுடியும் வளர்த்திருந்தார் ஜெயம் ரவி.

மேலும் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படம், அஹமத் இயக்கத்தில் ‘இறைவன்’ படம், பின்னர் ‘சைரன்’ படம் என ரவி பிஸியானார்.

இப்போது ‘ஜீனி’ படத்தில் நடித்து வருகிறார் ரவி.

இதனை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிக்க செல்கிறார் ரவி. அதன் பின்னர்தான் ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிப்பார் என்றும் இதன் ஷூட்டிங் 2024 பிப்ரவரி அல்லது மார்ச்சில் துவங்கும் என தகவல்கள் வந்துள்ளன.

இதனிடையில் மோகன்ராஜா தெலுங்கில் ‘லூசிபர்’ ரீமேக்கை இயக்கிய பின்னர் நாகார்ஜூனாவை புதிய படத்திற்காக இயக்கி வருகிறார்.

Thani Oruvan 2 and Jayam Ravi movies updates

நிகில் – சம்யுக்தா மேனன் இணைந்த ‘சுயம்பு’ பட சூட்டிங் தொடங்கியது

நிகில் – சம்யுக்தா மேனன் இணைந்த ‘சுயம்பு’ பட சூட்டிங் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’கார்த்திகேயா 2’ படத்தின் மூலம் புகழ் பெற்ற கதாநாயகன் நிகில், தனது 20வது படத்திற்காக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரியுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘சுயம்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

’சுயம்பு’ என்ற தலைப்பும் செங்கோல் தாங்கிய படத்தின் போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகிலை ஒரு மூர்க்கமான போர்வீரனாகக் காட்டிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அமோக வரவேற்பைப் பெற்றது.

படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மேலும், படத்தின் ரெகுலர் ஷூட்டிங் இன்று ஆகஸ்ட் 18ல் தொடங்குகிறது. நிகில் ஒரு போர்வீரனாக குதிரையில் சவாரி செய்யும் போது ஒரு நாகத்தை நோக்கி அம்பு எய்வது போல் இந்த போஸ்டரில் உள்ளது.

சுயம்பு

அவரது தோற்றம் முதல் காஸ்ட்யூம் என இதுவரை நாம் பார்த்திராத புதிய நிகிலை ரசிகர்கள் பார்க்க இருக்கின்றனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் போலவே, இந்த புதிய போஸ்டரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதில் நிகில் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படம் நடிகர் நிகிலின் கேரியரில் அதிக பொருட்செலவிலும் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடனும் உருவாக இருக்கிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், வசனங்களை வாசுதேவ் முனேப்பகரி எழுதியுள்ளார்.

நடிகர்கள்: நிகில், சம்யுக்தா மேனன்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: பரத் கிருஷ்ணமாச்சாரி,
தயாரிப்பாளர்கள்: புவன் மற்றும் ஸ்ரீகர்,
பேனர்: பிக்சல் ஸ்டுடியோஸ்,
வழங்குபவர்: தாகூர் மது,
இசை: ரவி பஸ்ரூர்,
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா,
வசனங்கள்: வாசுதேவ் முனேப்பகரி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: எம் பிரபாகரன்,
இணை தயாரிப்பாளர்கள்: விஜய் காமிசெட்டி, ஜிடி ஆனந்த்,
மார்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ.

சுயம்பு

Karthikeya 2 hero Nikhils Swayambhu Launched Grandly

Cast: Nikhil, Samyuktha Menon

Technical Crew:
Writer, Director: Bharat Krishnamachari
Producers: Bhuvan and Sreekar
Banner: Pixel Studios
Presents: Tagore Madhu
Music: Ravi Basrur
DOP: Manoj Paramahamsa
Dialogues: Vasudev Muneppagari
Production Designer: M Prabhaharan
Co-Producers: Vijay Kamisetty, GT Anand
Marketing :First Show

சுயம்பு

ஜியா இயக்கிய ‘கள்வா’-வுக்கு செங்கோல் விருது வழங்கிய பேரரசு

ஜியா இயக்கிய ‘கள்வா’-வுக்கு செங்கோல் விருது வழங்கிய பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்திரிகையாளர் ஜியா எழுதி, இயக்கியுள்ள குறும்படம் ‘கள்வா’. கிங் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த குறும்படத்தில் விஜய் சந்துரு, அட்சயா, காக்கா கோபால் நடித்துள்ளனர்.

ஜேட்ரிக்ஸ் இசையமைத்துள்ளார். ஷரண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ரைட் ஃபிங்கர்ஸ் ஃபார்ம் (Right fingers forum) சார்பில் தொழில் முனைவோர். சமூக சேவகர்கள், குறும்படங்கள் ஆகியவற்றுக்கு செங்கோல் விருது வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது.

இதில் 3 சிறந்த தமிழ் குறும்படங்களில் ஒன்றாக கள்வா தேர்வானது. இப்படத்துக்கு செங்கோல் விருதை இயக்குனர் பேரரசு வழங்க, ஜியா பெற்றுக்கொண்டார்.

இது குறித்து ஜியா கூறும்போது…

‘கள்வா படத்துக்கு செங்கோல் விருது கிடைத்தது பெருமையாக உள்ளது. இதுவரை 30க்கும் மேற்பட்ட விருதுகளை ‘கள்வா’ வென்றுள்ளது. எனது முதல் குறும்படத்துக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி’ என்றார்.

இந்த விழாவில் ரைட் ஃபிங்கர்ஸ் ஃபார்ம் நிறுவனர் அண்ணாதுரை சின்னமுத்து, ‘நீயா நானா’ கோபிநாத், குருஜி சிவாத்மா உள்பட பலர் பங்கேற்றனர்.

Sengkol award for short film Kalva

சின்ன படங்களுக்கு வரவேற்பு இருக்கு.; ஆனால் சரியான ரிலீஸ் வேண்டும் – ஜீவா

சின்ன படங்களுக்கு வரவேற்பு இருக்கு.; ஆனால் சரியான ரிலீஸ் வேண்டும் – ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் T.குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகர்களாக விஜய் விஷ்வா, நலீப் ஜியா நடிக்க, கதாநாயகியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார்.

மேலும் ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், எஸ்.ஆர்.பிரபாகரன், சரவண சக்தி நடிகர்கள் அப்புக்குட்டி. ஜீவா, ரோபோ சங்கர், பிரஜன், ஜெயிலர் கலையரசன், ராட்சசன் சரவணன் மற்றும் பின்னணி பாடகி மாலதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

லொள்ளு சபா புகழ் நடிகர் ஜீவா பேசும்போது… “இந்த படத்தில் மீனவ மக்களின் வாழ்க்கையை அழகாக சொல்லி இருக்கிறார்கள் என்பது படத்தின் ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்க்கும்போது தெரிகிறது. சிறிய படமாக இருந்தாலும் நல்ல படங்களுக்கு மக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். ஆனால் சரியான நேரத்தில் படங்களை ரிலீஸ் செய்தால் வெற்றி நிச்சயம்” என்று கூறினார்.

Small budget movies should have good time release says Jeeva

Rajini at Himalayas : துறவிகள் ஆசிரமத்துக்கு நன்கொடை.; கவர்னரை அடுத்து முதல்வரை சந்திக்கும் ரஜினி.?

Rajini at Himalayas : துறவிகள் ஆசிரமத்துக்கு நன்கொடை.; கவர்னரை அடுத்து முதல்வரை சந்திக்கும் ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வாரம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

ரஜினிகாந்த் பொதுவாகவே தன்னுடைய படங்களை முடித்துவிட்டு அந்த படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இமயமலைக்கு பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த கடந்த நான்கு வருடங்களாக அவர் இமயமலை செல்வதை தவிர்த்து இருந்தார்.

தற்போது 4 வருடங்களுக்குப் பிறகு இமயமலை சென்று அங்கு தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை செய்து வருகிறார் ரஜினிகாந்த்.

இப்பயணத்தின்போது, ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றார்.

ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்று,துறவிகளை சந்தித்து உரையாடினார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. மேலும் பலரும் ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். அதுபோல ரஜினியும் சில துறவிகள்ளிடம் ஆசிகள் பெற்றார்.

பின்னர் உத்தரகாண்ட் வியாசர் குகைக்கு சென்ளார். பிறகு துவாரஹட்டில் உள்ள மகாவதார் பாபாஜி குகைக்கு சென்று
குகையில் தியானம் செய்தார் ரஜினி.

இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்தார் ரஜினி.

இதன் பின்னர் ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம துறவிகளை சந்தித்து ஆசிரமத்துக்கு நன்கொடையும் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து ஜார்க்கண்ட் ராம்கர் மாவட்டத்தில் உள்ள சின்னமஸ்தா காளி கோயிலுக்கு சென்று வழிபட்டார்.

இன்று ஆகஸ்ட் 18 லக்னோ சென்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேச உள்ளார் ரஜினி என கூறப்படுகிறது.

Rajinis spiritual tour at Himalayas after Jailer release

RECORD MAKER RAJINI உலகளவில் ‘ஜெயிலர்’ படைத்த வசூல் ரெக்கார்ட்

RECORD MAKER RAJINI உலகளவில் ‘ஜெயிலர்’ படைத்த வசூல் ரெக்கார்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நெல்சன் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார்.

இப்படம் வெளியான நாள் முதலே உலகளவில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.375. 40 கோடியை கடந்துள்ளது.

இதனை படக்குழு போஸ்டரை ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.

‘ஜெயிலர்’ படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே வாரத்தில் ரூ.375. 40 கோடியை வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.

மேலும், அந்த போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரெகார்ட் மேக்கர் (Super star rajinikanth record maker) என பதிவிட்டுள்ளது.

ஜெயிலர்

Rajinikanth’s Jailer really collected at box office in its first week for 375 crore

More Articles
Follows