தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலி படத்தில் ரஜினிக்கு அடுத்து நம் கவனம் ஈர்த்தவர் நடிகை தன்ஷிகா.
யோகி பாத்திரத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருந்தார்.
இதனையடுத்து, தற்போது ராணி என்ற படத்தில் நடித்துள்ளார்.
எம்.கே.பிலிம்ஸ் சார்பில் சி .முத்து கிருஷ்ணன் இப்படத்தை தயாரிக்க, சமுத்திரகனியின் இணை இயக்குனர் எஸ். பாணி இயக்கியுள்ளர்.
ஏ. குமரன் மற்றும் எஸ்.ஆர். சந்தோஷ்குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தை முழுக்க ஒரே கட்டமாக 40 நாட்களில் மலேசியாவில் படமாக்கியுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் நேற்று பூஜையுடன் சென்னையில் உள்ள பிரசாத் லேப் ஸ்டுடியோவில் துவங்கியது.