தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி, லைகா, முருகதாஸ், அனிருத் என மாபெரும் கூட்டணியில் உருவான ‘தர்பார்’ படம் கடந்த 9ஆம் தேதி 3 மொழிகளில் உலகமெங்கும் ரிலீசானது.
இப்படத்தை பார்த்த பலரும் பாராட்டி வரும் நிலையில் படமும் நல்ல வசூல் வேட்டையை செய்து வருகிறது.
முதல் 4 நாட்களில் ரூ- 150 கோடியை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்து இருந்த்து.
ரஜினி பேர சொல்ல ஏன் பயம்?; சாகுற காலத்துல நடிக்கிறார்.. மன்சூர் அலிகான்
தற்போது படம் ரிலீசாகி 25 நாட்களை நெருங்கும் நிலையில் தர்பார் படத்தால் நஷ்டம். ரஜினிகாந்த் பணத்தை திருப்பி தர வேண்டும் என விநியோகஸ்தர்கள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.
இவர்களை ரஜினியை சந்திக்க சென்றதாகவும் அவர் பின்னர் சந்திப்போம் என்று கூறியதாகவும் தகவல்கள் பறந்தன.
இதனால் ரஜினி ரசிகர்களும் நடுநிலையான ரசிகர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
‘தர்பார்’ வசூலை தகர்க்க வாட்ஸ்அப்பில் ஆப்பு; போலீசில் லைகா புகார்
படம் நிஜமாகவே நஷ்டம் என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வரவில்லை. ரஜினியோ அல்லது லைகா நிறுவனமோ இதுபற்றி வாய் திறந்தால் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்கும் என நம்பலாம்.
தர்பார் திடீரென நஷ்டம் என சிலர் கிளம்பி வருவதற்கு அரசியல் பின்னணி தான் காரணம்.
காலா படம் நஷ்டம் என்றனர். பின்னர் அப்பட தயாரிப்பாளர் தனுஷ் உண்மையை சொன்ன பிறகு அது அப்படியே கானல் நீரானது.
ரஜினி மீது என் கண்கள்; அவர்தான் இந்திய சூப்பர் ஸ்டார்.. – குஷ்பூ
அது போல லைகா தயாரித்த ‘2.0’ படம் நஷ்டம் என்றார்கள். ஆனால் தயாரிப்பாளருக்கு பெரும் லாபம் கிடைக்காவிட்டாலும் அசல் தொகை கிடைத்துவிட்டது. அதுபோல் படத்தை வெளியிட்டவர்களுக்கும் லாபம்தான் என்றனர்.
ரஜினி படத்திற்கு மட்டும் இதுபோல் பிரச்சினைகள் வருவது ஏன்? இதோ ஒரு சின்ன ப்ளாஷ்பேக்…
அண்ணாமலை படத்தின் போது (1992) அந்த படத்தின் விநியோக உரிமையை பெற்றிருந்தார் ரஜினி. அந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, கே பாலசந்தர் தயாரித்திருந்தார்.
தமிழகத்தில் ஜெயல்லிதாவின் ஆட்சி நடைபெற்ற சமயம் அது.
ரஜினியின் முதல் டிவி நிகழ்ச்சி; உன்னத மனிதர் என Bear Grylls நெகிழ்ச்சி
அண்ணாமலை பட சந்திப்பின் போது ரஜினி பேசியதாவது… இந்த படம் நல்லா வந்திருக்கு. நிறைய விலை கொடுத்து வாங்கியுள்ளேன்.
நஷ்டம் அடைந்தால் திருப்பி தருகிறேன். லாபம் அடைந்தால் திருப்பி தர வேண்டாம். ஆனா எவ்வளவு லாபம் சொன்னா சந்தோஷம். நீங்க கரெக்ட்டா இருந்தா நானும் கரெக்டா இருப்பேன். ஆனா நீங்க வேற மாதிரி நடந்தா அப்போ நானும்தான்.. என்று கே.பி முன்னிலையிலேயே பேசியிருந்தார் ரஜினி. (இப்போதும் அந்த வீடியோ யுடிப்பில் உள்ளது),
தான் தயாரித்த பாபா படம் தோல்வி ஆனதால் அந்த பட நஷ்டத்தை திருப்பி கொடுத்தார் ரஜினிகாந்த். இதுவரை எந்த ஒரு தயாரிப்பாளரும் நடிகரும் அப்படி செய்ததில்லை.
என் படத்தை வாங்கியவர்கள் யாரும் நஷ்டம் அடைய கூடாது என ரஜினி அப்போதே சொல்லியிருந்தார்.
ஒரு முறை விஜயகாந்திடம் உங்கள் படம் நஷ்டம் அடைந்தால் இதுபோல் செய்வீர்களா? என்று கேட்டனர்.
அவருக்கு கிடைத்த லாபத்தில் தான் பணத்தை திருப்பி கொடுத்தார். என பதிலளித்தார் கேப்டன். ஆக பாபா படம் ரஜினிக்கு லாபத்தை கொடுத்திருந்தது.
ஆக ரஜினி ஒவ்வொரு முறையும் இதுபோல் பிரச்சினைகளை சந்திப்பது தெரிகிறது.
ரஜினிக்கு விதிக்கப்பட்ட ரூ. 66.22 லட்சம் அபராதம் ரத்து; கோர்ட் அதிரடி
இதனையடுத்து சில வருடங்களுக்கு பின்னர் வெளியான குசேலன், லிங்கா பட நஷ்டத்தின் போதும் ரஜினியை தொல்லை கொடுத்தனர்.
ஆனால் இந்த இரு படங்களையும் ரஜினி தயாரிக்காத போதும் பணத்தை திருப்பிக் கொடுத்தார் ரஜினி.
ரஜினி படத்தை அவரது பட தயாரிப்பாளர்கள் நிறைய விலைக்கு விற்றுவிடுவதும் இதில் ஒரு காரணமாக உள்ளது.
எனவே ரஜினி திருப்பி தருவார் என்ற நம்பிக்கையில் அவரையே டார்கெட் செய்வது சரியல்ல.
ஒரு வேளை படம் நிஜமாகவே நஷ்டம் என்றால் பட தயாரிப்பாளரிடம் தான் நஷ்டத்தை கேட்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் ரஜினியின் அரசியல் வருகையை அறிந்து சிலர் இதுபோல் செய்வதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
எம்ஜிஆர் போல பளபளப்பு இல்லாத ரஜினி எப்படி சாதித்தார்.?; திருமாவளவன் பேச்சு
அண்மைக்காலமாக ரஜினியின் சம்பளத்தை விஜய் முந்திவிட்டார் என்ற பொய்யான தகவல் வெளியானது.
அதுபோல் டிஸ்கவரி சேனல் சூட்டிங் சமயத்தில் ரஜினிக்கு விபத்து, சூட்டிங் கேன்சல் என்ற பொய்யான தகவலும் வெளியானது.
அதுபோல் வருமான வரி துறையை ரஜினி ஏமாற்றி விட்டதாக கோர்ட் அவருக்கு ரூ. 66.22 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக பொய் தகவலை முன்னணி செய்திதாள் வெளியிட்டது.
அதுபோல் தர்பார் இசை விழாவுக்கு வராத நயன்தாராவை அவர் வந்துள்ளதாகவும் ரஜினியின் பேச்சை கேட்டு வெட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இதுபோல் பொய்யான தகவல்களை பரப்புவதையே தொழிலாக சிலர் செய்து வருவதும் இங்கே கவனிக்கத்தக்கது.
தொடர்ந்து இதுபோல் ரஜினியை ஓரங்கட்ட பல அரசியல் வேலைகள் தமிழகத்தில் நடந்தேறி வருகிறது.
அரசியலின் மூலதனமே எதிர்ப்பு தானே… ஆகட்டும் ரஜினி அவர்களே…