அமிதாப் பட அறிவிப்பை ரஜினியை தவிர யார் வெளியிட முடியம்.. : எஸ்ஜே. சூர்யா

அமிதாப் பட அறிவிப்பை ரஜினியை தவிர யார் வெளியிட முடியம்.. : எஸ்ஜே. சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

uyarndha manithanஇயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. கடந்த ஆண்டு ஸ்பைடர், மெர்சல் என வில்லத்தனத்திலும் மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள இறவாக்காலம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் தனது அடுத்த படத்தை பற்றி அறிவிப்பை அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் படத்தின் சுரேஷ் கண்ணன் வரவேற்று பேசினார்.

முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் தமிழ்வாணன், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது படத்தின் தலைப்பையும், போஸ்டரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

அந்த காணொளியை பத்திரிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியோடு திரையிட்டு காண்பித்தார் எஸ்.ஜே.சூர்யா.

ஸ்ரீதிருச்செந்தூர் முருகன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.சுரேஷ்கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் ஆகியோர் இந்த உயர்ந்த மனிதன் படத்தை தயாரிக்கின்றனர்.

எத்தனையோ தருணங்களில் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் இந்த சந்திப்பு எனக்கு மிகவும் ஸ்பெஷல். நேற்று ட்விட்டரில் என் அடுத்த படத்தை பற்றிய பிரமாண்ட அறிவிப்பு இருக்கும் என பதிவிட்டதற்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ். நான் அடுத்து நடிக்கும் படம் உயர்ந்த மனிதன். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிறது.

இந்தியன் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சார் முதன்முறையாக இந்த தமிழ் படத்தில் நடிக்கிறார். நான் இந்தியில் நடிகனாக அறிமுகம் ஆகிறேன். நான் முக்கியமாக நன்றி சொல்ல வேண்டியது இயக்குனர் தமிழ்வாணன் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோருக்கு தான்.

இயக்குனர் கொண்டு வந்த கதை தான் அமிதாப் சார் வரைக்கும் இந்த படத்தை கொண்டு சென்றிருக்கிறது. 2 வருடங்களுக்கு மேலாக இந்த படத்துக்கான வேலைகள் நடந்து வருகிறது.

திரைக்கதை மட்டும் ஒரு வருடம் எழுதியிருக்கிறார். ஸ்கிரிப்டை அமிதாப் பச்சன் சாரிடம் கொண்டு சென்று கொடுத்தோம். எல்லாம் படித்து முடித்த பிறகு அவரை இறுதியாக ஒரு முறை சந்தித்தோம்.

கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, சில சந்தேகங்கள் இருக்கின்றன, அவற்றை விளக்க வேண்டும் என்றார். அதை கேட்ட பிறகு கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்றார். அதை யார் அறிவிக்க முடியும் என்றால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் தான் முடியும்.

அவரும் உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே அழைத்து எங்களை வாழ்த்தி பட அறிவிப்பை வெளியிட்டார்.

நான் ஏதோ சாதனை செய்து விட்டது போல பேசுவதாக நினைக்க வேண்டாம். இந்த படத்தை ஒருங்கிணைத்ததே எனக்கு ஒரு பெரிய சாதனை தான். அமிதாப் பச்சன் சாரின் 2019 காலண்டர் காட்டும்போது நானே வியந்து போனேன், 5 நாட்கள் கூட எங்கள் படத்துக்கு அதிகமாக ஒதுக்க முடியாது என்ற நிலையில் மிகவும் பிஸியாக இருந்தார். 2019ல் மட்டும் 6 படம், கோன் பனேகா க்ரோர்பதி, விளம்பரங்கள் என இந்த வயதிலும் அவ்வளவு பிஸியாக இருக்கிறார்.

அவர் நமக்கெல்லாம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த படத்துக்கு மிக பொருத்தமான தலைப்பு நடிகர் திலகம் சிவாஜி சார் அவர்களின் உயர்ந்த மனிதன். இந்த தலைப்பை ஏவிஎம்மிடம் இருந்து வாங்கியிருக்கிறோம்.

இந்த படத்துக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்த ஏஆர் முருகதாஸ் அவரகளுக்கும் நன்றி. கஷ்டத்தில் இருக்கும்போது இயக்குனர் சொன்ன வார்த்தைகளே தெம்பை கொடுத்தது. இந்த படம் இந்தியா முழுக்க மட்டுமின்றி சைனா வரை போகும். கதை அப்படி அமைந்திருக்கிறது என்றார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.

இந்த கதையை எழுதி முடித்தபோதே எஸ்.ஜே.சூர்யா சாரிடம் சொன்னேன். இந்த படத்தை ஆசைப்பட்டது மட்டும் தான் நான், இதை இந்த அளவுக்கு கொண்டு போனது சூர்யா சாரும், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் சாரும் தான். அமிதாப் பச்சன் சார், சூர்யா சார் என இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் கதை இது.

படத்தை பற்றிய மற்ற தகவல்களை அவ்வப்போது தெரிவிக்கிறோம் என்றார் இயக்குனர் தமிழ்வாணன்.

செப்டம்பரில் கட்சி; டிசம்பரில் மாநாடு; ரஜினி அதிரடி திட்டம்

தலைவர் ரஜினி படத்துக்கு ஒத்திகை பார்க்கிறேன்.. : நவாசுதீன் சித்திக்

செப்டம்பரில் கட்சி; டிசம்பரில் மாநாடு; ரஜினி அதிரடி திட்டம்

செப்டம்பரில் கட்சி; டிசம்பரில் மாநாடு; ரஜினி அதிரடி திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthநடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்து விட்டார். இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு 8 மாதங்கள் ஆனாலும் இன்னும் கட்சி பெயர் மற்றும் கொடி, கொள்கையை அவர் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்தார்.

நிர்வாக உறுப்பினர்கள் ஜாதி அமைப்பில் இருக்க்கூடாது, 18வயதுக்குள் இருக்க கூடாது, கொடியை ப்ளாஸ்டிக்கில் பயன்படுத்த கூடாது, போதை பழக்கத்துக்கு அடிமையாக இருக்க கூடாது உள்ளிட்ட பல விவரங்கள் இருந்தன.

ரஜினியின் இந்த விதிமுறைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ரஜினி தன் கட்சியை அடுத்த செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி சமயத்தன்று அறிவிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அல்லது அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று அறிவிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனையடுத்து வரும் டிசம்பரில் கட்சி மாநாட்டை திருச்சி அல்லது கோவையில் நடத்த ரஜினி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமிதாப் பட அறிவிப்பை ரஜினியை தவிர யார் வெளியிட முடியம்.. : எஸ்ஜே. சூர்யா

எஸ்.ஜே.சூர்யா படம் மூலம் அமிதாப்பச்சன் தமிழில் அறிமுகம்; டைட்டிலை வெளியிட்டார் ரஜினி

எஸ்.ஜே.சூர்யா படம் மூலம் அமிதாப்பச்சன் தமிழில் அறிமுகம்; டைட்டிலை வெளியிட்டார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amitabh Bachan and SJ Suriya teams up for Uyarndha Manithanபிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதன் முறையாக தமிழ் படத்தில் நடிக்கிறார்.

இதில் மற்றொரு நாயகனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் தயாராகிறது.

இப்படம் மூலம் எஸ்ஜே. சூர்யா இந்திக்கு செல்கிறார்.

இப்படத்தை தமிழ்வாணன் இயக்க, திருச்செந்தூர் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கு உயர்ந்த மனிதன் என்று பெயரிட்டுள்ளனர்.

இப்பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை ரஜினிகாந்த் வெளியிட்டார்.

மேலும் அமிதாப் உடன் சூர்யா இருக்கும் படத்தை பார்த்துவிட்டு உங்கள் இடத்தில் நான் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறினார்.

பல வருடங்களுக்கு முன் ஏவிஎம் புரொடக்சன்ஸ் சார்பில் சிவாஜி நடித்த படத்தின் தலைப்பும் உயர்ந்த மனிதன் என்பது குறிப்பிடத்தக்கது.

Amitabh Bachan and SJ Suriya teams up for Uyarndha Manithan

uyarndha manithan

 

கமல்-விக்ரம்-அக்‌ஷராஹாசன் இணையும் படம் இன்று தொடங்கியது

கமல்-விக்ரம்-அக்‌ஷராஹாசன் இணையும் படம் இன்று தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram and akshara haasanராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார்.

ராஜேஷ் எம் செல்வா இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இதில் முக்கிய வேடத்தில் கமலின் 2வது மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் இன்று முதல் துவங்கியது.

இது ராஜ்கமல் நிறுவனத்தின் 45வது தயாரிப்பாகும்.

கடவுளை கலாய்க்கும் *டைம் இல்ல* படத்தில் சிம்பு பாட்டு

கடவுளை கலாய்க்கும் *டைம் இல்ல* படத்தில் சிம்பு பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuநடிகர் கமல் ஒரு நாத்திகவாதி. அவர் வழியில் சொன்னால் அவர் ஒரு பகுத்தறிவாளர்.

அவரின் ரசிகர் ஒருவர் *டைம் இல்ல* படத்தில் நடித்து வருகிறார்.

அதில் ஒரு காட்சியில் அம்மன் சிலையை கிண்டல் செய்கிறார்.

எனவே நீ… 30 நாட்களில் உயிர் இழந்து விடுவாய் என்று அசரீரி குரல் ஒலிக்கிறது.

எனவே ஜாலியாக வாழ நினைக்கிறாலாம் அந்த ஹீரோ.

30 நாட்களில் 15 நாட்களை ஜாலியாக கழிக்கிறார் ஹீரோ.

அப்போது நாயகன் பாடுவது போன்ற ஒரு பாடல் உள்ளதாம்.

அந்த பாடலை தான் நடிகர் சிம்பு பாடவிருக்கிறாராம்.

*ஜாங்கோ* படத்தில் சதீஷுடன் இணையும் டப்மேஷ் மிருணாளினி

*ஜாங்கோ* படத்தில் சதீஷுடன் இணையும் டப்மேஷ் மிருணாளினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jangoடப் மேஷ் வீடியோக்களின் மூலம் இளைஞர்களிடையே பிரபலமானவர் ‘மிருணாளினி’.

எனவே இவருக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.

அப்படம் வெளியாவதற்குள் ‘மிருணாளினி’ திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.

“ஜாங்கோ” என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் சதீஷ் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் கருணாகரன், ராம்தாஸ், R.J. ரமேஷ், ஹரிஷ் பெராடி, சந்தான பாரதி, சிவாஜி, கஜராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் மனோ கார்த்திகேயன் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியிருக்கிறது

More Articles
Follows