தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில்.. தனக்குத் திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு சென்று விட்டால் தன் தந்தை தனிமையில் இருப்பார். எனவே அவரை கவனித்துக் கொள்ள தன் தந்தைக்குத் துணையாக ஒரு பெண் வேண்டும் என எண்ணி “தந்தைக்கு மணம் முடிக்க பெண் தேடுவார்.
அப்போதுதான் நயன்தாராவை ரஜினிக்கு மணம் முடிக்க யோகி பாபு உடன் இணைந்து திட்டம் போடுவார்.
ஆனால் அதை நிறைவேற்றுவதற்குள் ஒரு விபத்தில் இறந்துவிடுவார் நிவேதா தாமஸ்.
இது போன்ற ஒரு சம்பவம் தற்போது ஒருவரின் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது.
கணவரை இழந்த தன் தாய்க்கு (59) மறுமணம் செய்து வைத்துள்ளார் கேரளாவை சேர்ந்த 2 மகள்கள்.
கேரளா திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரதிமேனன்(59). இவரது கணவர் கடந்த ஆண்டு உயிர் இழந்தார்.
இவர்களுக்கு ப்ரீத்தி, பிரசீதா என இருமகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
தன் தாய்.. அவரின் கணவரை இழந்து, தனிமையில் தவிப்பதைப் பார்த்து உணர்ந்துள்ளனர்.
நீண்ட போராட்டத்திற்குப்பின் தன் தாய் ரதிமேனனை மறுமணத்திற்கு சம்மதிக்கவும் வைத்துள்ளனர்.
மனைவியை இழந்து வாழ்ந்து வரும் 63 வயதான திவாகரன் என்பவரை பார்த்து தங்கள் தாயை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவரும் சம்மதிக்கவே இவர்களின் திருமணத்தை இரண்டு மகள்களும் நடத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பே கடந்த 2019ல் விவாகரத்து ஆன தன் தாய்க்கு மறுமணம் செய்து வைத்தார் 23 வயதான கோகுல் ஸ்ரீதர் என்ற ஒரு மகன்.
Darbar movie scene happened in real life at Kerala