தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிப்பில் ரஜினி முருகதாஸ் அனிருத் ஆகியோரது கூட்டணியில் உருவான தர்பார் படம் நேற்று முந்தைய தினம் ஜனவரி 9ல் ரிலீசானது.
இதில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் தர்பார் பட வசூலை தகர்க்க சிலர் திட்டமிட்டூள்ளனர்.
தியேட்டரில் தர்பார் படம் பார்க்கும்போதே மொபைல் போனில் படம் பிடித்து அதை 3 பாகங்களாக பிரித்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளனர்.
மேலும் அத்துடன் ஒரு ஆடியோ பதிவையும் ஒருவர் பதிவு செய்துள்ளார்.
அதில்… தர்பார் படத்தை தியேட்டர்ல போய் யாரும் பார்க்க கூடாது. இந்த வீடியோவை எல்லாருக்கும் பகிருங்கள் என பேசியுள்ளான்.
இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்த நிலையில் லைகா தயாரிப்பு தரப்பு சார்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர்கள் கே.ராஜன் மற்றும் டி.சிவா இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
தலைவர் ரஜினியின் தர்பார் படம் நல்ல வசூலை செய்து வருகிறது. யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஜல்லிக்கட்டு காளை தர்பார் படம்.
ஆனால் இது போல வாட்ஸ் அப்பில் பரப்பும் தீவிரவாதிகளை சும்மா விடக்கூடாது. அது கொலை குற்றவாளிகளுக்கு நிகரானவர்கள் அவர்கள்.
அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாட்ஸ் அப்பில் அனுப்புபவர்களும், பார்ப்பவர்களையும் டிராக் செய்து வருகின்றனர்.
அதனால் மக்கள் யாரும் வாட்ஸ் அப்பில் பார்க்கவேண்டாம்” என அவர்கள் தெரிவித்தனர்.
Darbar scences goes viral in WhatsApp Lyca filed police case