ரஜினி மீது என் கண்கள்; அவர்தான் இந்திய சூப்பர் ஸ்டார்.. – குஷ்பூ

ரஜினி மீது என் கண்கள்; அவர்தான் இந்திய சூப்பர் ஸ்டார்.. – குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khusboo talks about Rajini and his style in Darbar movieலைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உலகமெங்கும் வெளியானது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தலைவர் 168 படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ள குஷ்பு மற்றும் மீனா, நைனிகா ஆகியோர் தர்பார் படத்தை பார்த்துள்ளனர்.

இந்த படம் குறித்து குஷ்பூ கூறியதாவது…

“ரஜினிகாந்த் காந்தம் போல ஈர்க்கிறார். அவர் மீதுதான் என் கண்கள் இருந்தன. அவர் தான் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார். தர்பார் படம் பொங்கல் விருந்து. முருகதாஸுக்கு நன்றி” என குஷ்பு தெரிவித்துள்ளார்.

ச்சும்மா கிழி..பொங்கல் சமயத்தில் தீபாவளி விருந்து. தர்பார் விமர்சனம் இங்கே (4/5)

Khusboo talks about Rajini and his style in Darbar movie

பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் பங்கேற்கும் ‘இருவர்’ என பெயரிடப்பட்டுள்ள ‘மடை திறந்து – 3’ இசை நிகழ்ச்சி

பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் பங்கேற்கும் ‘இருவர்’ என பெயரிடப்பட்டுள்ள ‘மடை திறந்து – 3’ இசை நிகழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Srinivas Vijay Prakashபிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் ஆகியோர் ‘மடை திறந்து – 3’ ல் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி வருகின்ற 11 ஜனவரி 2020, சனிக்கிழமை அன்று ‘கோர்ட்யார்ட்’, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, சென்னையில் நடைபெறுகிறது.

‘மடை திறந்து’ என்பது ‘NOISE AND GRAINS’ நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற 12 இசை நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு தொடராகும். உங்களுக்கு பிடித்த பாடல்களுக்குப் பின்னால் இருக்கும் சுவையான, சுவராஸ்யமான சம்பவங்களை உங்களுக்கு பிடித்த பாடகர்களே பகிர்ந்துக் கொள்வார்கள் என்பது இந்த இசை நிகழ்ச்சி தொடரின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

‘NOISE AND GRAINS’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்கம், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டுவரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ ஆர் ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, எஸ் பி பாலசுப்பிரமணியம் – யேசுதாசின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் ‘மடை திறந்து’ இசை நிகழ்ச்சி தொடர்களை நடத்தியவரும் பெருமைக்குரியது. பிப்ரவரி மற்றும் மார்ச் 2020 இல் பாடகர் சித் ஸ்ரீராமுடன் ஒரு தென்னிந்திய இசை சுற்றுப்பயணத்தையும் நடத்தவிருக்கிறது.

இந்த தொடரின் முதல் அத்தியாயத்தில் ஆண்ட்ரியா மற்றும் சின்மயி ஆகியோர் இடம் பெற்றிருந்த நிலையில் முன்னணி பாடகர் ஹரிஹரன் இரண்டாவது அத்தியாயத்தில் பங்கேற்றார்.

“இருவர்” என பெயரிடப்பட்டுள்ள இந்த மூன்றாவது அத்தியாயத்தில் தென்னிந்தியாவின் முக்கிய பாடகர்கள், சீனிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் ஆகியோருடன் இணைந்து வளர்ந்து வரும் இளம் பாடகர்களான சரண்யா சீனிவாஸ் மற்றும் ஹரிப்ரியா ஆகியோர் இடம் பெறுகின்றனர். இந்த இசை நிகழ்ச்சி வருகின்ற 11 ஜனவரி 2020 ஆம் தேதி மாலை 06.00 மணிக்கு பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி கோர்டியார்டில் நடைபெறுகிறது.

இந்த இசை நிகழ்ச்சிக்கான உங்களது அனுமதி சீட்டுக்களை www.grabmyticket.com என இணையதளத்தில் பெறலாம்.

மூன்றாம் வாரத்தில் வெற்றிநடைபோடும் “வி1”

மூன்றாம் வாரத்தில் வெற்றிநடைபோடும் “வி1”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

V1 movieபுதிய முயற்சி பாராட்டும்படி இருந்தால் அதற்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் என்றும் அளவில்லாமல் அளிப்பதில் முதன்மையானவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அவர்களின் அன்பால் “வி1” திரைப்படம் தற்போது மூன்றாம் வாரத்தில் முன்னோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது.

பல எதிர்பார்ப்புகளோடு இன்று வெளியாகியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “தர்பார்” படம் வெளியான இந்நாளிலும் “வி1” திரைப்படம் சில திரையரங்குகளில் திரையிடப்படுவது பெரும் மகிழ்ச்சி என்கின்றனர் “வி1” படக்குழுவினர்.

இந்த வெற்றிக்கு வித்திட்ட அனைத்து ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை “வி1” படக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தங்களது புதிய பட அறிவிப்பை மிக விரைவில் “வி1” படக்குழு தெரிவிக்கவுள்ளது.

BREAKING பெருமைமிகு தமிழன் ரஜினி தமிழகத்திற்கு உதவனும்.. – கமல்

BREAKING பெருமைமிகு தமிழன் ரஜினி தமிழகத்திற்கு உதவனும்.. – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini must help tamilnadu as it done lot to him says Kamalகமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் ஈடு இணையற்ற நட்பு நாம் அறிந்த ஒன்றுதான். இவர்கள் இருவரும் கடந்த 45 ஆண்டுகளாக சினிமாவில் கோலோச்சி கொண்டிருக்கின்றனர்.

கமல் தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்துவிட்டார். ரஜினி விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழக நலனுக்காக ஒரு வேளை நாங்கள் இணைய வேண்டிய சூழ்நிலை வந்தால் அரசியலில் இணைந்து செயல்படுவோம் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஜனவரி 9ஆம் தேதி இரவு ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல பத்திரிகையாளர் என் ராம் உடன் கலந்துக் கொண்டார்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் கமல்.

அப்போது அவர் பேசும்போது… என் நண்பர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டுக்கு உதவ வேண்டும். ஏனென்றால் தமிழகம் அவருக்கு நிறைய உதவி செய்துள்ளது.

அவர் எங்கு பிறந்திருந்தாலும் தற்போது ஒரு பெருமைமிக்க தமிழன் ஆவார்.

இவ்வாறு கமல்ஹாசன பேசினார்.

Rajini must help tamilnadu as it done lot to him says Kamal

https://twitter.com/maiamofficial/status/1215281203030265857

BREAKING ‘தர்பார்’ படத்தில் சசிகலா டயலாக்ஸை நீக்க வேண்டும் என எச்சரிக்கை

BREAKING ‘தர்பார்’ படத்தில் சசிகலா டயலாக்ஸை நீக்க வேண்டும் என எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lawyer condemns Sasikala dialogue in Rajinis Darbar சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் சிறை கைதிகள் செல்போன் வைத்திருப்பார்கள். அதை ரஜினி கேட்கும்போது தென்னிந்தியாவில் கைதிகள் ஜாலியா ஷாப்பிங் போயிட்டு வர்றாங்க சார்…” என்று மற்றொரு போலீஸ் கூறுவதாக காட்சி இருக்கும். அதற்கு ரஜினி ஓஹ்ஹோ… என கலாய்த்து இருப்பார்.

மேலும் இந்த காட்சிக்கு தமிழக அமைச்சர் ஜெயக்குமார்… ’பணம் பாதாளம் வரை பாயும். சில நேரம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது. சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த கருத்து நல்ல கருத்துதான்” என ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் வினய்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது..

“வினய்குமாரின் அறிக்கையில் சசிகலா ஷாப்பிங் சென்றதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அப்படி இருக்க தர்பார் படத்தில் சசிகலாவை மறைமுகமாக விமர்சித்த வசனத்தை நீக்க வேண்டும்.

அப்படி நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆதாரமின்றி அமைச்சர் ஜெயக்குமார் பேசினால் அவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Lawyer condemns Sasikala dialogue in Rajinis Darbar

MGR-ஐ புகழ்ந்து சசிகலாவை கலாய்த்த ‘தர்பார்’ ரஜினி; அமைச்சர் பாராட்டு

MGR-ஐ புகழ்ந்து சசிகலாவை கலாய்த்த ‘தர்பார்’ ரஜினி; அமைச்சர் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbar Rajini slams Sasikala Jail shopping incidentலைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான தர்பார் படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகியுள்ளது.

இந்த படத்தில் ரஜினி போலீஸ் கமிஷ்னராக நடித்துள்ளார்.

இன்று படத்தை பார்த்த ரசிகர்கள் தலைவர் வேற லெவல் என புகழ்ந்து வருகின்றனர்.

இந்த படத்தின் சில வசனங்கள் அரசியல் கட்சி தலைவர்களை மறைமுக கலாய்துள்ளது.

ஒரு காட்சியில் எம்ஜிஆர் அவருடைய சினிமாவில் ஏன் 3 முறை அடிவாங்குவார்? என தெரியுமா? என ரஜினி கேட்பார்.

அதன்பின்னர் அவரே பதில் சொல்வார். தன் எதிரியின் பலம் என்ன? என்பதை தெரிந்துக் கொள்வதற்காக தான் அந்த அடிகளை வாங்குவார் என்பார்.

மற்றொரு காட்சியில் சிறை கைதிகள் செல்போன்களில் பேசிக் கொண்டு இருப்பார்கள்.

அப்போது ஜெயில்ல செல்போன் வச்சிருக்காங்க என்பார். தென்னிந்தியாவில் ஒரு கைதி வெளியே ஷாப்பிங் போய்ட்டு வராங்க சார் என்பார் ஒரு அதிகாரி. அதற்கு ரஜினி.. ஓஹ்ஹஉ என்று கிண்டலாக ஒரு சவுண்ட் விடுவார்.

அதுபோல் மற்றொரு காட்சியிலும் கர்நாடக சிறையில் உள்ள சசிகலாவை கலாய்த்து வசனங்கள் இருக்கும்.

இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளதாவது…

“தர்பார் படத்தில் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கின்ற பொருளால் வரும் பணத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கும் மனிதர்களை காட்டியுள்ளனர்.

அதாவது பணம் பாதாளம் வரைக்கும் பாயும் அதேசமயத்தில் பணம் சிறைச்சாலை வரைகூட பாயும் என்று சசிகலா அவர்களை சுட்டிக்காட்டி படம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கு விசாரணையில் உள்ளதால் அதை பற்றி கருத்து கூற விரும்பவில்லை.

அதே சமயத்தில் சினிமா வாயிலாக நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என தெரிவித்தார் அமைச்சர்.

Darbar Rajini slams Sasikala Jail shopping incident

More Articles
Follows