தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘தர்பார்’ படம் இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
லைகா தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
ஆனால், தர்பார் படம் சரியான வசூல் கொடுக்கவில்லை என்றும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஓரிரு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று முருகதாஸ் மற்றும் ரஜினி ஆகியோரை சந்திக்க முயற்சித்து வருகின்றனர்.
தர்பார் நஷ்டத்திற்கு பேராசையே காரணம் என பாரதிராஜா பேச்சு
அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த சம்பவத்திற்கு முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சென்னையில் போஸ்டர்களையும் ஒட்டியுள்ளனர்.
இந்த நிலையில் இழப்பீடு கோரி தன்னை மிரட்டுவதாக குற்றஞ்சாட்டி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மனு கொடுத்துள்ளார்.