தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையில் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியான படம் ‘சைக்கோ’.
இந்த படத்தில் உதயநிதி, நித்யா மேனன், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
படத்தை பார்த்த பலரும் பாராட்டினாலும் ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.
அதாவது முக்கியமாக சைக்கோ கேரக்டர் சில கொலைகளை செய்யும் போது அந்த இடத்தில் இரு சிசிடிவி கேமரா கூடவா இல்லை.
15 கொலைகளை செய்த ஒரு சைக்கோவை எப்படி ஒரு பெண் மன்னிக்கலாம் என பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளன.
மாஸ்டர் ஆஃப் மர்டர்… சைக்கோ விமர்சனம் (18+)
இந்த நிலையில் சிசிடிவி கேமரா குறித்த காட்சிக்கு உதயநிதி தன் ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதா மரணம் காட்டி பதிலடி கொடுத்துள்ளார்.
அந்த சிசிடிவி இல்லாத காட்சிகள் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது… கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடந்த போது..
அதாவது அந்த காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் என கிண்டலடித்துள்ளார்.
Udhayanidhi clarifies Why No CCTV in murder scenes of Psycho
அட. அது கூட சரிதானே..