தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் இயக்க அனிருத் இசையமைக்க விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படம் நாளை அக்டோபர் 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தமிழகத்தில் அதிகாலை சிறப்பு காட்சிகள் அனுமதி இல்லை என்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் லியோ படத்தை வரவேற்கும் வகையில் அதிரடியான போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் அடித்து மாஸ் காட்டி வருகின்றனர்.
ஒரு போஸ்டரில் வேட்டைக்கும் ரெடி கோட்டைக்கும் ரெடி.. என்று வாசகத்தை அச்சிட்டுள்ளனர். மற்றொரு போஸ்டரில் விடியல் ஆட்சி முடிந்து விஜய் ஆட்சி தொடங்கட்டும் என நெல்லை மாவட்ட ரசிகர்கள் போஸ்டர் அடித்து பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
கூடுதல் தகவல்கள்…
அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாததற்கு உதய்நிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் ஒரு காரணம் என ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதிகாலை 4 மணி காட்சி தொடர்பான நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தில் ரசிகர் ஒருவர் மரணம் அடையவே அதிகாலை காட்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு விஜய் ரசிகர்கள் டாஸ்மாக்கால் தினம் தினம் ஆயிரம் உயிர்கள் மரணிக்கும் வேளையில் ஒரு உயிரை பற்றி கவலைப்படுவது ஏன்? என விஜய் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இது விஜய்யின் வளர்ச்சியை தடுக்கவே திமுகவின் அரசியல் ஆட்டம் எனவும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay fans posters against DMK ruling government