தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து பலரின் பாராட்டையும் பெற்று இருந்தார்.
தற்போது அஜித்துக்கு ஜோடியாக ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னாரில் ஐஸ்வர்யா ராய் பெயரில் ஒரு ஹெக்டேர் நிலம் உள்ளது.
இந்த நிலத்திற்கு கடந்த ஓராண்டாக அவர் நில வரி செலுத்தவில்லை என கூறப்படுகிது.
இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது நாசிக் மாவட்ட வருவாய்த்துறை.
அந்த நோட்டீஸில் 10 நாட்களுக்குள் Rs 21,960 தொகையை நில வரியாக செலுத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என (under section 174 of the Maharashtra Land Revenue Act, 1966) சட்டப்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Aishwarya Rai got notice for non payment of land tax in Nashik