தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினையால் அண்ணாத்த சூட்டிங்கில் கலந்துக் கொள்ளாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.
மேலும் தான் தொடங்கவுள்ள அரசியல் கட்சி பணிகளையும் ஒத்தி வைத்துள்ளார்.
அண்மையில் கூட தீபாவளியன்று தன் போயஸ் தோட்ட வீட்டில் இருந்த படியே ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் ரஜினிகாந்த்.
கொரோனா பிரச்னையால் தனது உடல்நலனில் அதிக அக்கறை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினிக்கு தற்போது காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் உலா வந்தன.
இதனால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவரது மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கூறியதாவது… “யாரோ விஷமிகள் வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர்.
அவர் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Shocking rumour about Rajinikanth’s health clarified