தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கௌதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.
ஆனால் இக்கதையை முதலில் ரஜினியிடம் தான் சொன்னாராம். அதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
துருவ நட்சத்திரம்’ கதையைத்தான் ரஜினி சாரிடம் சொன்னேன். தாணு சார்தான் கூட்டிட்டுப்போனார். காலையில் கதையைக் கேட்டவுடன், ‘சூப்பரா இருக்கு. யாரெல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்கள், எவ்வளவு நாள் தேவைப்படும்’ என்று கேட்டார். ‘படம் பண்ணலாம். நீ யாரிடமும் சொல்லாதே. இச்செய்தி தீயா பத்திக்கும். வீட்டில் மட்டும் சொல்லிடு’ என்று சந்தோஷமாக என்னை அனுப்பிவைத்தார் தாணு.
மாலையில் தாணு சார் போனில், ‘இல்லடா… ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறேன். ரஜினிகிட்ட யாரோ ஏதோ சொல்லிட்டாங்க.
இப்போது நடக்காது. நான் இரஞ்சித்தை வச்சுப் பண்ணப்போறேன்’ என்று சொன்னார். இதுதான் நடந்தது.” என்று தெரிவித்துள்ளார்.
இது கபாலி படத்திற்கு முன் நடந்த செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.