தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்த ‘இருமுகன்’ கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் வந்தபோதும், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் பட்டைய கிளப்பி வருகிறது என விநியோகிஸ்தர்களே தெரிவித்துள்ளனர்.
படம் வெளியாகி ஒரு வாரத்தில் ரூ. 70 கோடி வசூலை நெருங்கியுள்து.
இந்நிலையில் இதன் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.
அப்போது வெற்றிக்கு காரணமாக ரசிகர்களுக்கு நடிகர் விக்ரம், இயக்குனர் ஆனந்த் சங்கர், தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அஞ்சனா பேசும்போது…
“சிலர் பணத்துக்காக வாழ்கிறார்கள். நான் சாப்பிடுவதற்காக வாழ்கிறேன்.
விக்ரம் சார் நடிப்பதற்காகவே வாழ்கிறார்.” என்று பேசினார்.