தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த் ஷங்கர்.
இவரின் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இவரின் புதிய படத்தில் ‘அவன் இவன்’ படத்திற்கு பிறகு ஆர்யா & விஷால் இணைந்து நடிக்கின்றனர்.
இது விஷாலுக்கு 30வது படம். ஆர்யாவுக்கு 32வது படமாகும்.
மினி ஸ்டுடியோ சார்பாக வினோத் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்பட சூட்டிங் ஹைதராபாத் பகுதியில் இன்றுமுதல் தொடங்கியுள்ளது.
மற்ற கலைஞர்களின் விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Vishal and Arya joins for Director Anand Shankar’s next film