தெலுங்கு விஜய்யை தமிழுக்கு கொண்டு வரும் இருமுகன் இயக்குநர்

தெலுங்கு விஜய்யை தமிழுக்கு கொண்டு வரும் இருமுகன் இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DRtYBqSV4AUaC93‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘காட்டேரி’ முதலான படங்களை தயாரித்து வருகிறார் ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ. ஞானவேல்ராஜா.

இதனையடுத்து ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்திலும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார் இவர்.

இதில் நாயகனாக, சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வசூல் அள்ளிய ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஹீரோவாக நடித்த விஜய் தேவரகொண்ட நடிக்கிறார்.

தெலுங்கில் பிரபலமான ஹீரோவாக விளங்கி வரும் விஜய் தேவரகொண்டாவை இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார்.

அருள்பதியை எதிர்த்தால் அதோ கதி; விஷால்-ஞானவேல்ராஜாவுக்கு டிஆர் எச்சரிக்கை

அருள்பதியை எதிர்த்தால் அதோ கதி; விஷால்-ஞானவேல்ராஜாவுக்கு டிஆர் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

T Rajendar supports Arulpathi in Distributors Association Election and Oppose GnanavelRajaவருகிற டிசம்பர் 24ல் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்டத்தின் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் இரு முக்கிய அணிகள் போட்டியிடுகின்றன.

அதில் ஒன்று அச்சங்கத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் டி.எ.அருள்பதி அணி. மற்றொறு அணி சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காகத்தான் சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்க கௌரவ செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் ஞானவேல்ராஜா.

இந்நிலையில் அருள்பதி அணியை சில தயாரிப்பாளர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி.எஸ்.தாணு, சுரேஷ் காமாட்சி ராதாகிருஷ்ணன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தற்போதைய பொறுப்பு தலைவர் செல்வின்ராஜ், நடிகர்கள் டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர் மற்றும் சேரன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய பலரும் ஞானவேல்ராஜா இந்த தேர்தலில் போட்டியிட கூடாது என்பதை வலியுறுத்தி பேசினர். ஆனாலும் எல்லாருடைய தாக்குதல்களும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷாலை எதிர்த்தே இருந்தது.

நடிகர் சங்கம் பொறுப்பில் இருக்கும்போதே தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டார். இப்போது ஞானவேல்ராஜாவை பின்னால் இருந்து இயக்குவதாக விஷாலை குற்றம் சாட்டினர்.

கலைப்புலி எஸ்.தாணு, சேரன். எஸ்.வி.சேகர் மற்றும் செல்வின்ராஜ் ஆகியோர் பேசும் போது…

படங்கள் வெளியீட்டின் போது பிரச்சினைகளை தீர்க்க ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கம் எனவும், பெரும்பாலான பேச்சு வார்த்தைகள் அருள்பதியின் தலையீட்டினால் சுமூகமாக முடிந்துவிட்டதாக கூறினர்.

மேலும் ஞானவேல்ராஜாவின் ‘கொம்பன்’, கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’, ரஜினி முருகன் போன்ற படங்கள் சிக்கல்களிலிருந்து விடுபட்டு வெளியானது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள வைப்பு தொகையை எல்லாம் காலி செய்துவிட்டார்கள்.

நாங்கள் திருட்டு விசிடி ஒழிப்போம் என்றார்கள் அதையும் செய்யவில்லை.” என்றும் பேசினார்கள்.

இறுதியாக நடிகர் டி.ராஜேந்தர் பேசியதாவது…

தன்னுடைய படத்திற்கு ஒரு தனியார் தொலைகாட்சியிலிருந்து வரவேண்டிய பணத்திற்கு முன்பு இருந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தில், வசூல் செய்து தரும்படி தான் புகார் மனு கொடுத்திருந்ததாக தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் அப்போதைய செயலாளர் ராதாகிருஷ்ணன் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் பெற்றுத்தர முயற்சித்தும் கிடைக்கவில்லை.

தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் நான், டி. ராஜேந்தர் ஆகிய நான் போன் செய்தும் விஷால் போனை எடுப்பதில்லை.

அருள்பதியை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதோ கதிதான்” என்று பேசினார் டிஆர்.

T Rajendar supports Arulpathi in Distributors Association Election and Oppose GnanavelRaja

arulpathi support team

சிம்புகிட்ட வச்சிக்காத வம்பு; உனக்கிருக்கா தெம்பு? விஷாலுக்கு டிஆர் வார்னிங்

சிம்புகிட்ட வச்சிக்காத வம்பு; உனக்கிருக்கா தெம்பு? விஷாலுக்கு டிஆர் வார்னிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu TRவருகிற டிசம்பர் 24ல் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்டத்தின் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் தற்போதைய சங்கத் தலைவராக இருக்கும் அருள்பதியை எதிர்த்து மற்றொறு அணி சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா போட்டியிடுகிறார்.

எனவே அருள்பதியை ஆதரித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது டி.ராஜேந்தர் பேசியதாவது…

நான் எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து அரசியல் செய்தவன்.

ஜெயலலிதாவை எதிர்த்து பர்கூர் தொகுதியில் போட்டியிட்டவன் நான். ராஜீவ்காந்தி படுகொலை அனுதாப அலை இருந்தபோது கூட 40,000 வாக்குகள் பெற்றவன் நான்.

நான் பார்க்காத அரசியலா? நான் பார்க்காத தேர்தலா?

நான் என்றைக்கும் ஓட்டுக்கு பணம் கொடுத்து அரசியல் செய்பவன் அல்ல.

ஆனால் இன்று அரசியல் தேர்தலை போல தயாரிப்பாளர் சங்கத்திலும் பணம் கொடுத்து வாக்குகளை பெற தொடங்கிவிட்டனர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில்தான் ஜிஎஸ்டி வரி மற்றும் கேளிக்கை வரி அதிகமாக உள்ளது.

ஆந்திரா தெலுங்கானாவில் 18% ஜிஎஸ்டி இருக்கிறது. கர்நாடகாவில் சினிமாவுக்கு வரியே இல்லை.

ஆனால் இங்கே சங்கப் பொறுப்பில் இருக்கும் இவர்கள் எதையும் கேட்பதில்லை.

என் மகன் சிம்பு இனி நடிக்கக்கூடாது என தடை போடுகிறார்கள் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.

நடிக்கவில்லை என்றால் என்ன? அவன் இசையமைத்துள்ள சக்க போடு போடு ராஜா படம் ரிலீஸ் ஆகிவிட்டது.

நடிப்பு இல்லையா? அவன் சினிமாவில் எதை செய்தாவது பிழைத்து கொள்வார். அவருக்கு நான் எல்லா கலைகளையும் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.

சினிமாவில் எந்த துறையானாலும் நாங்கள் சாதிப்போம்.

என் மகன் சிம்பு. அவன்கிட்ட வச்சிக்காத வம்பு. அவரை எதிர்க்க உனக்கு இருக்கா தெம்பு” என விஷாலை தாக்கி பேசினார் டி.ராஜேந்தர்.

Dont try to oppose Simbu T Rajendar warns Vishal

2ஜி தீர்ப்பால் பின்னாடி ஃபயர் ஆனவர்களுக்கு உதயநிதி கொடுத்த மருந்து

2ஜி தீர்ப்பால் பின்னாடி ஃபயர் ஆனவர்களுக்கு உதயநிதி கொடுத்த மருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhaya burningஇந்தியாவையே உலுக்கிய 2ஜி வழக்கின் தீர்ப்பு நேற்று டெல்லி கோர்ட்டில் வழங்கப்பட்டது.

இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களான கனிமொழி, ஆ. ராசா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தன் ட்விட்டரில் கருணாநிதியின் பேரனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் இந்த தீர்ப்பால் பலருக்கு பின்னால் பயர் ஆக வாய்ப்புள்ளது. எனவே மருந்து தடவிக் கொள்ளுங்கள் என கொச்சையான ஒரு படத்தை போட்டுள்ளார்.

எந்த மாவட்ட ரசிகர்களை எந்த தேதியில் சந்திக்கிறார் ரஜினி..?

எந்த மாவட்ட ரசிகர்களை எந்த தேதியில் சந்திக்கிறார் ரஜினி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthவருகிற டிசம்பர் 26 முதல் 31 வரை தன் ரசிகர்களை 2ஆம் கட்டமாக சந்திக்கிறார் ரஜினிகாந்த்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 7 மணி முதல் 3 மணி வரை இந்த சந்திப்பு நிகழ்கிறது.

6 நாட்கள் நடக்கும் இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் போது தினமும் 1000 ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

இதில், எந்த தேதியில் எந்தெந்த மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்திக்க இருக்கிறார் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு….

26-12-17 – காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி.
27-12-17 – நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
28-12-17 – மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம்.
29-12-17 – கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு.
30-12-17 – வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை
31-12-17 – வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை

இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் போது ரஜினி ரசிகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், ரஜினிக்கு சால்வை, மாலைகள் ஏதும் அணிவிக்கக் கூடாது என்றும், காலில் விழக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிவி. சிந்து பங்கேற்கும் சென்னை ஸ்மாசர்ஸ் அணியை அறிமுகப்படுத்தினார் விஜயகாந்த் மகன்

பிவி. சிந்து பங்கேற்கும் சென்னை ஸ்மாசர்ஸ் அணியை அறிமுகப்படுத்தினார் விஜயகாந்த் மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chennai smashersபிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரில் விளையாடும் சென்னை ஸ்மாசர்ஸ் அணி வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பிரிமியர் பேட்மின்டன் லீக்கின் 3-வது தொடர் வரும் 23ம் தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரை உரிமையாளராக கொண்ட சென்னை ஸ்மோஷர்ஸ் அணி 2வது சீசனில் அசத்தி சாம்பியன் பட்டத்தை வென்று, முன்பேவிட அதிக பலத்துடன் களம் காண்கிறது.

இந்நிலையில் சென்னை ஸ்மாசர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களை அறிமுகப்படுத்தும் விழா, சென்னை வடபழனியில் உள்ள போரம் மாலில் நடைபெற்று வருகிறது. இதில் பி.வி.சிந்து, கிரிஸ் அட்காக், கேபி அட்காக் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் வீரர்கள் லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.

தமிழ்நாட்டிலிருந்தும் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களை எங்கள் அணியில் விளையாட வைப்போம்.
CSK சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியை நினைவுபடுத்தும் வகையில் தான் எங்கள் அணிக்கு மஞசள் உடைகளும் சிங்க லோகோவையும் வைத்திருக்கிறோம்.
CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போல் எங்கள் அணியும் புகழ் பெறும். கடந்த இரண்டு வருடங்களாக சென்னையில் டிசமபர் மாதங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளால் சென்னயில் எங்களால் விளையாட முடியாமல் போனது.
இந்த முறை சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பது  பெரும் மகிழ்ச்சி. இந்த ஆண்டும் கோப்பையை கண்டிப்பாக வெல்வோம் என்று விஜய பிரபாகரன் பேசினார்.
இந்த பேட்மிட்டன் போட்டிகள் டிசம்பர் 23 முதல் ஜனவரி 14 வரை நடைபெறுகிறது.
More Articles
Follows