தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக விஷாலை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக வந்த செய்திகளை பார்த்தோம்.
இதுகுறித்து விஷால் கூறியதாவது…
எனக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை.
மீடியாக்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்துதான் இதைதான் தெரிந்து கொண்டேன்.
போண்டா, பஜ்ஜி சாப்பிட்டு கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தினர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று நான் ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்துள்ளேன் என்று கூறுகிறார்கள்.
“போண்டா, பஜ்ஜி“ என்பது கெட்ட வார்த்தையா?? அது ஒரு தவறான உணவு இல்லை.
சூட்டிங்கிலும் நாங்கள் அதை தான் சாப்பிடுகிறோம்.
என்னை பொறுத்தவரை சின்ன தயாரிப்பாளர்கள் பெரிய தயாரிப்பாளர்கள் என்று இல்லை அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நாங்கள் குரல் கொடுப்போம்.
தமிழ் திரையுலகம் எனக்கு சாப்பாடு போட்ட தெய்வம்.
அதற்க்கு ஏதாவது தவறான விஷயம் நடந்தால் நான் நிச்சயம் குரல் கொடுப்பேன். கேள்வி கேட்பது தவறே இல்லை.
கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டும். நான் இப்போது என்னை எதற்காக நீக்கி இருக்கிறார்கள் என்ற காரணம் தெரியாமலேயே பேசி கொண்டு இருக்கிறேன்.
இதற்கு சட்ட ரீதியான விஷயம் என்ன என்பதை நான் என்னுடைய வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன்.
ஜனவரி தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரப்போகிறது. தயவு செய்து தேர்தலை நடத்த விடுங்கள்.
நிச்சயமாக இந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எங்கள் சார்பாக ஒரு அணி போட்டியிடும்.
எனக்கும் தாணு அண்ணனுக்கும் எந்த பிரச்சனையையும் இல்லை.
தாணு அண்ணனிடம் கேட்க சில கேள்விகள் இருக்கிறது. நான் நடிகர் சங்க பொது செயலாளராக வருவதற்கு முன்னர் கேள்விகளை கேட்டுள்ளேன்.
இப்போது நான் பதவிக்கு வந்த பிறகு எல்லோரும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். பதில் சொல்ல வேண்டியது எனக்கு கட்டாயம். அதே போல் அது என்னுடைய பொறுப்பு.
அதே போல் தான் நானும் கேள்வி கேட்கிறேன். அவர்களுக்கு நான் எதிர் இல்லை.
நான் ஜனநாயக முறையில் அவர்களிடம் கேள்வி கேட்டேன். எனக்கு பயமில்லை, கேள்வி கேட்கவும் பயமில்லை.
கேள்வி கேட்டால் பதில் வரவில்லை என்னும் பட்சத்தில் தேர்தலில் நிற்கவும் எனக்கு பயமில்லை.
விஷால் என்ற தயாரிப்பாளருக்கே இந்த கதி என்றால், சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம் கேள்வியே கேட்க கூடாதா??
விஷாலுக்கு இந்த முடிவு எடுத்திருக்கும் நீங்கள், இதே முடிவை கருணாஸுக்கு எடுக்க முடியுமா?
நிச்சயமாக எதிர் அணி என்பது இருக்கிறது. வருகிற ஜனவரி மாதம் நடக்கவுள்ள தேர்தலில் அந்த அணி போட்டியிடும்.
அந்த அணிக்கு நான் முழு ஆதரவு கொடுக்கிறேன்.
திருட்டு வி.சி.டி எங்கு பிடிபட்டாலும் என்னை தான் எல்லோரும் டேக் செய்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் நிற்பேன்.” என்றார் நடிகர் விஷால்.