தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முத்து, படையப்பா ஆகிய படங்களை அடுத்து லிங்கா படத்தில் ரஜினி மற்றும் கேஎஸ் ரவிக்குமார் இணைந்திருந்தனர்.
இந்த படம் கடந்த 2014ல் ரஜினி பிறந்தநாளில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருந்தார்.
இப்பட கதை தன்னுடையது என்று மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து லிங்கா பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறியதாவது:
“இயக்குநர் ரவிரத்தினம் தொடுத்த வழக்கை ரத்துசெய்யக்கோரி, ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தேன்.
மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் ‘லிங்கா’ கதை உரிமம் தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்றது.
ரூ.10 கோடி காப்புத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு லிங்கா திரைப்படத்தை வெளியிடலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அப்போது உத்தரவிட்டது.
தற்போது கோர்ட் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வெளியாகியுள்ளது .
ரஜினி சார் படம் வெளியாகும் போது இப்படி பிரச்சினைகள் வரும்.
ஆனால் எங்கள் படத்தில் இடம் பெறும் “உண்மை ஒருநாள் வெல்லும்.. இந்த உலகம் உன் பேர் சொல்லும்” பாடலை போல் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது’ என ராக்லைன் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
Rockline Venkatesh is happy with Judgement in Linga Story case