தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ட்ரெய்லர் லான்ச் இன்று சென்னையில் மிக மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் ஆஸ்க் 2.0 என்ற பெயரில் 2.0 படக்குழுவினருக்கும் பிரபலங்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பும் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
இதில் ஷங்கரிடம் பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி சில கேள்விகளை எழுப்பினார்.
“ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை கையாளுவது கடினமாக இருந்ததா, அல்லது இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படத்தைக் கையாள்வது கடினமாக இருந்ததா? இதில் எது கடினமாக இருந்தது?” என்று ஒரு வீடியோ பதிவில் ராஜமௌலி கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஷங்கர்…
“நான் உங்களது மிகப் பெரிய விசிறி. நீங்கள் இந்திய சினிமாவின் பெருமை.
வேலைப் பளுவை சமாளிக்க ஒரே வழி இன்னும் அதிகமாக உழைப்பதுதான்.
படத்தின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் நான் அலசி ஆராய்வேன். எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிபடுத்த அதிக முயற்சி எடுப்பேன்.
எதிர்பார்ப்பை பற்றி சொல்லவேண்டுமென்றால், 2.0 படத்தின் ரஜினி அவர்களை வசீகரன் கதாபாத்திரத்தில் பார்க்கப்போகிறோம்.
சிட்டியாக பார்க்கப் போகிறோம். 2.0-வாக பார்க்கப்போகிறோம். பிறகு மிகப்பெரிய உருவத்திலிருக்கும் சிட்டியாக பார்க்கப்போகிறோம்.
இன்னும் சில ஆச்சரியங்களும் இருக்கின்றன. அதனால் கண்டிப்பாக இந்தப் படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என நான் நம்புகிறேன்” என்றார்.