தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலா இயக்கிய நந்தா, பிதாமகன் படங்களில் நடித்த பிறகே சூர்யாவுக்குள் இருக்கும் நடிப்புத் திறமை திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் தெரிந்தது.
அதன்பின்னர் பாலாவுக்காக அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் சூர்யா.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாலா இயக்கும் தனது 41 வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
‘சூர்யா 41’ சூட்டிங் நிறுத்தம்?; இயக்குனர் பாலாவுடன் வாக்குவாதம்.: நடந்தது என்ன.?
இந்த படம் மீனவர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகிறது என்பதை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.
தற்போது இதில் மாற்றுத்திறனாளியாக சூர்யா நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கவுள்ள வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த படம் தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் மற்றொரு படத்தில் கமிட்டாகி உள்ளாராம் சூர்யா.
பாலா படத்திற்கு பிறகு ஜெய்பீம் பட இயக்குனர் டி.ஜே .ஞானவேல் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம் சூர்யா.
தேச ஒற்றுமையை சீர்குலைத்த ‘ஜெய்பீம்’.; சூர்யா-ஜோதிகா மீது வழக்கு பதிய கோர்ட் உத்தரவு
ஜெய்பீம் படம் சர்ச்சையானாலும் அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்டது. எனவே சூர்யா- ஞானவேல் மீண்டும் இணைவதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும் என்பது உறுதி.
Suriya movie updates : Suriya again joins with Jai Bhim director