OLD IS GOLD பழைய ‘விக்ரம்’ பட கமல்ஹாசனை மீண்டும் கொண்டு வரும் லோகேஷ்

OLD IS GOLD பழைய ‘விக்ரம்’ பட கமல்ஹாசனை மீண்டும் கொண்டு வரும் லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தன் சொந்த பேனரில் தயாரித்து நடிக்கும் படம் ‘விக்ரம்’.

அனிருத் இசையமைக்க லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இதில் கமலுடன் விஜய்சேதுபதி, பஹத்பாசில், நரேன், காளிதாஸ், ஷிவானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதில் சீக்ரெட் போலீஸ் வேடத்தில் கமல் நடிக்க டான் கேங்ஸ்டராக விஜய்சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் தாடி வைத்த கெட்டப்பில் இப்போது காணப்படுவது போல் நடிக்கிறார் கமல்.

இந்த கெட்டப் பிளாஷ்பேக் காட்சிகளில் 35 வருடங்களுக்கு முன்பு நடித்த பழைய ‘விக்ரம்’ படத்தில் நடித்த கமலை திரையில் கொண்டு வருகிறார்களாம்.

அதாவது கிட்டத்தட்ட 25 வயது இளமையாக நடிக்கிறாராம் கமல்ஹாசன். இந்த காட்சிகளில் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட உள்ளதாம்.

Kamal Haasan – Lokesh Kanagaraj in Vikram film updates

ஆதி & ஆகான்ஷா நடிப்பிற்கு ‘கிளாப்’ அடித்து பாராட்டிய அமிதாப்பச்சன்

ஆதி & ஆகான்ஷா நடிப்பிற்கு ‘கிளாப்’ அடித்து பாராட்டிய அமிதாப்பச்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BIG PRINT PICTURES நிறுவனத்தின் IB கார்த்திகேயன் தயாரிப்பில், ஆதி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “கிளாப்” படத்தின் டீசர் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆதி உடைய திறமையான நடிப்பும், பிரித்வி ஆதித்யா உடைய திறமையான எழுத்தினாலும் உருவான கிளாப் படத்தின் 70 நொடிகள் அடங்கிய டீசர், அனைத்து கதாபாத்திரங்கள் மற்றும் கதையின் ஆதார உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தி, ரசிகர்கர்களிடம் பாராட்டை பெற்றிருக்கிறது.

ஆனால் படக்குழுவினரே வியந்து பார்க்கும்படி, சூப்பர்ஸ்டாரான அமிதாப்பச்சன் படத்தின் டீஸரை பாராட்டியுள்ளது, படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

மேலும் நடிகர் அமிதாப்பச்சன் நடிகை ஆகான்ஷாவின் திறமையான நடிப்பை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

BIG PRINT PICTURES நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் I B கார்த்திகேயன் கூறியதாவது…

நடிகர் அமிதாப்ஜிக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்தியாவின் பெரிய நட்சத்திரத்திடமிருந்து கிடைக்கும்போது பாராட்டும் மிகப்பெரியதாகவே இருக்கிறது.

எங்கள் எதிர்பார்ப்பையும் மீறி “கிளாப்” படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. தீவிர நோய் தொற்றால் உலகமே முடங்கிய நிலையில், இந்தப் படமும் பல பிரச்சினைகளை சந்தித்தது.

அவையனைத்தையும் கடந்து, இப்போது படத்திற்கு கிடைத்தவரும் மதிப்பும் பாராட்டும் மனதிற்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் களங்கள் விளையாட்டு மற்றும் திரைப்படங்கள் மட்டுமே. அந்த வகையில் , “கிளாப்” திரைப்படம் பார்வையாளர்கள் மட்டுமல்லாமல், திரைப்பட பிரபலங்களிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி.

அதிலும் இந்திய சினிமாவின் பேரரசர் – அமிதாப் பச்சன் அவர்கள் பாராட்டியது படக்குழுவினருக்கு உட்சபட்ச மகிழ்ச்சியை தந்துள்ளது இயக்குனர் பிரித்வி ஆதித்யா தன்னுடைய மூலக்கதையை திரைவடிவில் மிகவும் அருமையாக படமாக்கியுள்ளளார்.

“கிளாப்” திரைப்பட டீஸர் சிறந்த வரவேற்பை பெற்றது எனக்கு தனிப்பட்ட வகையில் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. குறிப்பாக தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வரவேற்பை பெற்றுள்ளது.

ஆதியின் நடிப்பு திறமை மென்மேலும் உயர்ந்து கொண்டே செல்கிறது மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்த படம் வெளியான பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அவர் நடசத்திர அந்தஸ்து அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடும் என்பதை நான் நம்பிக்கையோடு கூறுகிறேன்.

இந்தப் படத்திற்கு மேலும் பன்மனடங்கு பலம் சேர்க்கும் விதமாக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்களின் இசை அமைந்துள்ளது. இப்படம் அனைவருக்கும் பிடித்த வகையில் எல்லோரையும் திருப்திபடுத்தும் படமாக இருக்கும்

கிளாப்” படத்தின் இசை டிரெய்லர் மற்றும் தியேட்டர் வெளியீடு குறித்து, தயாரிப்பு தரப்பு விரைவில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவுள்ளது. இயக்குநர் பிரித்வி ஆதித்யா எழுதி, இயக்கியுள்ள இப்படம்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் I B கார்த்திகேயன் தயாரிக்கிறார், படத்தின் இணை தயாரிப்பாளராக P. பிரபா பிரேம், மனோஜ் மற்றும் ஹர்ஷா பணியாற்றுகின்றனர்.

நடிகர் ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷ் குருப், பிரகாஷ் ராஜ், நாசர், மைம் கோபி, முனிஷ்காந்த் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

BIG PRINT PICTURES IB KARTHIEKYAN PRESENTS PRITHIVI ADITHYA DIRECTORIAL AADHI STARRER “CLAP” TEASER GETS PHENOMENAL APPRECIATION WITH 1 MILLION VIEWS

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகும் அஜித் பட நடிகை..?

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகும் அஜித் பட நடிகை..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க உள்ளது.

இதற்கான புரோமோக்கள் விளம்பரங்கள் போல தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

அக்டோபரில் தொடங்க இருக்கும் இதில் பங்கேற்பவர்கள் யார்? யார்? என்ற கேள்விகள் தினம் ரசிகர்களிடையே எழுகிறது.

நடிகர் ஜான் விஜய், ரம்யா கிருஷ்ணன், ‘மைனா’ நந்தினி, ‘மைனா’ சூசன், வடிவுக்கரசி, ரமேஷ் கண்ணா, நடிகை ஷகிலாவின் மகள், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜி.பி முத்து என பரவலாக பேசப்படுகிறது.

இந்த பட்டியலில் நடிகை பார்வதி நாயர் பெயரும் தற்போது இணைந்துள்ளது.

இவர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

மேலும் ‘என்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’, ‘மாலை நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிகர் வைபவ் உடன் ‘ஆலம்பனா’ படத்தில் நடித்து வருகிறார் பார்வதி.

Ajith movie heroine participates Bigg Boss 5 Tamil

parvati nair
parvati nair
‘அண்ணாத்த’ பேனருக்கு ஆடு வெட்டி ரத்த அபிஷேகம்..; கண்டிக்காத ரஜினிக்கு பால் முகவர்கள் கண்டனம்.

‘அண்ணாத்த’ பேனருக்கு ஆடு வெட்டி ரத்த அபிஷேகம்..; கண்டிக்காத ரஜினிக்கு பால் முகவர்கள் கண்டனம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள #அண்ணாத்த படத்திற்கு பொது வெளியில் வைக்கப்பட்டுள்ள கட்-அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து அவரது ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்த காட்டுமிராண்டித்தனம் அரங்கேறிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது.

கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் காட்டுமிராண்டித்தனத்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த அவர்களின் அண்ணாத்த கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்த சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மீது தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது .

ஏற்கனவே கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கிற கலாச்சாரத்தை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேரிலும், பதிவு தபால் மூலமும் பலமுறை கோரிக்கை முன் வைத்தும் தனது ரசிகர்களை கண்டித்து நல்வழிப்படுத்த தவறிய அவர் இவ்விகாரத்திலாவது உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும்.

தவறான கலாச்சாரம் தமிழகத்தில் அரங்கேற அவர் காரணமாக இருக்க கூடாது என திரு. ரஜினிகாந்த் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக் கொள்கிறது. #TNMilkAssociation

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

TN Milk Association Condemns Rajini and his fans for Annaththe Celebration

கலைப்புலி தாணு வழங்க ஜிவி.பிரகாஷ் – கௌதம் மேனன் இணையும் ‘செல்ஃபி’

கலைப்புலி தாணு வழங்க ஜிவி.பிரகாஷ் – கௌதம் மேனன் இணையும் ‘செல்ஃபி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி.

இதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க, கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார்.

இவர்களுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன்DG குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் இயக்கி இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை எஸ்.இளையராஜா கவனிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டு இருக்கிறார்.

இப்படத்தை டிஜி பிலிம் கம்பெனி நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறது.

GV Prakash and Gautham Menon teams up for Selfie

selfie
selfie
அருண்விஜய்யின் தேசபக்திக்கு கை கொடுத்த சூர்யா-கார்த்தி-ஜெயம் ரவி

அருண்விஜய்யின் தேசபக்திக்கு கை கொடுத்த சூர்யா-கார்த்தி-ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி இணைந்து வெளியிட்ட ‘அருண்விஜய்யின் பார்டர்’ பட முன்னோட்டம்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘அருண்விஜய்யின் பார்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம். இந்நிலையில் ‘அருண்விஜய்யின் பார்டர்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள்.

கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு தமிழ் திரை உலகில் மாற்றங்கள் ஏற்பட்டு, 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கிறது. பல புதிய திரைப்படங்கள் திரையிடப்பட்டிருக்கிறது.

ரசிகர்களும், பார்வையாளர்களும் திரையரங்கத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் எதிர்வரும் மாதங்களில் பல புதிய திரைப்படங்கள் வெளியாக தயாராகிவருகிறது.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் தேசபக்தி கொண்ட ஆக்சன் என்டர்டெய்ன்மென்ட் திரைப்படம் ‘அருண்விஜய்யின் பார்டர்’.

ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து விரைவில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியலில் ‘அருண் விஜய்யின் பார்டர்’ திரைப்படமும் இணைகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் கதையையும், கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடித்து வரும் முன்னணி நடிகர்களில் நடிகர் அருண் விஜயும் ஒருவர். ‘அருண்விஜய்யின் பார்டர்’ படத்திலும் துணிச்சல் மற்றும் சவாலான புலனாய்வு துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

இதன் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் கடுமையாக உழைத்து, ஒத்திகையும், பயிற்சியும் செய்து சண்டைக்காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறார்.

அதிலும் கொரோனா தொற்று பரவல் இருந்த காலகட்டத்தில், படத்தின் பணிகளை நிறைவு செய்வதற்காக படக்குழுவினருக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார். குறிப்பாக டெல்லி, ஆக்ரா மற்றும் அஜ்மீர் ஆகிய நகரங்களின் வீதிகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு முழுமையான ஒத்துழைப்பை அளித்திருக்கிறார்.

இந்தப்படத்தில் அறிமுக நடிகை ஸ்டெபி பட்டேல், நாயகன் அருண் விஜய்யின் காதலியாக – ஜோடியாக நடித்திருக்கிறார். அவருடைய திறமையான நடிப்பு, இப்படத்தின் வெற்றிக்கு உதவும் வகையிலேயே அமைந்திருக்கிறது.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா, இப்படத்தில் நாயகன் அருண் விஜயுடன் பணியாற்றும் புலனாய்வு துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவரும் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார்.

இதற்காக சிறப்பு பயிற்சியும் பெற்றார். பிரபல நடிகர் பக்ஸ் என்ற பகவதி பெருமாள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இயக்குனர் அறிவழகன் மற்றும் அவரது குழுவினர், கொரோனா பாதிப்பு காலகட்டத்திலும் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, படத்தின் இறுதிகட்ட பணிகளை நிறைவு செய்தனர்.

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகியிருக்கும் ‘அருண்விஜய்யின் பார்டர்’ படத்தின் மூலம் இயக்குனர் அறிவழகன் மீண்டும் ஒரு திறமையான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்த திரைப்படம் தணிக்கைக்குச் செல்லும் வகையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கிறது.

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்திருக்கும் ‘அருண்விஜய்யின் பார்டர்’ திரைப்படத்தை, 11 :11 புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளிலும் வெளியிடுகிறார்.

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகலாம். அதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகக்கூடும்.

இந்நிலையில் ‘அருண்விஜய்யின் பார்டர்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

Trailer : https://youtu.be/Cy8iSKDNfUg

Arun Vijays Patriotic Action Thriller film Borrder Trailer updates

 

More Articles
Follows