முதல்வரின் திட்டங்கள் மக்களை சென்றடைய சிவா – வசந்தபாலன் – சிங்காரவடிவேலன் – அம்ரீஷ் கூட்டணி

முதல்வரின் திட்டங்கள் மக்களை சென்றடைய சிவா – வசந்தபாலன் – சிங்காரவடிவேலன் – அம்ரீஷ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து வரும் சிங்கார வடிவேலன் திராவிட முன்னேற்ற கழகத்தில் தீவிரமாக இயங்கி வருபவர்.

முதலமைச்சரின் திட்டங்களை மக்களிடம் எளிதில் சேரும் வகையில் சில குறும்படங்களை அம்மா கிரியேஷன்ஸ் சிவா அவர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று கிட்டத்தட்ட 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார்.

அந்த வகையில் மிகவும் முக்கியமான திட்டமான ‘மக்களை தேடி மருத்துவம்’ என்கிற திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு குறும்படமாக தயாரித்துள்ளனர் தயாரிப்பாளர் டி சிவா மற்றும் சிங்கார வடிவேலன் இருவரும்.

நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் என்பதால் அதை சிறப்பிக்கும் விதமாக இந்த குறும்படத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி உருவாகியுள்ள ‘தலைவன்’ என்கிற குறும்படத்தையும் வெளியிடும் விழா இன்று சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, இயக்குனர் இமயம் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி, விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரபு ராஜா தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் மற்றும் நடிகருமான பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் படக்குழுவினருடன் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தலைவன் குறும்படத்தை அமைச்சர் சாமிநாதன் வெளியிட இயக்குனர் இமயம் பாரதிராஜா பெற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் குறும்படத்தை பூச்சி எஸ்.முருகன் வெளியிட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் தேனாண்டாள் முரளி பெற்றுக்கொண்டார்

தலைவன் என்கிற பாடலை தயாரிப்பாளர் சிவாவே எழுதியுள்ளார் இந்த பாடலுக்கு அம்ரீஷ் இசையமைக்க, தினேஷ் மாஸ்டர் அற்புதமாக நடனம் வடிவமைத்துள்ளார்.

அதேபோல மக்களை தேடி மருத்துவம் குறும்படத்தை எளிதில் மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக அழகாக இயக்கியுள்ளார் இயக்குனர் வசந்தபாலன்.

கோபிநாத் இந்த குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த குறும்படத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் பலனை சொல்லும் ஒரு வேன் டிரைவர் கதாபாத்திரத்தில் நடிகர் சுப்பு பஞ்சு நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசும்போது,…

“இந்த மக்களை தேடி மருத்துவம் என்கிற மகத்தான திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சிறு துளியாக இருக்க விரும்பினேன். அதன் முயற்சியாகத்தான் நானும் சிங்கார வடிவேலனும் இந்த முயற்சியில் இறங்கினோம்.

தலைவன் குறும்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் தனது படப்பிடிப்பையும் ரத்து செய்துவிட்டு வந்து நடனக்காட்சியை வடிவமைத்துக் கொடுத்தார். அதுமட்டுமல்ல இன்று அவர் வேறொரு படப்பிடிப்பில் இருப்பதால் இதுவரை எந்த விழாவிற்கும் அழைத்துச் செல்லாத தனது மனைவியை முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அனுப்பி வைத்துள்ளார்.

இந்த பாடலை எழுதுவதற்காக நான் மிகப்பெரிய அளவில் மெனக்கெடவில்லை.. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சாதனைகளை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக தொகுத்தேன். இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையில் அழகான பாடலாக அது உருவாகிவிட்டது” என்று கூறினார்

வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் பேசும்போது,….

“முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எந்நேரமும் மக்கள் பணி மக்கள் பணி என்றே பாடுபட்டு வருகிறார். இந்த இரண்டு குறும்படங்களையும் இனி வரவிருக்கும் குறும்படங்களையும் இரட்டை குழல் துப்பாக்கியாக இருந்து அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் சிங்கார வடிவேலனும் உருவாக்கி இருப்பதில் மகிழ்ச்சி.

அதேபோல திரையுலகிற்கு தேவையான அருமையான அறிவிப்புகளை விரைவில் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் அவர்கள் வெளியிட இருக்கிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்

இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது,…

“மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த விழா நடைபெறுவது மகிழ்ச்சி தருகிறது. தமிழர்களையும் தமிழையும் காக்கும் முயற்சியில் மு.க ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார் அதேபோல சினிமாவிற்கு தேவையான நலத்திட்டங்களை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அடுத்தடுத்து அறிவிப்பார் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை..

தயாரிப்பாளர் சிவா எப்போதுமே பொதுநலன் கருதி பல் விஷயங்களில் ஈடுபடுபவர்.. அதனால் தான் இப்படி ஒரு முயற்சி எடுத்துள்ளார்.. அவருக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரபாகர் ராஜா பேசும்போது…

, “மக்களை தேடி மருத்துவம் என்பது பார்ப்பதற்கு ஏதோ ஒரு சாதாரண திட்டம் போல தெரியலாம்.. ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தில் முதியவர்கள் பலரால் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை நிலவியது.

அப்படிப்பட்டவர்களுக்கு அதுபோன்று சிரமம் கொடுக்காமல் மருத்துவமே அவர்களது வீடு தேடி வந்து சேவை செய்யும் அருமையான திட்டம் இது. இந்த திட்டத்தில் இதுவரை 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் பயன் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது” என்று கூறினார்.

அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசும்போது,….

“தேர்தல் முடிந்ததும் அந்த சமயத்தில் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்ததால் அடுத்த இரண்டு மாதங்கள் முழுவதும் அதிலேயே கவனம் செலுத்தும்படி முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.. அந்த வகையில் நீண்ட நாட்கள் கழித்து இந்த நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக கலந்து கொள்கிறேன்..

மக்களை தேடி மருத்துவம் என்கிற இந்த திட்டத்தை சினிமா வாயிலாக மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி எடுத்த தயாரிப்பாளர் சிவா, சிங்கார வடிவேலன் ஆகியோரை பாராட்டுகிறேன்.. இதேபோன்று மாண்புமிகு கலைஞர் ஆட்சியில் வருமுன் காப்போம் என்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.

ஆனால் இடையில் அந்த திட்டம் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் அந்த திட்டம் மு க ஸ்டாலின் அவர்கள் துவங்கப்பட்டுள்ளது..

இதுதவிர இன்னுயிர் 48 என்கிற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. நாம் சாலையில் செல்லும்போது யாராவது விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்ப்போருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இது. பாதிக்கப்பட்டவருக்கு 48 மணி நேரம் இலவச சிகிச்சை வழங்கப்படும்.

கலைஞர் முதல்வராக இருந்தபோது இந்த திட்டத்தின் அவசியத்தை நானே நேரில் உணர்ந்துள்ளேன். கலைஞருடன் பிரச்சாரத்துக்காக காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து அடிபட்டு விட்டார். வேகமாக அவரை சென்று தூக்கி எனது காரிலேயே அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினோம்.

அன்று இந்த திட்டம் இருந்திருந்தால் எனக்கு 5000 ரூபாய் கிடைத்திருக்கும்” என்று இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கூறினார் அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன்.

அதுமட்டுமல்ல இந்த திட்டம் மக்களுக்கு எவ்வளவு பயனுள்ளது என்பதை அவர்கள் அனைவரும் அறியச்செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘மக்களை தேடி மருத்துவம்’ என்கிற குறும்படத்தை, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் பெற்று, திரையரங்குகள் அனைத்திலும் ஒளிபரப்ப விரைவில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நன்றியுரை ஆற்றினார் தயாரிப்பாளர் சிங்காரவேலன்.

இந்த விழாவை தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தொகுத்து வழங்கினார்.

Chief Minister MK Stalin birthday special Thalaivan song released

..த்தா உன்னால என்னடா செய்ய முடியும்.?; தனுஷின் ‘மாறன்’ ட்ரைலரை வெளியிட்ட ரசிகர்கள்

..த்தா உன்னால என்னடா செய்ய முடியும்.?; தனுஷின் ‘மாறன்’ ட்ரைலரை வெளியிட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தியாவின் பெருமைமிகு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாறன்” படத்தின் டிரெய்லரை, தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடைய ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் போன்றவை பெரும் பிரபலங்களாலும், தயாரிப்பாளர்களாலும் வெளியிடப்படும், ஆனால் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்பட டிரெய்லரை, டிவிட்டர் தளத்தின் புதிய வசதியை பயன் படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

டிவிட்டரின் இந்த புதிய வசதியான Twitter Unlock மூலம், நடிகர் தனுஷ் உடைய தீவிர ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து ஒன்றிணைந்து, இந்த டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்திய முதல் படமாக “மாறன்” திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

ரசிகர்கள் இந்த புதிய அனுபவத்தால் மிகப்பெரும் உற்சாகத்துடன் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். மாறன் டிரெய்லர் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் அதன் அதிகரப்பூர்வ YouTube பக்கத்திலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

மாறன் டிரெய்லர் இணையெங்கும் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

“மாறன்” திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் TG தியாகராஜன் வழங்குகிறார், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் நரேனுடன் இணைந்து ஷர்பு மற்றும் சுஹாஸ் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் பிரத்யேகமாக வெளியாகிறது.

Fans revealed Dhanush in Maaran trailer

இயக்குனர்கள் சங்கத் தேர்தல் : மீண்டும் தலைவரானார் ஆர்கே செல்வமணி..; பாக்யராஜ் தோல்வி.!

இயக்குனர்கள் சங்கத் தேர்தல் : மீண்டும் தலைவரானார் ஆர்கே செல்வமணி..; பாக்யராஜ் தோல்வி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் இன்று 27 பிப்ரவரி சென்னையில் நடந்தது.

இயக்குனர் சங்கத்தில் மொத்தம் 2,600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட வாக்களிக்கப்பட தகுதியுடைய உறுப்பினர்களாக 1,900 பேர் உள்ளனர்.

இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.

செந்தில்நாதன் தலைமையில் நடந்த இந்த தேர்தல் தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிந்தது.

காலையில் துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

இதனை அடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு இயக்குநர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியாகின.

இன்று நடந்த தேர்தலில் தபால் ஓட்டுகள் 100 உட்பட 1,525 ஓட்டுகள் பதிவாகின.

மொத்தம் பதிவான வாக்குகள் -1,525
செல்வமணி பெற்ற வாக்குகள் -955

பாக்யராஜ் பெற்ற ஓட்டுகள் – 566.

ஆக 389 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆர் கே செல்வமணி இயக்குனர் சங்கத் தலைவராகிறார்.

Tamil Cinema Directors Union Election Result RK Selvamani won

மோதிய இரு அணிகள் விவரம் இதோ… :

புதுவசந்தம் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி. இமயம் அணியின் தலைவர் பாக்யராஜ்.

புது வசந்தம் அணியில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைவர் பதவிக்கும், செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமார், பொருளாளர் பதவிக்கு பேரரசு ஆகியோர் போட்டியிட்டனர்.

புது வசந்தம் அணியில் இணைச் செயலாளர்கள் பதவிக்கு இயக்குநர்கள், சுந்தர் சி, ஏ.ஆர். முருகதாஸ், லிங்குசாமி, ஏகம்பவாணன் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு இயக்குநர்கள் மனோஜ்குமார், மனோபாலா, ரமேஷ்கண்ணா, வெங்கடேஷ், சரண், ரவிமரியா, திருமலை, நம்பிராஜன் நம்பி, ஆர்.கே. கண்ணன், முத்துவடுகு, ரமேஷ் பிரபாகரன், க்ளாரா ஆகியோர் போட்டியிட்டனர்.

இமயம் அணியில் தலைவர் பதவிக்கு இயக்குனர் பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு ஆகியோர் போட்டியிட்டனர்.

இமயம் அணியில் இணைச் செயலாளர்கள் பதவிக்கு ஜெகதீசன், ஜெனிஃபர் ஜூலியட், கமலக்கண்ணன் என்கிற விருமாண்டி, ராஜா கார்த்திக், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், பாலசேகரன், கே.பி.ஜெகன், நாகேந்திரன், கே.பி.பி. நவீன், பாண்டியராஜன், பிரபாகர், சசி, சிபி, ஸ்டேன்லி, சாய் ரமணி வேல்முருகன் ஆகியோர் போட்டியிட்டனர்.

விஜய்சேதுபதி படத்தை குஜராத்தி மொழியில் ரீமேக் செய்யும் நயன்தாரா

விஜய்சேதுபதி படத்தை குஜராத்தி மொழியில் ரீமேக் செய்யும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rowdy Pictures தயாரிப்பாளர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் நிறுவனம் மூலம் தரமிக்க படங்களை வழங்கி பெரும் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் மேலும் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இப்போது இந்த தயாரிப்பு நிறுவனம், மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, யோகிபாபு மற்றும் ரித்திகா சிங் முக்கிய வேடங்களில் நடித்த, தமிழ் திரைப்படமான ஆண்டவன் கட்டளையின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான ‘சுப் யாத்ரா’ மூலம் குஜராத்தி சினிமாவில் அதன் பயணத்தை துவங்கவுள்ளது.

இந்த ரீமேக் திரைப்படத்தில் குஜராத்தி சூப்பர் ஸ்டார் மல்ஹர் தாக்கர் மற்றும் மோனல் கஜ்ஜர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

இத்திரைப்படத்தை குஜராத்தி திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் மனிஷ் சைனி இயக்குகிறார். தயாரிப்பாளர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இப்படம் மூலம் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி என்றும், மேலும் குஜராத்தி திரையுலகில் தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Nayanthara to produce Andavan Kattalais Gujarati remake

அடையாரின் புதிய அடையாளம் ‘மெட்ராஸ் பொங்கல்’.; தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு திறந்தார்

அடையாரின் புதிய அடையாளம் ‘மெட்ராஸ் பொங்கல்’.; தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு திறந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தலைநகரமான நம்ம சென்னையில எந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதோ அதே அளவுக்கு உணவகங்களும் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒரு சில உணவகங்களின் தரம் மோசமாக உள்ளது.

ஒருவேளை ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டால் அடுத்த வேலை அதே உணவகத்தில் சாப்பிட முடியாத நிலையில் தான் இன்றைக்கு பலபேர் சென்னையில் இருக்கிறார்கள்.

ஆனால் மிகவும் எளிய முறையில் (25-02-2022) அன்று நமது “Madras Pongal” நிர்வாக இயக்குநர் ஜேபி யின் நெருங்கிய நண்பரும், பிரபல தயாரிப்பாளருமான S.R.பிரபு பொற்கரங்களால் திறப்பு விழாகண்ட நம்ம “Madras Pongal” உணவகத்தில் தினமும் காலையில் வயிற்றுக்கு நிறைவாக நாவிற்கு மிகவும் சுவையான

சிற்றுண்டி இட்லி வடை தோசை பொங்கல் சக்கரை பொங்கல் பாயசம் கேசரியும்,

மதியம்
சாப்பாடு வகையில் உள்ள வெரைட்டி ரைஸ் அனைத்து வகைகளும் இங்கு கிடைக்கும்.

மாலையும், இரவும்
டிபன் வகைகள் ஸ்நாக்ஸ் வகைகள் சப்பாத்தி வகைகள் இங்கு கிடைக்கும்.

இங்கு தயார் செய்யும் அனைத்து உணவு வகைகளும் சுத்தமான முறையிலும், சுகாதாரமான வகையிலும் தயார் செய்யப்படுகின்றது.
மேலும் சமையல் கலையில் கைதேர்ந்த சீனியர் செப்பு களை வைத்து உணவு வகைகள் தயாரிக்கப்படுவது இந்த மெட்ராஸ் பொங்கலின் தனிசிறப்பு.

தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கூறியதாவது.

இட்லி,வடை,பொங்கல், சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டேன் நாவிற்கு நல்ல ருசியாக இருந்தது. பிறகு மெது வடை சட்னி ,சாம்பாருடன் கலந்து சாப்பிட்டேன் குறிப்பாக சாம்பாரில் நெய் பருப்பின் மனமும், நாவிற்க்கு ரொம்ப சுவையாக இருந்தது .
இந்த சுவையை கடைசிவரை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

உணவு வகைகள் மிகவும் தரமான முறையில் உள்ளது என்றும் உணவு தயாரிக்கும் இடம் கூட மிகவும் சுகாதாரமான முறையில் பராமரிக்கிறார்கள்.
மெட்ராஸ் பொங்கல் குழுமத்திற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் இவ்வாறு கூறினார்.

மெட்ராஸ் பொங்கல் குழுமத்தின் இயக்குநர் JP கூறியதாவது.

எங்களின் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த சுவையில் தரமான உணவு வகைகளை மூன்று வேளையும் வழங்குவதே எங்களின் லட்சியம்.
மேலும் இது எங்களுடைய முதல் படிதான் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் மேலான ஆதரவில் இந்த படிகள் நிச்சயமாக உயரும் என நம்புகிறோம்.
வாருங்கள் வரவேற்கிறோம்..!

உணவு அருந்துங்கள் நிறைவாக செல்லுங்கள். திறப்பு விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் நிர்வாக இயக்குனர் JP நன்றி தெரிவித்தார்.

வருங்காலத்தில் வாடிக்கையாளர்களே எங்களின் முழு முகவரியாக மாறுவார்கள்.” என்றார்.

கடை முகவரி:
“Madras Pongal”
No:32,3rd cross main road, Kasturi bhai, Adyar, (Land Mark – (opp) Adyar nalli silks), Chennai.

Producer SR Prabu inaugurates Madras Pongal

உலகமெங்கும் ஓங்கி ஒலிக்கும் பெயர் ரஜினி..; பேரே கேட்டாலே வெற்றிதான் – தாணு

உலகமெங்கும் ஓங்கி ஒலிக்கும் பெயர் ரஜினி..; பேரே கேட்டாலே வெற்றிதான் – தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், தமிழ் சினிமா முன்னணி இயக்குநர் A.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ள திரைப்படம் “ரஜினி”.

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் பெயரில் ஒரு அருமையான ஆக்சன் கமர்சியல் கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது ‘ரஜினி’ திரைப்படம். இப்படத்தின் இசை வெளியீடு தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள, இன்று இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, T.G.தியாகராஜன், K.ராஜன், இயக்குநர் செல்வமணி, மனோபாலா, நடிகை ஜெயச்சித்ரா, இசையமைப்பாளர் இமான், கல்விதந்தை AC சண்முகம், இயக்குநர் RV உதயகுமார், T. சிவா, , நடிகர் ஜீவன், அடி தடி முருகன், தீனா, ஜாகுவார் தங்கம், ஜான் மேக்ஸ், சக்தி சிதம்பரம், திருமலை, உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது…
ரஜினி என்ற பெயரை கேட்டவுடனே வெற்றி உறுதியாகிவிட்டது, ஆம் ரஜினி என்ற பெயர் உலகம் முழுதும் ஓங்கி ஒலிக்க கூடிய பெயர், அவருக்கு இன்று திருமண நாள் இந்த இனிய நாளில் “ரஜினி” திரைப்படத்தின் இசை வெளியீடு நடப்பது சிறப்பு.

தம்பி பழனிவேல் தொடர்ந்து திரைப்படங்கள் எடுக்கும் நல்ல பண்பாளர், இந்த பெயருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் படமெடுக்கும் திறமை பெற்றவர் இயக்குநர் A.வெங்கடேஷ். ரஜினி பெயரில் நடிக்கும் சிறப்பை பெற்றிருக்கிறார் தம்பி விஜய் சத்யா. இசையமைப்பாளர் அம்ரீஷ் கமர்ஷியல் இசை என பட்டம் சூட்டிய நிலையில் என்னால் மெலடி தர முடியும் என சித் ஶ்ரீராம் வைத்து அழகான பாடல் தந்துள்ளார். இப்படம் அருமையான வெற்றியை பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கல்விதந்தை AC சண்முகம் பேசியதாவது…
திரு வெங்கடேஷ் அவர்கள் இந்தப்படத்தினை நல்ல முறையில் கொண்டு வந்துள்ளார்கள். என் நண்பர் ரஜினி அவர்கள் திருமண நாளில் இந்தப்பட விழா நடக்கிறது. அவருடைய தாக்கம் இந்தப்படத்திலும் இருக்கும். நடிகர் விஜய் சத்யாவிடம் ஜெயம் ரவி சாயல் இருக்கிறது. அவர் சினிமாவில் கண்டிப்பாக நல்லதொரு இடத்தை அடைவார்.

ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான அம்சம் அவரிடத்தில் தெரிகிறது. ஒரு தாயின் பிரசவம் போல் தான் ஒவ்வொரு படமும் இப்படத்தை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியிருக்கிறார்கள். இசை சேனல்களில் பாடலில் இசையமைப்பாளர், பாடகர் பெயர் போடுகிறார்கள் ஆனால் தயாரிப்பாளர் பெயர் போடப்படுவதில்லை இதற்கு தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகர் ஜீவன் பேசியதாவது…

இந்தப்படம் பெயர் ரஜினி அதை தவிர இந்தப்படத்திற்கு எந்த விளம்பரமும் தேவை இல்லை. அந்தப்பெயரே படம் பற்றி சொல்லிவிடும். இந்தப்பட ஹீரோ விஜய் சத்யா, நடிகை ஷெரீன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் வெங்கடேஷ் அவர்களுடன் படம் செய்ய ஆசை, நீண்ட காலமாக தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. அது விரைவில் நடக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..

இயக்குநர் வெங்கடேஷ், மற்றும் தயாரிப்பாளர் பழனிவேல் இருவருக்காக தான் இங்கு வந்தேன். இந்தப்படம் பற்றி சொன்னபோது ஏதோ சின்ன படம் எடுக்கிறார்கள் என்று தான் நினைத்தேன் ஆனால் இந்தப்பட இன்விடேசன் பார்த்த போது பிரமிப்பாக பிரமாண்டமாக இருந்தது. இங்கு வந்து பார்த்த போது ஏய் பகவதி போல் பிரமாண்டமாக தெரிகிறது.

நிச்சயமாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். தயாரிப்பாளர் படமெடுப்பது இன்றைய சூழலில் கடினமாக இருக்கிறது. நாயகன் பார்க்க அப்படியே ஜெயம் ரவி போல் இருக்கிறார். டிரெய்லர் காட்சிகள் எல்லாம் அருமையாக இருந்தது, தனுஷிடன் நடித்தவர்கள் அம்மாவாக கூட நடிக்க முடியாமல் இருக்கும் போது அவருடன் நடித்த நடிகை ஷெரீன் புதுமுக நாயகி போல் அழகாக இருக்கிறார்.

மிக நல்ல கலைஞர்கள் இணைந்து மிக பிரமாண்ட படைப்பாக இப்படம் செய்துள்ளார்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் K.ராஜன் பேசியதாவது…
சினிமாவில் மாவீரன், மகா தைரியசாலி தயாரிப்பாளர் பழனிவேல் தான். கொரோனா கடின காலத்திலும் இரண்டு படங்கள் எடுக்கிறார். இயக்குநர் A.வெங்கடேஷ் கமர்ஷியல் இயக்குநர், மக்கள் விரும்பி பார்க்ககூடிய படங்களை கமர்ஷியலாக தரக்கூடியவர் இருவரும் இணைந்து ஒரு நல்ல படம் தருகிறார்கள். ரஜினி என பெயர் வைத்ததால் இந்தப்படம் ஜெயிக்கும் என்கிறார்கள் இல்ல பெயரால் எந்தப்படமும் ஜெயிக்காது கதை இல்லாவிட்டால் எந்த பெரிய நடிகர் படமும் ஜெயிக்காது.

கதை தான் முக்கியம். A.வெங்கடேஷ் கண்டிப்பாக கதை வைத்திருப்பார். நாயகனுக்கு உண்டான் எல்லா அம்சமும் விஜய் சத்யாவிடம் இருக்கிறது. அந்த தம்பியை பார்க்கும் போதே ஒழுக்கம் நிறைந்தவர் என தெரிகிறது. தயாரிப்பாளரை மறக்காமல் இருந்தால் தான் நீங்கள் வளர்வீர்கள், எல்லோரும் நல்லா வர வேண்டும் அதே நேரம் தயாரிப்பாளரை காப்பாற்றுங்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். காணாமல் போன ஷெரீன் சேலை கட்டி வந்திருக்கிறார்.

சேலை கட்டிய தமிழ் பெண்ணாக மாறுங்கள் தமிழ் சினிமா உங்களை வாழவைக்கும்.இப்போது கதை இல்லாமல் சமீபத்தில் வந்த பிரமாண்ட படமெல்லா ஹீரோ காலி. ஆனால் A.வெங்கடேஷ் கதை இல்லாமல் படமெடுக்க மாட்டார். இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர் அம்மா T. சிவா பேசியதாவது…

இது ஒரு மகிழ்ச்சியான குடும்ப விழா, இயக்குநர் வெங்கடேஷ் அவர்களின் தீவிர ரசிகன். கமர்ஷியலாக நிறைய படங்கள் எடுத்து தயாரிப்பாளர், விநியோகஸ்தர், என பலரை வாழவைத்துள்ளார். அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய திருப்பமாக அமைய வேண்டும், நண்பர் பழனிவேல் பலமுறை வீழ்ந்தாலும் மீண்டும் படமெடுப்பவர், அவர் மாதிரி ஒரு சிலரால் தான் சினிமா உயிரோடு இருக்கின்றது. அவரது முயற்சிக்கும், உழைப்புக்கும் இந்தப்படம் ஒரு பெரிய வெற்றியை தரவேண்டும். நாய்கன் நல்ல ஸ்மார்ட்டாக இருக்கிறார். விழா நாயகன் இசையமைபபாளர் அம்ரீஷ் அவருடன் இணைந்து நான் வேலை செய்யும் போது நல்ல பாடல்கள் வரும்.

அவர் கடினமான உழைப்பாளி, அவர் இன்னும் பெரிய உயரத்திற்கு வரவேண்டும். இங்கு இருக்கும் இசையமைப்பாளர் இமானை பார்த்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுக்கொள்ளுங்கள், அவருக்கு வாழ்த்துக்கள். இந்தப்படம் நல்ல வசூல் பெற்று பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் RV உதயகுமார் பேசியதாவது…
ஒரு அழகான மேடை வர்ணனையாளரிலிருந்து நாயகன் நாயகி வரை அனைவரும் அழகாக இருக்கிறார்கள்.

இந்தப்படம் சூப்பர்ஸ்டார் படம் மாதிரி மிகப்பெரிய வெற்றி பெறும், சினிமாவில் ரஜினி வேறு வெற்றி வேறு இல்லை. அந்த பெயரை பிடித்து வைத்த தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் மும்பையில் இன்னொரு படமும் எடுத்துகொண்டிருக்கிறார்.

இயக்குநர் வெங்கடேஷ் அழகாக படமெடுத்துள்ளார். முதல் படத்திலேயே சிக்ஸ் பேக்குடன் வந்துள்ளார் நாயகன் விஜய் அவருக்கும் படத்தில் உழைத்துள்ள அனைவர்க்கும் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

நடிகை ஷெரீன் பேசியதாவது…

படத்தில் விஷிவல், பாட்டு எல்லாமே சூப்பராக இருக்கிறது. எங்கள் படத்திற்கு கவர்ச்சியே ஹீரோ தான். அவர் படம் ஆரம்பத்திலிருந்தே சாப்பிடாமல் 8 பேக் வைக்க பயிற்சி எடுத்து கொண்டிருந்தார். அவரை பார்க்க வைத்து கொண்டு நான் பிரியாணி சாப்பிட்டு கடுப்பேற்றியிருக்கிறேன்.

உண்மையில் அவர் மிக மிக அழகாக இருக்கிறார். எங்க டைரக்டர் அட்டகாசமாக படமெடுத்துள்ளார். அவருடன் வேலை செய்தது அருமையான அனுபவம். சூப்பரான இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்திற்கு நிறைய கஷ்டப்பட்டுள்ளோம். விழுந்து, அடி வாங்கி கடினமாக உழைத்து உருவாக்கியுள்ளோம் தியேட்டரில் வந்து படம் பாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசியதாவது…
ரஜினி தலைவர் டைட்டில் எங்களுக்கு கிடைத்தது சந்தோசம், அவரது திருமண நாளில் இந்த விழா நடப்பது மகிழ்ச்சி. தலைவருக்கு வாழ்த்துக்கள். நாயகன் பயிற்சி எடுத்து உடலை அட்டகாசமாக வைத்துள்ளார். நான் வெங்கடேஷ் சாரின் ரசிகன். மாஸ் கமர்ஷியல் இசையமைப்பாளர் என சொல்கிறார்கள் ஆனால் இந்தப்படத்தில் ஒரு மெலடி பாடல் தந்தார் சித்ஶ்ரீராமை பாடவைத்துள்ளோம், உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். என் அம்மாவிற்கு நன்றி.

இப்படத்தில் வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி. நாயகி ஷெரீன் மிக அழகாக இருக்கிறார். அவரை வைத்த எடுத்த பாடலுக்கு ஷீட்டிங்கு என்னை கூப்பிடவில்லை, இனிமேல் என்னையும் கூப்பிடுங்கள். படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், எல்லோருக்கும் நன்றி

நாயகன் விஜய் சத்யா பேசியதாவது…
இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த அண்ணன் பழனிவேல் அவர்களுக்கு நன்றி. இயக்குநர் வெங்கடேஷ் சார் பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுத்தவர், என்னை வைத்து படமெடுப்பாரா என நினைத்தேன், என்னை நடிக்க வைத்ததற்கு நன்றி. இசையமைப்பாளர் அம்ரீஷ் உடைய அழகான பாடலுக்கு நன்றி. இப்போது தான் பயணம் ஆரம்பித்துள்ளது வெற்றிப்பயணமாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் A. வெங்கடேஷ் பேசியதாவது..

இந்தப்படத்தின் கதையை தயாரிப்பாளர் தரப்பில் ரெடி செய்து வைத்திருந்தார்கள், நாயகன் விஜய் சத்யா தான் என்னிடம் இந்தக்கதையை சொன்னார். கதை சொன்னவுடன் எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

ரஜினி டைட்டில் இந்த படத்திற்கு பொருத்தமாக ஈர்ப்புடன் இருந்தது. பழனிவேல் சார் தான் இந்த வாய்ப்பு தந்தார். எல்லாவற்றையும் இயக்குநர் முடிவுக்கு விட்டுவிடுவார். அவருக்கு வாத்தியார் எனும் படம் செய்தேன். அந்த படம் போல் இந்தப்படம்ஜ்ம் அவருக்கு பெரிய அளவில் லாபம் சம்பாதித்து தரும், இமான் சார் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. வாத்தியார் படத்திற்கு அவர் தான் இசை அன்று எப்படியோ இன்றும் அப்படியே பழகுகிறார்.

வெற்றி வந்தால் எல்லோரும் மறந்து விடுவார்கள், என் வாழ்க்கையில் அது நடந்துள்ளது அப்படி இல்லாமல் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஷெரீன் மிக சிறப்பான ஒத்துழைப்பை தந்தார். ஒளிப்பதிவு, எடிட்டிங் அபாரமாக செய்துள்ளார்கள். 30 நாளில் இந்தப்படத்தின் ஷீட்டிங்கை முடித்துள்ளேன். அம்ரீஷ் அருமையான இசையை தந்துள்ளார். உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.

இத்திரைப்படம் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் திரைக்குவரவுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில், ஆக்சன், காமெடி, கலந்த குடும்ப திரைப்படமாக, திரையரங்கில் ரசிகர்கள் கோலகலமாக கொண்டாடும் படமாக வரவுள்ளது.

Kalaipuli S Thanu speech at Rajini movie audio launch

More Articles
Follows