லைக்கா – அனிருத் கூட்டணியில் ‘தலைவர் 170’.; ரஜினியுடன் இணைந்த 3 அழகிய ஹீரோயின்ஸ்

லைக்கா – அனிருத் கூட்டணியில் ‘தலைவர் 170’.; ரஜினியுடன் இணைந்த 3 அழகிய ஹீரோயின்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரஜினி நடிப்பில் உருவாகி திரைக்கு வரவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்த படம் 2024 பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பற்றிய அறிவிப்பை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ‘ஜெய்பீம்’ புகழ் ஞானவேல் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

இதனையடுத்து இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகைகள் மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் & ரித்திகா சிங் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

ரஜினியுடன் இணைவது குறித்து மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகைகள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

Manju Warrier Ritika Singh Dushara Vijayan on board Rajini 170

மீண்டும் இணையும் ‘மாமன்னன்’ கூட்டணி.; சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது

மீண்டும் இணையும் ‘மாமன்னன்’ கூட்டணி.; சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘மாமன்னன்’.

இந்த படத்தில் பகத்பாஸில் மற்றும் வடிவேல் ஆகியோரது கேரக்டர்கள் பாராட்டும் வகையில் இருந்தன.

இந்தப் படத்தில் உதயநிதி நாயகனாக நடித்திருந்தாலும் பகத்தின் வில்லன் கேரக்டர் பெருமளவில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் இதன் ஷூட்டிங் அடுத்த வருடம் தான் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

Fahad Faazil and Vadivelu teams up again

ரஜினி – விக்ரம் – சூர்யா படத்தயாரிப்பாளர் V.A.துரை காலமானார்

ரஜினி – விக்ரம் – சூர்யா படத்தயாரிப்பாளர் V.A.துரை காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி , கஜேந்திரா, பாபா, பிதாமகன் போன்ற படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் V.A.துரை இன்று (2.10.2023) இரவு உடல் நலம் சரியில்லாமல் காலமானார்.

இவருக்கு வயது 69. (7.4.1954) இவருக்கு விஜயலட்சுமி, லட்சுமி என்று இரண்டு மனைவிகள் உண்டு. முதல் மனைவிக்கு ஸ்ருதி, சிந்து என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது.

இரண்டாவது மனைவிக்கு கீர்த்தனா என்ற ஒரு மகள் இருக்கிறார்.

தயாரிப்பாளர் V.A.துரைக்கு சர்க்கரை நோய் இருந்ததால் அவருக்கு ஆபரேஷன் மூலம் ஒரு கால் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவரது முகவரி..

முகவரி : 8/6 கடம்பாடி அம்மன் தெரு, வளசரவாக்கம் சென்னை 600 087
தொடர்புக்கு:
லோகு 9176394 592, 9841812350

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், ஆயுட்கால உறுப்பினரும், பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு போன்ற மாபெரும் வெற்றிப்பட தயாரிப்பாளருமான திரு.வி. ஏ. துரை அவர்கள் சற்று முன்பு காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
நிர்வாகிகள்
செயற்குழு உறுப்பினர்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

Producer VA Durai passes away

பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ சூட்டிங் அப்டேட்

பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண்- இயக்குநர் ஹரிஷ் சங்கர் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகி வரும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் பரபரப்பான படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் சங்கரின் வித்தியாசமான கலவையில் பவர் பேக் செய்யப்பட்ட ஆக்ஷன் காட்சிகளும், பவர்ஸ்டாரின் பவரான நடிப்புடன் தீவிரமாக நடைபெற்று வந்த ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் படத்தை பற்றிய புதிய அப்டேட்களை தயாரிப்பாளர்கள் வெளியிடவுள்ளனர்.

பணிகள் விரைவாக நடைபெற்று வருவதை கண்டு படக் குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

‘உஸ்தா பகத்சிங்’ ஒரு பெரிய அதிர்வை உருவாக்கியிருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வெளியான ‘கப்பர் சிங்’ திரைப்படம்- பரபரப்பான வெற்றியைப் பெற்றதுடன் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்து பெரும் வரவேற்பையும் பெற்றது.

இந்த திரைப்படத்தில் மிக முக்கியமாக ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.‌

தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தை தயாரித்து வருகிறது.

இதன் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் ஆக்சன் என்டர்டெய்னராக உருவாக்கி வருகின்றனர்.

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாணுடன் நடிகை ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் அஸ்த்தோஷ் ராணா, ‘கே ஜி எஃப்’ புகழ் அவினாஷ், கௌதமி, நர்ரா சீனு, நாக மகேஷ் மற்றும் ‘டெம்பர்’ வம்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை சோட்டா கே. பிரசாத் கையாள, அதிரடி சண்டை காட்சிகளை ராம் – லக்ஷ்மன் அமைத்திருக்கிறார்கள்.

மக்கள் தொடர்பு பணிகளை யுவராஜ் மேற்கொள்கிறார்.

Pawan Kalyan Harish Shankars Ustaad Bhagat Singh Shoot Wrapped Up

ONE 2 ONE – பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்புடன் இணைந்த சுந்தர் சி.

ONE 2 ONE – பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்புடன் இணைந்த சுந்தர் சி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் படம் “ஒன் 2 ஒன்” படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

மின்னல் வேகத்தில் நகரும் ரயிலுக்கு மேலும், கீழும், கடும் ஆக்ரோஷத்துடன் சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இடம்பெற்றிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பெரும் ஆவலை தூண்டுகிறது.

ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான கமர்ஷியல் விருந்துள்ளது என்பதை ஃபர்ஸ்ட் லுக் உறுதிப்படுத்துகிறது.

ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர்.C மிரட்டலாக நடித்துள்ளார்.

அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் அட்டகாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் பரமபதம் விளையாட்டு படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய் வர்மன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தைத் தொடர்ந்து இயக்குநர் K.திருஞானம், விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சுந்தர்.C நாயகனாக நடிக்கிறார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், விஜய் வர்மன் மற்றும் நடிகை நீது சந்த்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ்கான் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்திற்காக இசையமைப்பாளர் சித்தார்த் விபின் அட்டகாசமான நான்கு பாடல்களை இசையமைத்துள்ளார்.

முன்னதாக இவரின் இசையில் பிரமித்து, புத்தம் புதிய ஐஃபோன் வழங்கி அவரைப் படக்குழு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில் நுட்பக் குழு விபரம்…

தயாரிப்பு – 24 HRS புரொடக்‌ஷன்ஸ்
எழுத்து இயக்கம் – K.திருஞானம்
இசை – சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு – S KA பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன்
எடிட்டிங் – C S பிரேம் குமார்
கலை இயக்கம் – R ஜனார்த்தனன்
பாடல்கள் – மோகன் ராஜன்
சண்டைப்பயிற்சி – சிறுத்தை கணேஷ் , ரக்கர் ராம்
நடனம் – தீனா
லைன் புரடியூசர் – K கேசவன்
சவுண்ட் & மிக்ஸிங் – T உதயகுமார்
ஸ்டில்ஸ் – V பாக்யராஜ்
D I – ஶ்ரீ கலாசா ஸ்டூடியோஸ்
கலரிஸ்ட் – ரகுராமன்
விஷுவல் எஃபெக்ட்ஸ் & சிஜி – டி நோட் ஸ்டுடியோ
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)
பப்ளிசிட்டி டிசைன் – தினேஷ் அசோக்

Sundar C and Anurag kashyap starrer One to One movie

ராஜூமுருகன் – எஸ்.பி.சினிமாஸ் உருவாக்கிய புதிய கூட்டணி

ராஜூமுருகன் – எஸ்.பி.சினிமாஸ் உருவாக்கிய புதிய கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல வெற்றிப்படங்களைக் கொடுத்த தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி. சினிமாஸ் தங்களின் புதிய படம் குறித்தான அறிவிப்புடன் வந்துள்ளனர்.

இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநர் ராஜூமுருகனுடன் இணைந்து தயாரிக்கிறார்கள்.

நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தொடர்ந்து தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் வெற்றிப் பட இயக்குநருடன் இணைந்து புதிய படம் தயாரிக்கும் போது நிச்சயம் அது தரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் அமையும்.

அப்படியொரு தரமாம படைப்பாக எஸ்.பி. சினிமாஸ் இயக்குநர் ராஜூமுருகனுடன் இணைந்து தயாரிக்க இருக்கும் படம் அமைய இருக்கிறது.

கூடுதல் தகவல்…

கார்த்திக் நடிப்பில் ராஜூ முருகன் இயக்கியுள்ள ‘ஜப்பான்’ படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SP Cinemas collaborates with filmmaker Raju Murugan

Chennai (October 1, 2023) – SP Cinemas and filmmaker Raju Murugan have officially announced their collaboration to produce content oriented movies in Tamil.

SP Cinemas has been a pillar in escalating the value of many content-driven Tamil movies by producing and distributing them. On the counterpart, writer-director Raju Murugan has been an iconic emblem of Tamil Cinema, who is illustrious for his beautiful and realistic creations. Now both reputed brands are coming together to produce many valuable and content-driven movies, which will encourage and exhibit the potential of both aspiring and well-experienced actors, directors, and technicians.

They strongly believe this collaboration will open gates for the talented individuals, who’ve been dreaming of a breakthrough in the industry. The official announcement pertaining to these projects will be made soon.

Filmmaker Raju Murugan holds special attention for making movies that have touched the hearts of audiences with the native essence including the National award-winning movie Joker, Cuckoo, Gypsy, and Karthi’s upcoming film ‘Japan’ scheduled for Diwali release.

More Articles
Follows