தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டி.ஜே. ஞானவேல் இயக்கிய ‘ஜெய்பீம்’ படத்தில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.
சூர்யாவே படத்தை தயாரித்து ஓடிடி தளத்தில் கடந்தாண்டு 2021 வெளியிட்டார்.
இந்த திரைப்படம் வன்னியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக பாமகவினர் அப்போதே எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது ‘ஜெய்பீம்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார்.
மத நம்பிக்கையையும், புனித வழிபாட்டு அடையாளங்களையும், சமாதி வைத்து தெய்வமாக வணங்கும் தெய்வத்திரு ‘குரு’ என்பவரை பழங்குடி மக்களை வதைத்துக் கொல்லும் அரக்கனாக ஜெய்பீம் சினிமாவில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வன்னிய குல சாதியினர் ST சாதியினரை கொடுமை செய்வதாக காட்சிப்படுத்தி உள்ளதாக தனது நண்பர்கள் தன்னிடம் கூறும் போது அவமான மடைந்தேன் என சந்தோஷ் நாயகர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உண்மை கதையில்… துணை ஆய்வாளரின் அசல்பெயர் அந்தோணிசாமி. அவர் பிசி வகுப்பைச் சேர்ந்தவர்.
ஆனால், வன்னியர்களை குற்றவாளிகளாக காட்சிப்படுத்த தவறான நோக்கத்தில் அந்தோணிசாமி பெயரை மாற்றி குருமூர்த்தி என வைத்தனர்.
எஸ்.ஐ. குருமூர்த்தி வீட்டில் உள்ள காலண்டரில் அக்கினி குண்டம் படத்தையும் காட்சி படுத்தி இருந்தனர். (பின்னர் மாற்றியமைக்கப்பட்டது)
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்பட்ட நிலையில் சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சந்தோஷ் நாயகர்.
புகார் மீது 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல்நிலைய ஆய்வாளருக்கு சைதை நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்தில் ஜெய்பீம் படத்தில் காட்சி என்ற புகாரில் உத்தரவு.
மேலும் முதல் தகவல் அறிக்கையை மே 20ல் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
Jai Bhim case: Court orders FIR against Suriya, Jyothika and Director Gnanavel