BREAKING ‘சூர்யா 41’ சூட்டிங் நிறுத்தம்?; இயக்குனர் பாலாவுடன் வாக்குவாதம்.: நடந்தது என்ன.?

BREAKING ‘சூர்யா 41’ சூட்டிங் நிறுத்தம்?; இயக்குனர் பாலாவுடன் வாக்குவாதம்.: நடந்தது என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நந்தா & பிதாமகன் படங்களுக்கு பிறகு இயக்குநர் பாலா உடன் சூர்யா மீண்டும் இணைந்துள்ளார்.

இந்த படம் சூர்யாவின் 41-வது படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் ட்ரெண்ங்டில் இருக்கும் கீர்த்தி ஷெட்டியும், மலையாள நடிகை மமிதா பைஜூவும் படத்தில் நடிக்கவுள்ளனர்.

மார்ச் 28 முதல் படப்பூஜையுடன் கன்னியாகுமரியில் ஷூட்டிங் தொடங்கியது.

இந்த நிலையில் இன்று சற்றுமுன் சூர்யா 41 சூட்டிங் நிறுத்தம் எனவும் நடிகர் சூர்யா உடன் இயக்குனர் பாலா வாக்குவாதம் எனவும் தகவல்கள் பரவியது.

ஆனால்… மேற்படி செய்தி முற்றிலும் தவறானது. பாலா-சூர்யா கூட்டணியின் முதல் கட்டப் படப்பிடிப்பு, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் பகுதிகளில், மிகுந்த புரிதலுணர்வுடன் நடைபெற்று திட்டமிட்ட தேதியில் முடிந்தது.

இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் கோவாவில் துவங்குகிறது” என்று படத்தின் இணைத்தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை பிஆர்ஓ தரப்பில் உறுதி செய்துள்ளனர்.

Suriya 41 movie dropped? Here’s every thing you need to know

பாலமுருகன் – அம்மு அபிராமி கூட்டணியில் ‘குக் வித் கோமாளி’ புகழ்

பாலமுருகன் – அம்மு அபிராமி கூட்டணியில் ‘குக் வித் கோமாளி’ புகழ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பால முருகன் – அம்மு அபிராமி – “குக் வித் கோமாளி” புகழ் நடிக்கும் ‘பாலமுருகனின் குதூகலம்’.

மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “பாலமுருகனின் குதூகலம்”. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார்.

இவர் பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களிடம் துணை – இணை இயக்குனராக பணியாற்றியவர்.

மாண்புமிகு தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் ஆசியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பூரில் இனிதே துவங்கியது.

புது முகம் பால முருகன் கதாநாயகனாக நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்” படத்தில் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கின்றார்.

‘குக் வித் கோமாளி” புகழ், பிஜார்ன் சுர்ராவ், சன்சீவி கோ சுவாமி, கவிதா பாரதி, TSR, அனிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு – மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ்
இயக்கம் – உலகநாதன் சந்திரசேகரன்
ஒளிப்பதிவு – மணி பெருமாள்
இசை – பிஜார்ன் சுர்ராவ்
படத்தொகுப்பு – மப்பு பிரகாஷ்
கலை – L.கோபி MFA
சண்டைப்பயிற்சி – Danger மணி
நடனம் – அப்சர்
நிர்வாக தயாரிப்பு – அம்பிகாபதி.M

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Cooku With Comali Pugazh join hands with Ammu Abhirami for a new movie ?

‘நடிகவேள்’ எம்ஆர். ராதா வாழ்க்கை தொடரை தயாரிக்கும் ராதிகா

‘நடிகவேள்’ எம்ஆர். ராதா வாழ்க்கை தொடரை தயாரிக்கும் ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர்களுக்கே பெரியளவில் பேரும் புகழும் கிடைக்கும். கிடைத்து வருகிறது. ஆனால் ஹீரோக்களை மீறி வில்லன்கள், காமெடியன்கள் என ஒரு சிலரே அந்த புகழை அடைகின்றனர்.

அதில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு பாதையை வகுத்தவர்களில் முக்கியமானர் பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதா.

இவர் வில்லன் வேடங்களை தொடர்ந்து செய்து வந்தாலும் அதில் நகைச்சுவையுடன் சிந்திக்க தகுத்த கருத்துக்களை கூறி பகுத்தறிவை வளர்த்தார். மேலும் பல மேடை நாடகங்களிலும் நடித்து மக்களை கவர்ந்து வைத்திருந்தார்.

இவருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் தொழில் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் போட்டி நிலவியது.

நடிகவேள் எம்ஆர். ராதாவின் வாழ்க்கையை படமாக்கும் பேரன் ஐக்

ஒரு கட்டத்தில் நிஜ வாழ்க்கையிலேயே எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டவர் எம்.ஆர்.ராதா.

அதன்பின்னரே எம்.ஜி.ஆர் தன் குரல் வளத்தை இழந்தார். சரியாக பேச முடியாமல் வார்த்தைகளை குளறியபடியே பேசுவார். அப்படியிருந்தும் தமிழக அரசியலில் மக்களை கவர்ந்து மக்களின் முதல்வராக பதவி வகித்தார்.

எம்ஜீஆரை சுட்ட குற்றத்திற்காக எம்.ஆர்.ராதாவுக்கு சிறை தண்டனையும் கிடைத்தது.

இந்த நிலையில் எம்ஜிஆர் மற்றும் எம்ஆர். ராதா மோதலை மையப்படுத்தி வெப் சீரிஸை ஒன்றைத் தயாரிக்க போகிறாராம் எம்ஆர். ராதாவின் மகள் நடிகை ராதிகா.

எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையை மைப்படுத்தியே இந்த படம் இருக்கும் என ஒரு பிரபல தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார் ராதிகா.

இதில் எம்ஜீஆர் மற்றும் எம்ஆர். ராதா கேரக்டர்களில் நடிப்பவர்கள் யார்? என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

ராதாரவி, எம்ஆர்ஆர். வாசு, ராதிகா மற்றும் நிரோஷா உள்ளிட்ட 8 பேர் எம்ஆர். ராதாவின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Raadhika plans a web series on father MR Radha’s life

GVP – RKS – KSR – MGR – கீர்த்தி நடித்த படங்கள் மே 5-6ல் ரிலீஸ்

GVP – RKS – KSR – MGR – கீர்த்தி நடித்த படங்கள் மே 5-6ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வாரம் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 6 திரைப்படங்கள் ரிலீசாகவுள்ளது.

மே 5ம் தேதி ஈட்டி பட இயக்குனர் ரவிஅரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘ஐங்கரன்‘ படம் வெளியாக உள்ளது.

இதற்கு அடுத்த நாள் மே 6ம் தேதி கேஎஸ் ரவிக்குமார் நடித்துள்ள ‘கூகுள் குட்டப்பா’, ஆர்கே சுரேஷ் நடித்துள்ள ‘விசித்திரன்’, நாமக்கல் எம்ஜிஆர் நடித்துள்ள ‘உழைக்கும் கைகள்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

சாமி இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான ‘அக்கா குருவி’ என்ற படம் மே 6ல் தியேட்டர்களில் ரிலீசாகிறது. மஜித் மஜிதி இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற Children of Heaven என்று படத்தை தமிழில் மறுஉருவாக்கம் செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி. இப்படம் நேரடி தமிழ் படமாகவும், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது.

இத்துடன் சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலும் எதிர்பார்ப்புக்குரிய ‘வாய்தா, துணிகரம்’ ஆகிய படங்களும் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளன.

இத்துடன் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சாணி காயிதம்‘ படம் மே 6ம் தேதியன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த படத்தை ராக்கி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இதற்கு அடுத்த வாரம் மே 13ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் ரிலீசாகவுள்ளது. மேலும் சில படங்களும் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.

List of films releasing in May 5th and 6th

மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தை தயாரிக்கும் பிரபல நடிகை

மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தை தயாரிக்கும் பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இணைந்துள்ள நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

இரண்டு மெகா ஸ்டார்கள் நடித்திருந்தும் இந்த படம் படுதோல்வியை தழுவியுள்ளது.

இவையில்லாமல் காட்பாதர், போலோ சங்கர் உள்ளிட்ட படங்களும் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வருகிறது.

மேலும் ஓரிரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிரஞ்சீவி.

இந்த நிலையில் சிரஞ்சீவி நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை தன் ராடன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் நடிகை ராதிகா.

“எங்களுடைய ராடன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதற்காக சிரஞ்சீவிக்கு நன்றி. மாஸ் மன்னனான சிரஞ்சீவியுடன் இணைந்து பிளாக்பஸ்டர் படத்தை உருவாக்க காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார் ராதிகா.

இதில் நடிகரும் ராதிகாவின் கணவருமான சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என நம்பலாம்.

1980 ஆம் ஆண்டுகளில் சிரஞ்சீவி மற்றும் ராதிகா இணைந்து பல தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

This famous actress to produce Chiranjeevi’s next flick

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமலின் ‘விக்ரம்’ பட இசை வெளியீடு

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமலின் ‘விக்ரம்’ பட இசை வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடிப்பில் 232வது படமாக உருவாகியுள் படம் ‛விக்ரம்’. இந்த படத்தை கமல் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், ஷிவானி, காளிதாஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

கேங்ஸ்டர் மற்றும் சிறை கைதிகளை மையப்படுத்தை இந்த படத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது படத்திற்கான புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அண்மையில் ரயில் பெட்டிகளில் விக்ரம் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்த விளம்பரங்களை கமல் வீடியோவாக பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் வருகிற மே 15ம் தேதி விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த படம் அடுத்த மாதம் ஜூன் 3ல் படம் திரைக்கு வர உள்ளது.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram movie audio and trailer launch on May 15th

More Articles
Follows