தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் இந்தாண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.
இப்படம் ஏப்ரல் 27ல் வெளியாகும் என தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார்.
ஆனால் கடந்த ஒரு மாத காலமாக எந்த ஒரு புதுப்படங்களையும் ரிலீஸ் செய்யாமல் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் செய்து வருகிறது.
இந்நிலையில் ஒரு படத்தை சென்சாருக்கு அனுப்புவதற்கு முன்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் அனுமதி கடிதம் வாங்க வேண்டும்.
அதன் பின்னரே படம் சென்சாருக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
இந்நிலையில் காலா படத்திற்கு கிளியரன்ஸ் வழங்க தயாரிப்பாளர்கள் சங்கம் தாமதம் செய்து வந்தது.
அதன்பின்னர் ரஜினி, விஷால் சந்திப்பின் போது இந்த விவகாரம் பேசப்பட, காலா படத்தை சென்சாருக்கு அனுப்ப தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி கடிதம் வழங்கியுள்ளது.
இதனையடுத்து காலா சென்சாருக்கு சென்றுள்ளது.
படத்தில் உள்ள சில வசனங்களுக்கு மியூட், 7 காட்சிகளை கட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்சார் அதிகாரிகளிடம் பட இயக்குனர் ரஞ்சித் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது மீண்டும் படத்தை மறு தணிக்கைக்காக அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Super Star Rajinis Kaala movie Recensor updates