தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல கல்கி எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வன்.
இதனை திரைப்படமாக தயாரிக்க பலர் முயன்றனர்.
குறிப்பாக மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் விரும்பினார். அதன்பின்னர் சிவாஜி கணேசன் அவர்களும் நடிக்க விரும்பினார்.
இவர்களுக்கு பிறகு கமல்ஹாசனும் முயற்சித்தார். ஆனால் ஏனோ அது நடைபெறவில்லை.
தற்போது மணிரத்னம் தனது அடுத்த படமாக பொன்னியின் செல்வனை இயக்குகிறார்.
ரூ. 300 கோடி செலவில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இதனை தயாரிக்க உள்ளாராம்.
இந்நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் பொன்னியின் செல்வன் கதையை ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
சௌவுந்தர்யா ரஜினியின் மே 6 என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம், எம்எக்ஸ் பிளேயர் நிறுவனத்துடன் இணைந்து, இந்த நாவலை, வெப் சீரிஸாக பல பாகங்களாக தயாரிக்க உள்ளனர்.
இந்த பிரபலமான வரலாற்று வலைத் தொடரின் தயாரிப்பாளர் மற்றும் கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்ற இருக்கிறார் சவுந்தர்யா.
இந்த மெகா காவியத்தை சூரிய பிரதாப் என்பவர் இயக்குகிறார்.
இவர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சவுந்தர்யாவுடன் இணைந்து உதவியாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பலரும் அறிவித்து விட்டு முடியாமல் போனதை தற்போது சவுந்தர்யா கையில் எடுத்துள்ளார். அவரை வாழ்த்துவோம்.