பொன்னியின் செல்வன்: எம்ஜிஆர்-கமல் கை விட்டதை சௌந்தர்யா ரஜினி முடிப்பாரா.?

பொன்னியின் செல்வன்: எம்ஜிஆர்-கமல் கை விட்டதை சௌந்தர்யா ரஜினி முடிப்பாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundarya rajinikanthபிரபல கல்கி எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வன்.

இதனை திரைப்படமாக தயாரிக்க பலர் முயன்றனர்.

குறிப்பாக மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் விரும்பினார். அதன்பின்னர் சிவாஜி கணேசன் அவர்களும் நடிக்க விரும்பினார்.

இவர்களுக்கு பிறகு கமல்ஹாசனும் முயற்சித்தார். ஆனால் ஏனோ அது நடைபெறவில்லை.

தற்போது மணிரத்னம் தனது அடுத்த படமாக பொன்னியின் செல்வனை இயக்குகிறார்.

ரூ. 300 கோடி செலவில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இதனை தயாரிக்க உள்ளாராம்.

இந்நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் பொன்னியின் செல்வன் கதையை ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

சௌவுந்தர்யா ரஜினியின் மே 6 என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம், எம்எக்ஸ் பிளேயர் நிறுவனத்துடன் இணைந்து, இந்த நாவலை, வெப் சீரிஸாக பல பாகங்களாக தயாரிக்க உள்ளனர்.

இந்த பிரபலமான வரலாற்று வலைத் தொடரின் தயாரிப்பாளர் மற்றும் கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்ற இருக்கிறார் சவுந்தர்யா.

இந்த மெகா காவியத்தை சூரிய பிரதாப் என்பவர் இயக்குகிறார்.

இவர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சவுந்தர்யாவுடன் இணைந்து உதவியாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பலரும் அறிவித்து விட்டு முடியாமல் போனதை தற்போது சவுந்தர்யா கையில் எடுத்துள்ளார். அவரை வாழ்த்துவோம்.

தலித் திரைப்பட விழாவில் காலா-பரியேறும் பெருமாள்-கக்கூஸ் படங்கள்

தலித் திரைப்பட விழாவில் காலா-பரியேறும் பெருமாள்-கக்கூஸ் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala and pariyerum perumalஅமெரிக்கா நாட்டில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உலக தலித் திரைப்பட விழா விரைவில் ஒன்று நடைபெற உள்ளதாம்.

இது அங்கு நடப்பது முதன்முறை என கூறப்படுகிறது.

வருகிற பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடைபெறவுள்ள இந்த விழாவில் உலக அளவில் பலமொழி படங்களும் திரையிடப்பட உள்ளன.

இதில்.. ரஞ்சித் இயக்கி ரஜினிகாந்த் நடித்த காலா மற்றும் ரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் மற்றும் திவ்யபாரதி இயக்கிய கக்கூஸ் என்ற தமிழ் ஆவணப் படமும் திரையிடப்படுகிறது.

கேரளாவில் மாஸ் காட்டும் தமிழ் ஹீரோஸ்..; வருகிறது புது கட்டுப்பாடு

கேரளாவில் மாஸ் காட்டும் தமிழ் ஹீரோஸ்..; வருகிறது புது கட்டுப்பாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and rajiniகேரளாவில் நேரடி மலையாள படங்களுக்கு நிகராக சொல்லப்போனால் அதை விட அதிகமாக சக்கை போடு போடுகிறது தமிழ் படங்கள்.

இதனால் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்கள் ஒதுக்கப்படுகின்றன.

ரஜினியின் கபாலி, பேட்ட, விஜய்யின் மெர்சல், சர்கார் உள்ளிட்ட படங்கள் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது.

இதனால் மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

அதன்படி, கேரள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ் படங்களை கேரளாவில் வெளியிடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தவுள்ளனர்.

அதாவது இனிமேல் கேரளாவில் அதிகபட்சம் 125 தியேட்டர்களில் மட்டுமே தமிழ் படங்களை வெளியிடலாம்.

அதேபோல மலையாள படங்கள் அதிகபட்சமாக 160லிருந்து 170 தியேட்டர்கள் வரை மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும்.

பெரிய படங்களுக்கு மட்டும் விதிவிலக்காக அதிக தியேட்டர்களை ஒதுக்கி கொள்ளலாம் என்ற முடிவை விரைவில் அமல்படுத்தஉள்ளனர்.

மார்ச் 10ல் திருமணம்..: 21 வயதாகும் சாயிஷா மணக்கும் ஆர்யா

மார்ச் 10ல் திருமணம்..: 21 வயதாகும் சாயிஷா மணக்கும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya sayyeshaஎங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் பெண் தேடினாலும் அதில் கலந்துக் கொண்ட பெண்களை நிராகரித்தார் நடிகர் ஆர்யா.

அதன்பின்னர் ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்த போது நடிகை சாயிஷா உடன் காதல் கொண்டுள்ளார்.

அந்த காதலை சூர்யாவுடன் ‘காப்பான்’ படத்தில் நடித்த போது நன்றாகவே வளர்த்துள்ளார்.

அதன்படி தங்கள் காதலை பெற்றோரிடம் தெரிவித்து விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்.

வருகிற மார்ச் 10ம் தேதி ஐதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் ஆர்யாவுக்கு தற்போது 38 வயதாகிறது. சாயிஷாவுக்கு 21 வயது ஆகிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ஹிந்தி நடிகர் திலீப் குமாரின் உறவினர் சாயிஷா என்பது இங்கே கூடுதல் தகவல்.

இருவரும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5 நாட்களில் 5 லட்சம் பார்வையாளர்களை பெற்ற ’அப்பா காண்டம்’

5 நாட்களில் 5 லட்சம் பார்வையாளர்களை பெற்ற ’அப்பா காண்டம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Appa Kaandam 2019 Tamil Short Film crossed 5L views in 5 daysயூடியூப் திரைவிமர்சகர் ஜாக்கிசேகர் நடிப்பில் ஆர்வா இயக்கத்தில் சமீபத்தில் யூடியூபில் வலையேற்றப்பட்ட அப்பா காண்டம் குறும்படம் ஐந்து நாட்களில் 5 இலட்சம் பார்வையாளர்களை பெற்று இருக்கும் அதே வேளையில் இயக்குனர் ஆர்வா’விற்கு இந்தக் குறும்படம் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க வளர்ந்து வரும் இயக்குனர் ஆர்வா இந்த குறும்படத்தை இயக்கி இருக்கின்றார்.

இவர் இதற்கு முன் நிறைய தொலைகாட்சி தொடர்களில் பணிபுரிந்த அனுபவத்தின் வாயிலாக இந்த திரைப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கின்றார்…

இந்த திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் பிரபல திரைப்பட விமர்சகர் ஜாக்கிசேகர் மற்றும் ஹரிஷ் ரவிச்சந்திரன் நடித்துள்ளார்கள்.

இதில் மகனாக நடித்த ஹரிஷ் ரவிச்சந்திரன் சில குறும்படங்களில் நடித்தவர்… அப்பாவாக நடித்த திரைவிமர்சகர் ஜாக்கிசேகர் சிகரம் தொடு திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்து இருந்தாலும் முழு நீள குறும்படத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசி நடித்தது இதுவே முதல் முறை.

அதற்கு காரணம் இயக்குனர் ஆர்வா, ஜாக்கிசேகர் திறமையின் மேல் வைத்த நம்பிக்கை எனலாம்.

இந்தி திரைப்படம் பொறுப்புள்ள நவீனகால அப்பா பாதை மாறும் பையனுக்கு எவ்விதமாக ஆலோசனைகள் வழங்குகின்றார் என்பதே இந்த திரைப்படத்தின் மையக்கரு.

இந்த திரைப்படம் யூடியூபில் கடந்த சனிக்கிழமை காலை பத்து மணிக்கு 70 வது குடியரசு தினத்தன்று வெளியானது. 26 நிமிஷம் ஓடும் இந்த குறும்படமானது வலையேற்றிய ஐந்து நாட்களில் 5 இலட்சம் பார்வையாளர்களை பெற்றதோடு, மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாஸிட்டிவ் கமெண்டுகளை பெற்றுள்ளது.

எதிர்கருத்துக்கள் குறைவாகவே காணப்படுகின்றன. அதற்கு காரணம், படத்தில் நடித்த ஜாக்கி சேகரின் அப்பா கேரக்டர் போல தனக்கும் இப்படி ஒரு அப்பா கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று படம் பார்த்த ரசிகனை ஏங்க வைத்திருக்கிறது.

இதுபற்றி இயக்குனர் ஆர்வாவிடம் கேட்டபோது…

எனது முதல்படம் 5 அயிரம் பேர் பார்த்தால் பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால் 6 லட்சம் பார்வையாளார்கள் எனும் போது நான் சரியாக பயணித்திருப்பதாக எண்ணுகிறேன்.

பாஸிட்டிவ் கமெண்டுகளை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் நெகட்டிவ் கமெண்டுகளையும் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.

காண்டம் என்றால் நிறைய பேர் கருத்தடை சாதனம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இது தமிழ் காண்டம் என்பதை குறிக்கும்.

உதாரணத்திற்கு சுந்தர காண்டம், ஆரண்ய காண்டம் போல இது அப்பா காண்டம்.
பொதுவாக காண்டம் என்றால் ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருந்து தெளிவான ஒரு மனநிலைக்கு வரும் படலத்தைத்தான் காண்டம் என்று கூறுவார்கள்.

இதில் அப்பாவிற்கும் அப்படி ஒரு மனக்குழப்பம்தான் ஏற்படுகிறது. அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் மையக்கதை என்று இயக்குனர் ஆர்வா, காண்டத்திற்கான விளக்கத்தை தெரிவிக்கிறார்.

சாம் இமயவனின் ஒளிப்பதிவு இந்த திரைப்படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்த அதே வேளையில் ஏஆர் ரனோஜ்’ன் இசையும் பின்னனி இசையும் இந்த குறும்படத்துக்கு மெருகூட்டின என்றால் மிகையாகது.

படத்தொகுப்பை பிரதிப் காட்சிகளை கோர்வையாக்கி இந்த திரைப்படத்தை ரசிக்க வைத்து இருக்கின்றார்..
மக்கள் தொடர்பு பணிகளை பி.ஆர்.ஓ. தியாகராஜன் கவனித்துக்கொள்ள ரெட் ஸ்டுடியோ தயாரிப்பு மேற்பார்வை பணிகளை நெல்சன் பாபு மற்றும் பாபு மாதேவ் செய்து முடித்துள்ளனர்.

விஷ்ணுகுமார் மற்றும் பிரதாப் இணைந்து அப்பா காண்டம் குறும்படத்தை தயாரித்து வழங்கியுள்ளார்கள்.

இந்த திரைப்படத்துக்கு தயாரிப்பு செலவாக சுமார் இரண்டரை லட்சம் செலவு செய்து இந்த குறும்படத்தை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட் ஸ்டுடியோ சார்பில் நிறைய குறும்படங்களை தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Appa Kaandam 2019 Tamil Short Film crossed 5L views in 5 days

உலகளவில் அரசியல் பார்வையுடைய 10 பாடல்களில் ரஞ்சித்தின் ‘மகிழ்ச்சி’

உலகளவில் அரசியல் பார்வையுடைய 10 பாடல்களில் ரஞ்சித்தின் ‘மகிழ்ச்சி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Australias green left weekly has listed tcl collectives magizhchi albumஇயக்குனர் பா.இரஞ்சித் தின் இசைக்குழுவான “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் ” குழுவினரின் “மகிழ்ச்சி” ஆல்பம் சமீபத்தில் வெளியானது.

முழுக்க முழுக்க தனியிசைக்கலைஞர்களைக்கொண்டு பாடி இசையமைத்த இந்த ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் வெளியிடப்பட்டது. தென்மா இசையமைத்திருந்தார்.

இந்தியாவில் நிலவும் சாதிய, வர்க்க, பாலின வேற்றுமைகளை சாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இன்னிலையில் உலக அளவில் அரசியல் பார்வையுடைய பத்து பாடல் தொகுப்புக்களில் “மகிழ்ச்சி” ஆல்பமும் இடம்பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிரீன்லெப்ட் ஊடகத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் தொகுப்புக்களில் “மகிழ்ச்சி” என்கிற பாடலை கபாலி, காலா படப்புகழ் இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Australias green left weekly has listed tcl collectives magizhchi album

Australias green left weekly has listed tcl collectives magizhchi album

More Articles
Follows