தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கலைப்புலி தாணு தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினி புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம்.
இப்படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்? என பெயரிடப்படலாம் எனவும் தகவல்கள் வந்தன.
இப்படத்தில் நடிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனிடையில், மோகன்லால் மகன் பிரணவ்வை நடிக்க நாடியிருக்கிறார்களாம்.
அவர் மறுக்கவே பின்னர் நாகார்ஜூனா அமலா தம்பதியரின் மகனான அகிலை நாட முற்பட்டார்களாம்.
ஆனால் இக்கேரக்டரில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினியே சொன்னதாக செய்திகள் வந்துள்ளன.
இதற்கு டபுள் ஒ.கே சொல்லி விட்டாராம் தனுஷ்.
எனவே, ‘கபாலி’ படத்தின் 100வது நாளில் செளந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் தகவலை தாணு அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை தொடர்ந்து சௌந்தர்யா இயக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.