தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை கடந்த 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு வேத் என்ற ஆண் குழந்தை உள்ளது.
தற்போது கருத்து வேறுபாடு இருவரும் விவாகரத்து பெற உள்ளனர் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.
இந்நிலையில், இதுகுறித்து சௌந்தர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…
“என் விவாகரத்து பற்றி வரும் செய்திகள் உண்மையே. நான் ஒரு வருடமாக கணவரை பிரிந்துதான் வாழ்கிறேன்.
விவகாரத்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது” என பதிவிட்டுள்ளார்.
பின்குறிப்பு : தமிழகத்தை சேர்ந்த பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் கணவரின் பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்வார்கள்.
ஆனால் சௌந்தர்யா தனது திருமணத்திற்கும் பிறகும் தன் அப்பாவின் பெயரை சேர்த்து சௌந்தர்யா ரஜினிகாந்த் என்றே குறிப்பிட்டு வந்தார்.
இது தொடர்பான கேள்விகளுக்கு ‘நான் என்றுமே ரஜினியின் மகள் என்று சொல்வதையே விரும்புகிறேன்’ என்று சில வருடங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.