தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2010ம் ஆண்டில் தொழிலதிபர் அஸ்வின் என்பவரை ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு வேத் என்ற பெயரில் 2 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
ஆனால் குழந்தை பிறந்த ஓராண்டில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
அதன் பின்னர் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.
தற்போது தந்தை ரஜினியுடன் வசித்து வருகிறார் சவுந்தர்யா.
இந்நிலையில் சௌந்தர்யா 2வது திருமணத்திற்கு தயாராகிவிட்டாராம்.
இந்த திருமணத்திற்கு ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
செளந்தர்யா திருமணம் செய்துகொள்ள இருப்பவரின் பெயர் விசாகன்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வணங்காமுடி என்ற தொழிலதிபரின் மகன் ஆவார். தற்போது தந்தையுடன் இருந்து இவரும் தொழிலை கவனித்து வருகிறாராம்.
இவரும் சவுந்தர்யாவும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தாகவும் பின்னர் பழக்கமாகி இருவரும் காதலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், விரைவில் திருமணத்தை மிக எளிமையாக நடத்தவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
சௌந்தர்யாவை விவாகரத்து செய்ய அஸ்வின் சில மாதங்களுக்கு முன்பே 2வது திருமணம் செய்துக் கொண்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Soundarya Rajinis 2nd marriage She going to marry an actor