தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ரஜினிகாந்த் 2020 டிசம்பர் மாதம் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார்.
ஆனால் அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அரசியலில் ஈடுப்பட போவதில்லை என நீண்ட விளக்கம் அளித்தார்.
இதனால் ரஜினி் ரசிகர்களும் அவரது வருகையை எதிர்பார்த்த தமிழர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் ரஜினி மகள் சவுந்தர்யா & அவரது கணவர் விசாகன் ஆகியோர் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் ரஜினிக்காக சிறப்பு தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யா ரஜினி தனது கணவருடன் வந்து வழிபாடு நடத்தினார்.
அப்போது அவர், தனது அம்மா லதா ரஜினி தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சி வெற்றி அடைய வேண்டும் என வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் தன் அப்பா ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் என சிறப்பு பூஜை செய்ய வந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர்களின் அனைத்து புது முயற்சிகளும் வெற்றி அடைய வேண்டும் என சங்கல்பம் செய்யப்பட்டதாம்.
எனவே இன்னும் சில தினங்களில் லதா ரஜினியின் புதிய கட்சி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
தலைவா… என்ன நடக்குது..??
Latha Rajinikanth to start a new political party ?