தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகின் எந்த மூலையில் எவர் வசித்தாலும் அவரை தொடர்பு கொள்ளும் எளிய சாதனமாக சமூக வலைத்தளங்கள் உருவெடுத்துள்ளன.
நம்முடைய நிஜ சமூகத்தை கூட மறந்து சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடப்பவர்களும் உண்டு.
புதிய உறவுகளை, நட்புகளை உருவாக்கவும் தொலைந்து போன தொலைத்து விட்ட பழைய நண்பர்கள் உறவை மீண்டும் புதுப்பிக்கவும் சமூக வலைத்தளங்கள் பயன்படுகின்றன.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், ‘HOOTE’ என்ற வாய்ஸ் மூலம் தொடர்பு கொள்ளும் புதிய சமூக வலைதளம் ஒன்றை இன்று தொடங்கினார்.
இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக ஊடக தளமான இதற்கு ‘hoote’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதனை சன்னி போக்கலா என்பவருடன் இணைந்து அவர் தொடங்கியுள்ளார்.
இதை ரஜினி தன் குரலில் பதிவு செய்து நேரலையில் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசும்போது…
எனக்கு எல்லாமே என் அப்பா தான். அவரின் ஆசியுடன் இதை தொடங்குகிறேன்.
தலைவர் குரலை கேட்கும் போது எனக்கு இந்த ஹூட் வாய்ஸ் சோஷியல் மீடியா குறித்த யோசனை தோன்றியது.
சிலருக்கு எழுத படிக்க தெரியாது. அவர்கள் தங்கள் குரலில் இதில் பதிவு செய்யலாம்.
என் அப்பாவுக்கு தமிழ் எழுத தெரியாது. ஆனால் அவருக்கு பல மொழிகள் தெரியும்”
என பேசினார் சௌந்தர்யா.
ரஜினிக்கு தமிழ் எழுத தெரியாது என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் பேரதிர்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நான் அரசியலுக்கு வருவேன் என 2017 டிசம்பர் 31ல் அறிவித்தார் ரஜினி. அதன் பிறகு சில தமிழ் ஆர்வலர்கள் ‘தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்’ என எதிர்ப்பு குரல்கள் கொடுத்தனர்.
அப்போது பல சர்ச்சைகள் உருவான நிலையில் நான் ‘பச்சைத் தமிழன்’ என பதிலடி கொடுத்து இருந்தார் ரஜினிகாந்த்.
இந்த நிலையில் தற்போது அப்பாவுக்கு (ரஜினிக்கு) தமிழ் எழுத தெரியாது என சௌந்தர்யா சொன்னது பல சர்ச்சைகளை ரசிகர்கள் & தமிழர்களிடையே உருவாக்கியுள்ளது.
பச்சை தமிழனுக்கு தமிழ் எழுத தெரியாதோ..?? என விமர்சகர்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
Soundarya Rajinikanth recent speech creates controversy