தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தாதாசாகேப் பால்கே விருதை டெல்லியில் ரஜினிகாந்த் பெற்ற நாள் அன்று Voice based Social Media HOOTE என்ற செயலியை சென்னையில் அறிமுகப்படுத்தினார் சௌந்தர்யா ரஜினி.
அன்று தன் காந்த குரலில் பேசி இந்த செயலியை தொடங்கிவைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அன்றைய நாள் முதல் இன்று வரை அவர் ஏதாவது சொல்ல விரும்பினால் இந்த HOOTE மூலமே பேசி மக்களிடமும் ரசிகர்களிடமும் பேசி வருகிறார்.
அண்மையில் புனித் ராஜ்குமார் மறைவுக்கும் இதன் மூலமே குரலில் இரங்கல் தெரிவித்தார் ரஜினி.
தன் மகள் சௌந்தர்யாவின் HOOTEக்கு ப்ராண்ட் போல செயல்படுகிறார் ரஜினி என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்டா என வெளிநாட்டு செயலிகளுக்கு ஆதரவளிப்பதை விட தன் மகள் நிறுவிய சோஷியல் மீடியாவுக்கு ஒரு தந்தை ஆதரவளிப்பது ஒன்றும் குற்றம் இல்லையே.
மேலும் இது உலகத்திற்காக நம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலிதானே.
வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பல மணி நேரம் டைப் செய்து போஸ்ட் செய்வதை விட பலரும் தங்கள் குரல் மூலமே பதிவு செய்வதையே விரும்புகின்றனர்.
அதுபோன்ற ஒரு தளத்தை சௌந்தர்யா உருவாக்கி தந்துள்ளார்.
இந்த HOOTE செயலியை பயன்படுத்துவதன் மூலம் படிக்காதவர்களுக்கும் எழுத தெரியாதவர்களுக்கும் நல்ல பலனை பெறலாமே.
யார் எது செய்தாலும் குற்றம் என்று சொல்வதை விட நல்லது என்றால் ஏற்றுக் கொண்டால் அது நன்மைதானே.
அவர் வீட்டு ப்ராண்ட்டுக்கு அவரே ஒரு ப்ரண்டா.. ஒரு ப்ராண்டா இருக்கலேன்னா எப்படி.? கொஞ்சம் யோசிங்க பாஸ்..?
Is Rajinikanth brand ambassador for Hoot app?