தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ரெமோ’ படத்தின் வெற்றி விழாவில் தனக்கு நிறைய இடைஞ்சல்களை சிலர் செய்து வருகின்றனர் என சிவகார்த்திகேயன் கண்ணீர் மல்க பேசினார்.
இப்பிரச்சினை எழ முக்கிய காரணமானவர்களில் வேந்தர் மூவீஸ் மதனும் ஒருவர் என கூறப்பட்டது.
அதாவது வேந்தர் மூவிஸ்க்கு படம் செய்து தருவதாக ஒப்புக் கொண்ட சிவகார்த்திகேயன் ரூ. 3 கோடியை பெற்றதாக சொல்லப்பட்டு வருகிறது.
ஒருவேளை அவர் ஒப்புக் கொள்ளாவிட்டால், அப்பணத்துடன் வட்டியை சேர்த்து, ரூ. 9 கோடியை அவர் திருப்பித் தர வேண்டும் என திரையுலகைச் சேர்ந்த பலர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த மிரட்டலுக்கு பயந்து ரூ. 9 கோடியை திருப்பி கொடுக்க சிவகார்த்திகேயன் கொடுக்க முன்வந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது ஒருபுறம் இருக்க, வேந்தர் மூவிஸ் மதன் சிறையில் இருப்பதால், அப்பணத்திற்கு சிலர் சொந்தம் கொண்டாட உள்ளதாக திரையுலக புள்ளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அது எஸ்ஆர்எம் யுனிவர்சிட்டி மாணவர்களின் கல்வி பணம் என்பதால், அதை மற்றவர்கள் அபகரிக்க விட மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.