தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ என வெற்றி படங்களில் சிவகார்த்திகேயன் – இமான் இணைந்து பணிப்புரிந்தனர்.
ஆனால் சமீப காலமாக சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசை அமைப்பதை தவிர்த்து வந்தார் இமான். இதனையடுத்து “சிவகார்த்திகேயன் தனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம்.. இனிமேல் இந்த ஜென்மத்தில் இணைந்து பணிபுரிய மாட்டேன்..” என பேசியது கோலிவுட்டை பரபரப்பாக்கியது.
சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக இமானின் முன்னாள் மனைவி மோனிகா கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஒரு படப்பூஜையில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இமான். அப்போது இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளித்து இருந்தார்..
அப்போது அவர் பேசும்போது..
இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒன்றும் இல்லை. மனிதர்களைத் தாண்டி சரி தவறு எல்லாம் இறைவனுக்கு தெரியும் என்பதை நம்புவன் நான். எனவே எல்லாவற்றிற்கும் இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார் என நம்புகிறேன்” என்றார் இமான்.
Imman open talk about Sivakarthikeyan betrayal