சிவகார்த்திகேயன் என் இடத்தை 10 வருஷம் கழிச்சு எடுத்துக்குங்க.; இமான் விவாகரத்தில் தனுஷ் பேச்சு வைரல்

சிவகார்த்திகேயன் என் இடத்தை 10 வருஷம் கழிச்சு எடுத்துக்குங்க.; இமான் விவாகரத்தில் தனுஷ் பேச்சு வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் சிவகார்த்திகேயன் மற்றும் இமான் கூட்டணி அமைந்திருந்தனர்.

இந்த படத்தின் வெற்றிக்கு சூப்பர் ஹிட் பாடல்களும் மிக முக்கிய காரணமாக அமைந்தன .

ஆனால் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்ற படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படங்களுக்கு இமான் இசையமைக்கவில்லை.

இதற்கு பெரிதாக காரணங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்பட்டு வந்து நிலையில் சமீபத்தில் தான் சிவகார்த்திகேயன் ஒரு துரோகி. இனி அவருடன் ஜென்மத்தில் இணைந்து பணி புரிய மாட்டேன். என்னுடைய குழந்தை நலனுக்காக அந்த விஷயத்தை வெளியே சொல்ல முடியாது என தெரிவித்திருந்தார் இமான்.

ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து இதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால் இமானின் முதல் மனைவி மோனிகா இது குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

“சிவகார்த்திகேயன் ஒரு நல்ல நண்பர். இமான் குடும்பத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என நினைத்தவரை துரோகி என்று சொல்லலாமா? எனக் கேட்டிருந்தார்.

இதனால் சிவகார்த்திகேயன் இமேஜ் பெண்கள் மத்தியில் பெருமளவில் சரிவை ஏற்படுத்தியுள்ளது்

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் சில நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனையும் தனுஷையும் வைத்து கலாய்த்து வருகின்றனர்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் பேசிய வீடியோவை அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோவில்…

சிவா அவ்வளவு ஈசியா என் இடத்தை கொடுக்க மாட்டேன். நான் இந்த இடத்திற்கு வருவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். இன்னொரு 10 வருஷம் கழித்து எடுத்துக்குங்க. இப்போ எனக்கு வேணும். இமானுக்கு வாழ்த்துக்கள்” என தனுஷ் பேசியிருந்தார்.

தற்போது இந்த வீடியோ வெளியாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் விஜய் – நடிகை அமலாபால் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் எனக் கூறப்பட்டது. அதுபோல இமான் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் காரணம் எனக் கூறப்படும் நிலையில் இந்த வீடியோவை சிலர் பகிர்ந்து கமெண்ட்களை தெரிவித்து வருவது இங்கே கவனிக்கத்தக்கது.

Imman fans trolls Dhanush and Sivakarthikeyan

நடிகர் மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ சூட்டிங் அப்டேட்

நடிகர் மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் மம்மூட்டி தற்போது இயக்குனர் ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ள மலையாளத் திரைப்படம் ‘பிரமயுகம்’ நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியரிடர் இசையமைத்துள்ளார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘பிரமயுகம்’ திரைப்படம் 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், ‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படப்பிடிப்பு ஒட்டப்பாலம், கொச்சி, அதிரப்பள்ளி போன்ற இடங்களில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘பிரமயுகம்’ படத்தின் படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

Mammootty starrer ‘Bramayugam’ shoot wraps up

முதல் நாளில் 100 கோடியை கடந்த 3வது படம் ‘லியோ’.; முதல் 2 இடங்களை பெற்ற ரஜினி

முதல் நாளில் 100 கோடியை கடந்த 3வது படம் ‘லியோ’.; முதல் 2 இடங்களை பெற்ற ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் நேற்று அக்டோபர் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘லியோ’.

இந்தப் படத்தில் முதல் நாள் வசூல் விவரங்கள் கிடைத்துள்ளன. ஆனால் தயாரிப்பு நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நமக்கு கிடைத்த தகவல்…

தமிழகத்தில் மட்டும் 27.5 கோடியை வசூலித்துள்ளது. கேரளாவில் 10.2 கோடி கர்நாடகாவில் 11.3 கோடி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 14 கோடி.

வட இந்தியா மற்றும் உலக அளவில் 48.2 கோடி என மொத்தம் ரூ 111.5 கோடியை உலக அளவில் ‘லியோ’ முதல் நாளில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் ரஜினி நடித்த ‘கபாலி’ படம் முதல் நாளில் ரூ 105+ கோடியை வசூலித்துள்ளது. மேலும் ரஜினி – ஷங்கர் இணைந்த 2.0 படம் உலக அளவில் ரூ. 118 கோடியை முதல் நாளில் வசூலித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leo Becomes the 3rd tamil movie crossed Rs 100 cr after 2 Rajini movies

‘தளபதி 68’ அப்டேட்.; தென் ஆப்பிரிக்காவில் விஜய் & வெங்கட் பிரபு

‘தளபதி 68’ அப்டேட்.; தென் ஆப்பிரிக்காவில் விஜய் & வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லியோ’.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க லலித் குமார் தயாரித்துள்ளது.

இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார்.

தற்காலிகமாக ‘தளபதி 68’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருவதாகவும் இதற்காக விஜய் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

thalapathy 68 movie shooting in south africa

ஹிந்தியில் சென்சாராகும் தமிழ் படங்கள் கவனத்திற்கு..; விடியல் கொண்டு வந்த விஷால்

ஹிந்தியில் சென்சாராகும் தமிழ் படங்கள் கவனத்திற்கு..; விடியல் கொண்டு வந்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷால் அவர்களால் தமிழ் சினிமாவுக்கு விடியல் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வகித்தும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்தும் தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதே சமயம் இந்தியில் வெளியிடுவதற்க்கு சென்சார் சர்டிபிகேட்டுக்காக மும்பையில் CBFC யில் விண்ணப்பித்த போது அங்கு உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விஷயத்தை நடிகர் விஷால் வன்மையாக கண்டிக்க பாரத பிரதமர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் அவர்களுக்கு தெரியப்படுத்தி வேண்டுகோள் வைத்தார், அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பென்டு செய்து உத்தரவிட்டார்கள்.

மேலும் இது தொடர்பான வழக்கை மும்பை CBCID விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழ் படங்களை இந்தியில் வெளியிட சென்சார் சர்டிபிகேட் வாங்கும் முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.

இதுவரை மும்பையில் மட்டுமே இந்தியில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி தமிழகத்திலேயே பெற்று கொள்ளலாம் என அதிரடியாக அறிவித்துள்ளனர்.

இனி எந்த தயாரிப்பாளரும் தமிழ் திரைப்படங்களுக்கு மும்பை சென்று CBFC யை அனுகவேண்டிய அவசியம் இல்லை

தமிழ் மொழியுடன் சேர்த்து ஏற்கனவே தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளுக்கு தமிழகத்திலேயே சென்சார் சர்டிபிகேட் பெற்று கொள்ளும் வசதி இருந்து வந்த நிலையில் தற்போது இந்தி மொழி ரிலீஸ்க்கும் இந்த முறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஷால் அவர்களால் ஏற்பட்ட இந்த மாற்றம் தமிழ் சினிமாவுக்கு, தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் விஷால் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் கூறி பாராட்டி வருகின்றனர்.

In tamilnadu itself we can censor Hindi dubbed Tamil movies

‘லியோ’ ரிலீஸான முதல் நாளே இப்படியா.? விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

‘லியோ’ ரிலீஸான முதல் நாளே இப்படியா.? விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.

இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க இன்று அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகியது.

தமிழகத்தை பொறுத்தவரை முதல் காட்சி 9:00 மணிக்கு தான் தொடங்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் இன்று காலை விஜய் ரசிகர்களின் ஆராவர்த்ததுடன் தொடங்கி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில், ‘லியோ’ திரைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய்யின் ‘லியோ’ படம் வெளியான முதல் நாளே முழு திரைப்படமும் இணையத்தில் இணையத்தில் வெளியாகி உள்ளதால் சினிமா துறையினர் மற்றும் திரை ஆர்வலர்கள் தங்களது கண்டனத்தை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

‘leo’ film was released on the internet vijay fans shocked

More Articles
Follows