துரோகி சிவகார்த்திகேயன்..; இந்த ஜென்மத்தில் இணைய மாட்டேன் – இமான்

துரோகி சிவகார்த்திகேயன்..; இந்த ஜென்மத்தில் இணைய மாட்டேன் – இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் படங்களில் பாடல்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருக்கும். இவரது படங்களில் சிட்டி சப்ஜெக்ட்டாக இருந்தால் அனிருத் இசை இருக்கும்.. அதுவே சிவகார்த்திகேயன் கிராமத்து நாயகனாக நடித்திருந்தால் அந்த படத்தில் இமான் இசை நிச்சயமாக இருக்கும்.

இப்படி ரசிகர்களை மகிழ்வித்த சிவகார்த்திகேயன் – இமான் கூட்டணி சமீப காலமாக முறிந்து விட்டது. இது யதார்த்தமான ஒரு நிகழ்வாக இருந்திருக்கலாம் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சிவகார்த்திகேயன் பற்றி மனம் திறந்து சமீபத்திய பேட்டிகள் தெரிவித்துள்ளார் இமான்.

அவரது பேட்டியில்.. இனி நானும் சிவகார்த்திகேயனும் இணைந்து பணிபுரிய போவதில்லை.. அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார். அது என்னுடைய பர்சனல் விஷயம். எனவே வெளியே சொல்ல முடியாது.

ஆனால் இனி இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து பணிபுரிய மாட்டேன். ஒருவேளை மறு ஜென்மம் இருந்து நாங்கள் இதே துறையில் இருந்தால் பணிபுரிய வாய்ப்பு இருக்கலாம்.” என்றார் இமான்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக அமைந்தன. சிவகார்த்திகேயன் நடித்த இந்த படங்களுக்கு இசையமைத்தவர் இமான் என்பது குறிப்பிடத்தக்கது.

Reason Behind Sivakarthikeyan and Imman clash

கிரிக்கெட்டில் ஜெய் ஸ்ரீராம்.. விஜய்க்கு குரல் கொடுக்காத சித்தார்த்.. 4 கோடி பட்ஜெட் விஷால் பேச்சு.; அமீர் ஆவேசம்

கிரிக்கெட்டில் ஜெய் ஸ்ரீராம்.. விஜய்க்கு குரல் கொடுக்காத சித்தார்த்.. 4 கோடி பட்ஜெட் விஷால் பேச்சு.; அமீர் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் அருகே ‘தீ லா கஃபே’ என்ற உணவகத்தை நடிகர் அமீர் தொடங்கி உள்ளார். இந்த விழாவிற்கு வந்து ஹோட்டலை திறந்து வைத்தார் நடிகர் விஜய்சேதுபதி.

இந்நிகழ்வில் அவருடன் கரு பழனியப்பன், நடிகர் சாய் தீனா, சஞ்சிதா செட்டி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

விஜய்சேதுபதி

அதில்…

“விஜய் படங்கள் வெளியாகும் போதெல்லாம் பிரச்சனை வருதே. அதற்கு சித்தார்த் குரல் கொடுத்தாரா? .. இலங்கை விவகாரம் தொடர்பாக என்னை கைது செய்தார்களே அப்போது சித்தார்த் குரல் கொடுத்தாரா?

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது ஜெய்ஸ்ரீ ராம்.. ஜெய் ஸ்ரீ ராம் என்று கோசம் எழுப்பியது பற்றி கேட்டபோது.. கிரிக்கெட் போட்டியை காண வருபவர்கள் சாதாரண ஏழை மக்கள் அல்ல. ஒவ்வொரு வகையில் வசதியான மேல் தட்டு மக்களே..

அப்படி இருந்தும் அவர்களிடம் ஏற்பட்டுள்ள அறியாமையை கண்டு என்ன சொல்வது? இது ஒரு அரசாங்க நடத்தும் போட்டி அல்ல. தனியார் நடத்துப் போட்டி தான்.

விஜய்சேதுபதி

இந்தியா கிரிக்கெட் வாரியம்.. பாகிஸ்தான கிரிக்கெட் வாரியம் என தனியார் இந்த போட்டிகளை நடத்துகின்றன. ஆனாலும் அரசு தலையிட வேண்டும் என்றார்.

சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கொடுக்கப்படவில்லை என்று கேள்வி கேட்டனர். அதற்கு அமீர் பதிலளிக்கையில்…

கடலில் நிறைய மீன்கள் உள்ளன.. அவையெல்லாம் ரிலையன்ஸ் என்ற தனியார் மார்க்கெட்டுக்கு மட்டும் வருவதில்லை.. ரோட்டு கடைகளிலும் மீன் விற்கப்படுகிறது.. அது போல குறைந்த பட்ஜெட்டில் சின்ன படங்கள் தயாரிக்கும் போது அவை தியேட்டரை மட்டும் நம்பி இருக்க கூடாது. தற்போது ஓடிடி சந்தை விரிவடைந்துள்ளது.. அவற்றையும் சின்ன படங்கள் குறி வைக்க வேண்டும்.

குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் வேண்டாம் என விஷால் கூறி இருந்தது ஆவேசத்தில் கூறினாரா அல்லது அக்கறையுடன் கூறினாரா தெரியவில்லை. ஆனால் அவர் அக்கறையிடம் கூறியிருப்பார் என்று தெரிகிறது என்றார் அமீர்.

அமீர்

Ameer speech at his new restaurant opening ceremony

எம்ஜிஆர் – சிவாஜி ஸ்டைலில் விஜய்சேதுபதி கெட்டப்.; ஓ இதுக்கு தானா.?

எம்ஜிஆர் – சிவாஜி ஸ்டைலில் விஜய்சேதுபதி கெட்டப்.; ஓ இதுக்கு தானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாயகன் வில்லன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் தன் அடையாளத்தை நிரூபித்து வருபவர் விஜய்சேதுபதி. எனவே தான் இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி சினிமாவிலும் அதிக வாய்ப்புகள் வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இயக்குனர் அமீர் தொடங்கியுள்ள புதிய ஹோட்டலை திறந்து வைக்க வந்திருந்தார் விஜய் சேதுபதி. அப்போது அவரது மீசை ஸ்டைல் வித்தியாசமாக இருந்தது.

1960 களில் எம்ஜிஆர் – சிவாஜி – ஜெமினிஆகியோர் வைத்திருந்த மீசையை போல மீசை வைத்துள்ளார்.

விஜய்சேதுபதி

விஜய் சேதுபதியின் இந்த புதிய மீசை கெட்டப் போட்டோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய்சேதுபதி தற்போது ‘விடுதலை 2’ படத்தில் நடித்து வருகிறார். அதுபோல மிஷ்கின் இயக்கத்திலும் நடிக்கிறார்.

எனவே இந்த மீசை கெட்டப்பாக அந்த படத்திற்காக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதி

Vijay Sethupathi new moustache getup photo goes viral

அரசு அறிவித்த விதிகளை ‘லியோ’ மீறினால் புகாரளிக்க கலெக்டர் ஆர்டர்

அரசு அறிவித்த விதிகளை ‘லியோ’ மீறினால் புகாரளிக்க கலெக்டர் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அக்டோபர் 19ஆம் தேதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்திற்கு தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு…

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வரும் 19 ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 19 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள் ) திரையிட வேண்டும்.

காட்சிகள் காலை 9 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 1.30 மணி வரை மட்டும்.

அரசு அறிவித்த டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் 04286 299137 என்ற எண்ணில் புகார் செய்யலாம்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா அறிவிப்பு.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா

Rules and Regulations for Leo Screening Collector order

சுந்தர்.சி கம்பெனி பட நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு திருமணம்

சுந்தர்.சி கம்பெனி பட நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் படங்களில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் விச்சு விஸ்வநாத்.

இவரது மகள் கோகிலாவின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. பல திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் இத்திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ் திரையுலகில் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் 1990 ல் வெளியான, ‘சந்தனக்காற்று’ படம் மூலம் வில்லனாகத் திரையுலகில் கால்பதித்தவர் விச்சு விஸ்வநாத்.

வில்லனாக மட்டுமல்லாமல், குணச்சித்திரம், காமெடி எனப் பல படங்களில் ஜொலித்தவர், இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் சுந்தர் சி உடைய நெருங்கிய நண்பரான இவர், அவருடன் 38 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். அரண்மனை, கலகலப்பு போன்ற பிரமாண்ட வெற்றிப்படங்களில் இவரது பாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவரது மகள் கோகிலா விஸ்வநாத் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஜெர்மனியில் பணியாற்றி வரும் ஶ்ரீகாந்த் என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணம் வரும் 23 நவம்பர் அன்று சென்னையில் பிரபலமான திருமண மண்டபத்தில், இருவீட்டார் ஆசியுடன் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

திருமண ஏற்பாடுகளை இரு வீட்டு பெற்றோர்களும் மும்முரமாகச் செய்து வருகின்றனர். இத்திருமணத்தில் பல திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இத்திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தவுள்ளனர்.

Actor Vichu Vishwanath daughter marriage

கல்யாணம் பண்ணாம தப்பு பண்ணிட்டேன்.; சுயசரிதையை இயக்கி நடிக்கும் சோனா

கல்யாணம் பண்ணாம தப்பு பண்ணிட்டேன்.; சுயசரிதையை இயக்கி நடிக்கும் சோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சோனா.

தொடர்ந்து கடந்த 20 வருடங்களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமல்லாமல், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தபோது திறமையை வெளிப்படுத்துபவராகவும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார் சோனா.

பத்து வருடங்களுக்கு முன்பே ‘கனிமொழி’ என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய சோனா, தற்போது ஸ்மோக் (Smoke) என்கிற வெப்சீரிஸை இயக்குவதன் மூலம் இயக்குநர் தொப்பியையும் அணிந்துள்ளார்.

ஷார்ட்ஃபிளிக்ஸ் (Shortflix) நிறுவனத்துடன் இணைந்து தனது யுனிக் புரொடக்சன் (Uniq Production ) மூலமாக ஒரு தயாரிப்பாளராகவும் இந்த வெப்சீரிஸை தயாரித்து நடிக்கும் சோனா இதற்கான கதையையும் தானே எழுதியுள்ளார்.

இந்த வெப்சீரிஸ் குறித்த அறிமுக நிகழ்வில் இதுவரையிலான தனது திரையுலக பயணம், தான் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் மற்றும் இந்த வெப்சீரிஸுக்கான கதை உருவான விதம் குறித்து மனம் திறந்து பகிர்ந்து கொண்டார் சோனா.

“2000-ல் என்னுடைய பயணம் தமிழில் தொடங்கியது. அதன்பிறகு 2003-ல் தெலுங்கிலும் நுழைந்தேன். அங்கேயும் என்னுடைய பயணம் நல்லபடியாக சென்றது. பிறகு கொஞ்சநாள் கழித்து சில காரணங்களால் நடிப்பை விட்டு ஒதுங்கி மலேசியா சென்றேன்.

பின்னர் மீண்டும் சிவப்பதிகாரம் படம் மூலம் திரும்பி வந்தேன். அதன்பிறகு மலையாளம். கன்னடம் என மற்ற மொழிகளிலும் அழைப்பு வந்தது.

சில படங்களில் நடித்த பிறகு மீண்டும் ஒரு இடைவெளி.. அதன் பிறகு மீண்டும் சினிமா தான் என முடிவு செய்து தொடர்ந்து பயணித்து வருகிறேன்.

சிவப்பதிகாரம் படத்தில் மன்னார்குடி பளபளக்க என்கிற பாடலுக்கு ஆடிவிட்டு வந்தபோது எனக்கு ரொம்ப பிரமிப்பாக இருந்தது. ஆனால் அதுதான் என் வாழ்க்கையையே மாற்றப் போகிறது என அப்போது தெரியவில்லை.

அதன்பிறகு 4 வருடங்கள் கழித்து தான் அதன் பாதிப்பை உணர்ந்தேன். என்னால் திருமணம் கூட பண்ண முடியவில்லை. நாம் ஏதோ தப்பு பண்ணி விட்டோமே என்று நினைக்க ஆரம்பித்தேன்.

சோனா

என்னை ஒரு கவர்ச்சி நடிகையாகவே தான் பார்க்கிறார்கள்.. அது என்னுடைய தவறுதான். ஆனால் நானும் ஒரு சராசரி பெண் தான்.. என் வீட்டு வேலைகளை நான் தான் செய்கிறேன்.. என்னை கவர்ச்சி நடிகை என சொல்வது ஒரு கட்டத்திற்கு மேல் பிடிக்காமல் போனது. அதனால் அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்களை தேடினேன்.

ஒரு கட்டத்தில் என் மீதான கவர்ச்சி நடிகை என்கிற இமேஜை மாற்றுவதற்காக சின்னத்திரை சீரியல்களில் அம்மா வேடங்களில் கூட நடித்தேன். ஆனாலும் அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

நான் ஏதோ ஒன்றை ரொம்ப நாட்களாக தேடிக் கொண்டே இருந்திருக்கிறேன்.. சினிமாவைப் பொறுத்தவரை நான் நினைக்காத அளவுக்கு நன்றாகவே வாழ்ந்திருக்கிறேன். எல்லாமே எனக்கு கேட்காமலேயே கிடைத்தது. வாழ்க்கையில் எனக்கு வந்த சில பிரச்சனைகள் தானாகவே சரியாகின. சில பிரச்சனைகளை நான் சிரமப்பட்டு போராடி சரி செய்ய வேண்டி இருந்தது.

சில தப்புகளை நாம் பண்ணி இருப்போம். சில தப்புகளை நாம் பண்ணியிருக்க மாட்டோம். ஆனால் இந்த இரண்டினாலும் ஏற்படும் பிரச்சனைகளை நாம் தான் அனுபவிப்போம்.. இத்தனை வருட அனுபவத்தில் தான் உணர்ந்து கொண்ட விஷயங்களில் முக்கியமானது யாரையும் இவர் இப்படித்தான் என எளிதாக கணித்து விடாதீர்கள். யாரையும் கெட்டவன் என உடனடியாக கூறி விடாதீர்கள் அன்றைக்கு அவர்களது சூழல் வேறு மாதிரி இருந்திருக்கலாம். அது அவர்கள் பேச்சிலோ செயலிலோ வெளிப்பட்டிருக்கலாம்.

நானே கூட சிலரை அப்படி தப்பாக நினைத்திருக்கிறேன். 10 வருடத்திற்கு முன்பு சில விஷயங்களுக்காக நான் ஆவேசமாக நடந்து கொண்டதை இப்போது நினைத்து பார்த்தால் அந்த விஷயங்களை இன்னும் கொஞ்சம் மென்மையாக கையாண்டிருக்கலாமோ என்று தான் தோன்றுகிறது. திரை உலகில் ஆண்களின் ஆதிக்கம் அதிகம் தான் என்றாலும் இவ்வளவு ஆண்கள் இல்லை என்றால் நிச்சயமாக இந்த திரை உலகில் என்னால் போராடி நின்று இருக்க முடியாது.

பலரும் எனக்கு பின்புலத்தில் ஆதரவாகவே இருந்திருக்கிறார்கள். அரசியலை தொடர்ந்து கவனித்து வந்தாலும் அதில் ஈடுபடும் அளவிற்கு ஆர்வமில்லை. சில நேரங்களில் ஏன் தான் சினிமாவுக்கு வந்தோமோ என்று நினைப்பேன். ஆனால் சினிமா என்பது ஒரு மாயை.. நம்மை மீண்டும் உள்ளே இழுத்து வந்துவிடும்..

2010ல் குமுதம் இதழுக்காக தேவி மணி சார் ஒரு கவர் ஸ்டோரி செய்தார். அது ஆரம்பித்து அது கிட்டத்தட்ட 20 வாரத்திற்கு மேல் சென்று வரவேற்பு பெற்றது. அப்போதுதான் பத்திரிகையாளர் தேவி மணி இதையே நீங்கள் திரைப்படமாக உருவாக்கினால் என்ன என கேட்டார். அந்த கவர் ஸ்டோரியை புத்தகமாக உருவாக்கியபோது தான், நான் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேனா என ஆச்சரியப்பட்டேன்.

அதன்பின்னர் இந்த கதையை நேரம் கிடைக்கும்போது எல்லாம் டைரியில் எழுத துவங்கினேன். 2017-ல் டைரக்சன் கோர்ஸில் சேர்ந்து ஒளிப்பதிவு உள்ளிட்ட சில நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன்.

எனது நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களிடம் இந்த கதையை சொன்னதுமே எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். அவர்களது ரியாக்ஷனை பார்த்து என்னை கிண்டல் செய்கிறார்களோ எனது தான் நினைத்தேன். ஆனால் அவர்களோ இது ஒரு நடிகையின் கதை மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணும் தங்களுடன் தொடர்பு படுத்தி பார்க்கக்கூடிய படம் என்று பாராட்டி ஊக்கம் கொடுத்தனர். அதன் பிறகு தான் எனக்கென ஒரு டைரக்ஷன் குழுவை உருவாக்கினேன்.

சோனா

எனக்கு நன்கு அறிமுகமான சில இயக்குநர்கள், ஒளிப்பதிவார்களிடம் இதுபற்றி கலந்து விவாதித்தேன். கதை ராவாக இருக்கிறதே என்று சொன்னார்களே தவிர யாரிடமும் இருந்து எந்த எதிர்மறை கருத்துக்களும் வரவில்லை.

இதை எழுதி முடித்ததும் இதை படமாக்க யாரை அணுகுவது என நினைத்த சமயத்தில் தான் எனக்கு ஒரு பெரிய தூணாக ஷார்ட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கை கொடுத்தது. இது ஒரு இயக்குநராக கிடைத்த வாய்ப்பு என்பது சொல்வதைவிட என்னுடைய கனவை, கதையை சொல்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் என்றே சொல்வேன்.

இத்தனை வருடங்களில் நான்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அத்தனை பட இயக்குநர்களுக்கும் இந்த வெப்சீரிஸை அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஒரு நடிகையாக நான் அடுத்த கட்டத்திற்கு வளர தொடர்ந்து ஆதரவு தந்த நீங்கள் ஒரு இயக்குனராக வளரவும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள்.

இந்த வெப்சீரிஸை பல சீசன்களாக எடுக்கும் திட்டம் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு விதமான நிகழ்வுகளை கதையாக உருவாக்கி இருக்கிறேன் இந்த முதல் சீசனில் எத்தனை எபிசோடுகள் எடுக்கப் போகிறேன் என திட்டமிடவில்லை. ஏதோ ஒரு காலகட்டத்தில் நடிகைகளின் கதைகளை யாராவது ஒருவர் படமாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் என் கதையை அப்படி வேறு யாரும் சொல்லக்கூடாது என்பதால் நானே சொல்லி விடுகிறேன். ஆனால் இதில் 99 சதவீதம் உண்மையைத்தான் பேசப்போகிறேன். அதற்காக நீங்கள் அதற்காக என்னை கழுவி ஊற்றினாலும் பரவாயில்லை. இதில் நிஜமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவற்றின் பெயர்களை எல்லாமே மாற்றி இருக்கிறேன்.

இன்னும் ஒரு ஹைலைட் என்னவென்றால் இந்த படத்தில் சனா என்கிற என்னுடைய கதாபாத்திரத்தின் பல்வேறு காலகட்ட தோற்றங்களில் நடிப்பதற்காக ஒவ்வொரு வயதிலும் என்னைப் போன்ற தோற்றம் போன்ற ஐந்து சனாக்களை தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறேன்.

இந்த கதை ஒரு உணர்ச்சிகரமான பயணமாக இருக்கும்.. இதை திரைப்படமாக எடுக்கலாமே என பலர் கேட்கின்றனர். இது நல்ல கதையாக இருந்தாலும் ராவாக இருப்பதால் சில பேருக்கு பிடிக்காது. ஆனால் ஓடிடியில் இதை சுதந்திரமாக உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது. என்னுடைய படத்திற்கு நானே சான்றிதழ் கொடுப்பது என்றால் யு/ஏ சான்றிதழ் தரும் அளவிற்கு இந்த தொடர் இருக்கும்.

இந்த வெப்சீரிஸ் வெளியாகும்போது ‘தி பிகினிங் ஆப் எண்ட்’ (The Begining Of End) என ஒரு டேக்லைனை சேர்க்க இருக்கிறேன். அதாவது ஒரு கவர்ச்சி நடிகையின் முடிவு என்பதுதான் அதற்கு அர்த்தம். நாளை பூஜையுடன் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. சென்னை மற்றும் கேரளாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ஷார்ட்ஃபிலிக்ஸ் துணையுடன் இதை நானே தயாரிக்கிறேன்.

மலையாளத்திலும் எனக்கு வரவேற்பு இருப்பதால் அங்கே மொழிமாற்றம் செய்து வெளியிடும் எண்ணமும் இருக்கிறது. படத்தை இயக்கிக்கொண்டே நடிப்பது கடினம் போலத்தான் தெரியும். கூடுதலாக எனக்கு தயாரிப்பு சுமையும் சேர்ந்து இருக்கிறது. ஆனாலும் நீங்கள் நினைப்பது போல இது எனக்கு கடினமாக இல்லை.

இந்த வெப்சீரிஸில் கதாநாயகனாக முகேஷ் கண்ணா நடிக்கிறார். ஒளிப்பதிவாளராக கபில் ராய் மற்றும் கலை இயக்குனராக பாலா ஆகியோர் இணைந்துள்ளனர். புதியவர் ஒருவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்த உள்ளேன். மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் அடுத்தடுத்து அறிவிக்கப்படும்” என்று கூறினார் சோனா.

சோனா

ACTRESS SONA HEIDEN SMOKE MOVIE biopic

SET – 1 https://sendgb.com/ySk2f3g8n0V

SET – 2 https://sendgb.com/OsSp8GrKTUy

More Articles
Follows