தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு வளர்ந்து வரும் நடிகர், முன்னணி நடிகர்களின் வரிசைக்கு வர குறைந்தது 10 வருடங்களாவது ஆகும்.
ஆனால் ஐந்து வருடங்களில் அதுவும் பத்தே படங்களில் அந்த வரிசையில் இடம் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன்.
இவரது ரெமோ படத்தின் மாபெரும் வெற்றி கோலிவுட்டில் பல ஆச்சரியங்களை எழுப்பியுள்ளது.
இந்த வெற்றிக்கு இவரது 3 பாலிசிகளே காரணம் என கூறப்படுகிறது.
அவை…
- ஒரு நேரத்தில் ஒரு படத்தை ஒப்புக் கொண்டு அதில் முழு கவனத்தை கொடுத்து, அதற்கான புரோமோஷனில் ஈடுப்படுகிறார். அதே சமயம், சம்பளத்தை இரண்டாம் பட்சமாக வைத்துக் கொண்டு தனக்கான கதையை தேர்ந்தெடுத்து வருவது.
- இவரது படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை பெரும்பாலும் தவிர்த்தே வருகிறார்.
- குழந்தைகள் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளை தவிர்த்து விடுகிறாராம்.