தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரெமோ படத்தின் நன்றி விழா சந்திப்பில் சிவகார்த்திகேயன் கண்ணீல் மல்க உருக்கமாக பேசினார்.
இதுகுறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பதாவது…
சிவகார்த்திகேயன் அழுத காரணம் அறிய விசாரித்தேன்.
‘வேந்தர் பிலிம்ஸ்’ மதன் மற்றும் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ மதன், இருவரும் சிவகார்த்திகேயனிடம் புதுப்படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்து இருப்பதாக சொல்கின்றனர்.
ஆனால் சிவாவோ இருவரிடம் இருந்து அட்வான்ஸ் பணம் வாங்கவில்லை’ என்று மறுக்கிறார்.
ஆனால், ‘எஸ்கேப்’ ஆரிட்டிஸ்ட் மதனோ தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொல்கின்றார்.
இரண்டு பேரையும் நேரிடையாக அழைத்து வைத்து பேசினால்தான் உண்மை நிலை தெரியவரும்.
இந்த மன உளைச்சல் காரணமாக சிவகார்த்திகேயன் அழுது இருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரு சிலரோ, சில நடிகர்கள்தான் காரணம் என்கின்றனர்.
ஆயிரம் பேர் பேசினாலும் சிவகார்த்திகேயனே சொன்னால் மட்டுமே இதற்கான விடை கிடைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.