சுதந்திர தினத்தை குறிவைக்கும் காலா ரஜினிகாந்த்

சுதந்திர தினத்தை குறிவைக்கும் காலா ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala posterஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 3டி-யில் உருவாகியுள்ள படம் ‘2.0’.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

இப்படத்தை ஏப்ரல் மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனையடுத்து ரஜினி நடிப்பில் உருவாகி காத்திருக்கும் காலா படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.

அண்மையில் இதன் டப்பிங் ரஜினி முடித்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதியுடன் இணையும் டம்ப்ஸ்மாஷ் மிருணாளினி

விஜய்சேதுபதியுடன் இணையும் டம்ப்ஸ்மாஷ் மிருணாளினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi and Mirunalini‘ஆரண்ய காண்டம்’ வெளியான 6 வருடத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.

இதில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இதில் விஜய் சேதுபதி போட்டிருக்கும் பெண் வேஷம் வைரல் ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில், இதில்
டப்ஸ்மாஷ் மூலம் புகழடைந்த மிருணாளினி நடிக்கவிருக்கிறாராம்.

ஏற்கனவே ஆங்கில இதழ் ஒன்றின் அட்டைப்படத்திலும் மிருணாளினி தோன்றியுள்ளார்.

மேலும் வரவிருக்கும் ‘நகல்’ என்ற திரைப்படத்திலும் இவர் நாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டையே கலங்கடித்த கதையில் கதிர்; பூஜையுடன் தொடங்கியது!

நாட்டையே கலங்கடித்த கதையில் கதிர்; பூஜையுடன் தொடங்கியது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kathirs next project started with Poojaகதிர் நடிக்கும் புதிய படம் ! இன்று தொடங்கியது

கதிர் நடிக்கும் புதிய படம் இன்று பிரசாத் லேப் பிள்ளையார் கோவிலில் தொடங்கியது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.பாரிவள்ளல் தயாரிக்கிறார்.

அறிமுக இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார்.. இவர் ‘மன்னார் வளைகுடா’ இயக்கிய பிரபாகரனின் உதவி இயக்குநர்.

ஒளிப்பதிவு பாண்டி அருணாச்சலம். இவர் ‘உறுதி கொள் ‘படத்தின் ஒளிப்பதிவாளர். இவருடன் இன்னொருவர் சரவணன் ஜெகதீனும் இணைந்துள்ளார்.

இசை நவீன் சங்கர் . இவர் ‘விசிறி’ படத்தின் இசையமைப்பாளர் .பாடல்கள் ‘சண்டிவீரன்’ புகழ் மணி அமுதன். கலை – தியாகராஜன்.நிர்வாகத் தயாரிப்பு – எம்.சேது பாண்டியன்.

படம் பற்றி இயக்குநர் கூறும்போது…

” இது கிராமத்திலிருந்து நகரம் செல்கிற கதை.

கிராமத்திலிருக்கும் வாலிபனான நாயகன் ஒரு பெரிய பிரச்சினைக்காக சென்னை செல்ல வேண்டியிருக்கிறது.

நாயகன் அந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொண்டான் முடிவு என்ன என்பதே கதை. அது என்ன பிரச்சினை? சமீபத்தில் நாட்டையே கலங்க வைத்த பிரச்சினைதான் அது.

இப்படத்தின் கதையை உருவாக்கி அதற்கான சரியான நாயகன் தேடிய போது வெகு பொருத்தமாகக் கிடைத்தவர்தான் கதிர்.

அவர் கதை பிடித்து சம்மதித்தவுடன் எங்களுக்கு முழு திருப்தி.

கதிருக்கு ‘மதயானைக் கூட்டம்’ , ‘கிருமி ‘ படங்களுக்குப் பிறகு இப்படம் பெயர் சொல்லும் ஒன்றாக இருக்கும்.

தஞ்சைப் பகுதியில் தொடங்கும் படப்பிடிப்பு கடம்பூர் மலைப் பகுதி, சென்னை என்று நகர இருக்கிறது.

‘பென்ஹர்’ , ‘உழவன் மகன்’ படங்களுக்குப் பிறகு இப்படத்தில் வரும் ரேக்ளா வண்டி ரேஸ் பேசப்படும் ” என்றார் இயக்குநர் நம்பிக்கையுடன்.

Actor Kathirs next project started with Pooja

kathir next movie

எப்படியாவது வாருங்கள்; மாணவர்களை அரசியலுக்கு அழைக்கும் கமல்!

எப்படியாவது வாருங்கள்; மாணவர்களை அரசியலுக்கு அழைக்கும் கமல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan invites Students to Politicsசென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் கமல் கலந்துக் கொண்டார்.

அப்போது மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது…

மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நாட்டு நடப்புகளை மாணவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அது உங்கள் கடமை.

நீங்கள் என்னுடன் வாருங்கள் என்று சொல்லவில்லை, எப்படியாவது வாருங்கள் என்று சொல்கிறேன்.

நான் தலைவனாக இங்கு வரவில்லை, தலைவர்களை சந்திக்கவே வந்திருக்கிறேன். நீங்கள் தான் நான் என்பதை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது அதற்காக தான் இங்கு வந்தேன்.

நீங்கள் தான் நான். தரமான கல்வி கிடைக்கிறதா என்பதை மாணவர்கள் கவனிக்க வேண்டும். வீட்டில் தண்ணீர் வராததற்கு என்ன காரணம் என்பதையும் மாணவர்கள் கவனிக்க வேண்டும்.

அமைதியாக இருந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய மகாத்மா காந்தி எனக்கு பிடித்த அரசியல் தலைவர். இவர் தவிர அம்பேத்கர், எம்ஜிஆர்., பெரியார், கருணாநிதி என பல அரசியல் தலைவர்களை பிடிக்கும்.

சும்மா இருங்கள், பேசாதீர்கள் என்பது ஜனநாயமா…? இன்றைக்கு தேவர் மகன், அன்பே சிவம் போன்ற படங்களை எடுக்க முடியாது.

பத்மாவத் படத்தின் பெயரால் மாணவர்கள் சென்ற பஸ் தாக்கப்படுகிறது. ஊழலற்ற அரசியல் என்பது சாத்தியமில்லை. சாத்தியம் என்பது சொல்ல அல்ல செயல். நாளை நமதே என்பது உங்களையும் சேர்த்து தான்.” என்று பேசினார்.

Kamalhassan invites Students to Politics

இப்போ ரஜினி(காந்தி); அரசியலில் காலா… : ராஜூ மகாலிங்கம்

இப்போ ரஜினி(காந்தி); அரசியலில் காலா… : ராஜூ மகாலிங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raju Mahalingam speech about Rajini and his political movementsதூத்துக்குடியில் மாவட்ட ரஜினிகாந்த் மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ரஜினிகாந்தின் நண்பர் ராஜூ மகாலிங்கம் அவர்கள் பேசியதாவது…

“ஒழுக்கம், ஒத்துழைப்பு, கட்டுப்பாடு என்ற கொள்கையுடன் செயல்பட இருக்கிறது நம் கட்சி. நம் கட்சியின் உறுப்பினர்கள் இந்தக் கொள்கைக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். பதவியை விட கட்சிக்காக உழைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளுக்கு கட்டுப்பட வேண்டும். நம்பிக்கை இல்லாதவர்கள் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு அரசியல் செய்ய வேண்டும். நமது அரசியல் நேர்மையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும். இதுதான் நம் தலைவர் ரஜினி சொல்லும் “ஆன்மீக அரசியல்” ஆகும்.

நமக்குள் சண்டை சச்சரவுகள் வருமா? என பலரும் கவனித்து வருகிறார்கள். அதற்கு இடம் கொடுக்க கூடாது.

எல்லாப் பிரச்னைகளையும் தலைவர் “காந்தி”யைப் போல கையாள மாட்டார்.

பதிலடி கொடுக்க வேண்டிய சில பிரச்சினைகளை “காலா”வைப் போல கையாள்வார்.

ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்தாரோ அப்போதே அடுத்த முதலமைச்சர் ரஜினிதான் என பெண்கள் முடிவு செய்துவிட்டனர்.

அனைவருக்கும் பிடித்தமான முதல்வராக ரஜினி செயல்படுவார்.” என்றார்.

Raju Mahalingam speech about Rajini and his political movements

மற்ற மாநிலத்தவர்கள் தமிழகத்தை போற்ற வேண்டும்…: ரஜினி பேச்சு

மற்ற மாநிலத்தவர்கள் தமிழகத்தை போற்ற வேண்டும்…: ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth new video speech about his political partyதுாத்துக்குடி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த நிகழ்வின் போது ரஜினி பேசிய வீடியோ பதிவு ஒன்றை ஒளிப்பரப்பினார்கள்.

அதில் உள்ளதாவது…

ஆண்டவன் அளித்துள்ள வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம்.

இதில் சுயநலம் இருக்கக்கூடாது. பொது நலம் மட்டுமே இருக்க வேண்டும்.

அதற்காக குடும்பத்தை விட்டு அரசியலுக்கு வரவேண்டும் என நான் சொல்லவில்லை. அவர்களையும் கவனிக்க வேண்டும்.

மற்ற மாநிலத்தவர்கள் நம்மை பார்த்து போற்ற வேண்டும். அப்படியொரு அரசியல் மாற்றத்தை நாம் உருவாக்க வேண்டும்.

அது ஆண்டவன் அருளால், உங்கள் செயலால் நிச்சயம் நிறைவேறனும்.” என்று அந்த பதிவில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

ஆலோசனைக் கூட்டம் துவங்குவதற்கு முன் ஒகி புயலில் மாயமான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அளிக்கப்பட்டது.

Rajinikanth new video speech about his political party

More Articles
Follows